Skip to main content

கபிலன் வைரமுத்துவின் புதிய நூல்! 

Published on 23/09/2020 | Edited on 23/09/2020
ambarathuni

 

 

கவிஞர் வைரமுத்துவின் மகன் கபிலன் வைரமுத்து, கவிஞர், பாடலாசிரியர், எழுத்தாளர் என சினிமா, காட்சி ஊடகத்தில் செயல்பட்டு வருகிறார். 

 

பல வெற்றி பாடல்களை எழுதியுள்ள கபிலன், 'கவண்', 'விவேகம்' உள்ளிட்ட திரைப்படங்களின் கதை உருவாக்கத்திலும் பங்காற்றியுள்ளார். சினிமாவில் தொடர்ந்து பணியாற்றி வந்தாலும் அவ்வப்போது புத்தகங்கள் எழுதி வெளியிட்டு வருகிறார். 

 

இவரது 'உயிர்ச்சொல்', 'மெய்நிகரி' ஆகிய நாவல்கள் பரவலான கவனத்தை பெற்றவை. தற்போது, கபிலன் வைரமுத்து எழுதியுள்ள சிறுகதை தொகுதியின் பெயர் 'அம்பறாத்தூணி'. இந்த நூலின் தலைப்பையும், அட்டைப்படத்தையும், அறிமுகம் செய்யும் நிகழ்படத்தையும் இயக்குனர் கே.வி.ஆனந்த் வெளியிட்டார்.

 

 

சார்ந்த செய்திகள்