Advertisment

"அவரது குரலில் உள்ள மேஜிக் ஈடு இணையற்றது" - இயக்குனர் கார்த்திக் நரேன் உருக்கம்!

faga

கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துகொண்டே வருகிறது. இந்தியாவில் பல பிரபலங்களும் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மையில் பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் உள்ளார். இதையடுத்து அவர் பூரண நலம்பெற வேண்டி பல்வேறு பிரபலங்கள் பிரார்த்தனை செய்வதாக சமூகவலைதளங்களில் பதிவிட்டு வந்தார்கள். அவரது மகன் எஸ்.பி.பி. சரண் தினமும் எஸ்.பி.பியின் உடல்நலம் குறித்து வீடியோ பதிவுகள் மூலம் தெரிவித்து வரும் நிலையில், இயக்குனர் பாரதிராஜா எஸ்.பி.பி. உடல்நலம் குணமாக வேண்டி நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு எஸ்.பி.பி பாடலை ஒலிக்கச்செய்து கூட்டு பிரார்த்தனைக்கு அழைப்பு விடுத்தார்.

Advertisment

இதை ஆதரிக்கும் வகையில் திரைப்பிரபலங்கள் பலரும் கூட்டு பிரார்த்தனையில் கலந்துகொண்டனர். மேலும் ரசிகர்கள் மற்றும் சில பிரபலங்கள் வீடுகள், கோயில்கள் என அனைத்திலுமே எஸ்.பி.பிக்காக பிரார்த்தனை செய்தார்கள். இந்நிலையில் எஸ்.பி.பி. குணமாக வேண்டி துருவங்கள் பதினாறு, நரகாசூரன், மாஃபியா உள்ளிட்ட படங்களின் இயக்குனர் கார்த்திக் நரேன் எஸ்.பி.பியின் 'கல்யாண மாலை' பாடலை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில்..."எஸ்.பி.பி. சாரின் விளக்கக்காட்சிகளில் எனக்கு மிகவும் பிடித்த காட்சிகளில் ஒன்று ‘கல்யாண மாலை’ பாடல். அவரது குரலில் உள்ள மேஜிக் ஈடு இணையற்றது, நம் ஆன்மாவுக்கு உணவளிப்பதாக உள்ளது. எப்படியோ இந்த சிறிய காட்சி இப்போது எனக்கு மிகவும் தனிப்பட்டதாக உணர்கிறேன். நீங்கள் விரைவாக மீண்டு வர சொர்க்கத்தில் உள்ளவர்களிடம் பிரார்த்திக்கிறேன் சார். விரைவில் குணமடையுங்கள் எஸ்.பி.பி. சார்" என கூறியுள்ளார்.

Advertisment

spb karthick naren
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe