Skip to main content

"எங்கள் நைனாவின் மறைவு உலகத்தமிழ் வாசகர்களின் பேரிழப்பு" - கி.ரா -வுக்கு காளி வெங்கட் இரங்கல்!

Published on 18/05/2021 | Edited on 18/05/2021
vsdgsdgsd

 

தமிழ் இலக்கிய பேராளுமை, கரிசல் மண் எழுத்துக்குச் சொந்தக்காரர் சாகித்ய அகாடமி விருதுபெற்ற எழுத்தாளர், கி.ரா என்று அன்பாக அழைக்கப்படும் கி. ராஜநாராயணன் அவர்கள் நேற்று (17.05.2021) இரவு காலமானார். ‘கோபல்ல கிராமம்’, ‘கோபல்ல கிராமத்து மக்கள்’, ‘கரிசல்காட்டு கடுதாசி’, ‘வட்டார வழக்கு சொல்லகராதி’ போன்ற காலத்தால் அழியாத படைப்புகளைத் தந்த கி. ராஜநாராயணன், அண்மைக்காலமாக முதுமை காரணமாக சிகிச்சையிலிருந்த நிலையில், தமது 99வது வயதில் மறைந்தார். இவரது மறைவுக்குப் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்துவரும் நிலையில், நடிகர் காளி வெங்கட் இரங்கல் தெரிவித்து சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில்...

 

fddfgb

 

"எங்கள் நிலப்பரப்பையும்,வட்டாரவழக்கையும், தன் எழுத்தின் மூலம் உலகறியச் செய்த எங்கள் நைனா முதுபெரும் எழுத்தாசான் “கி.ரா” அவர்களின் மறைவு உலகத்தமிழ் வாசகர்களின் பேரிழப்பு #ஆழ்ந்தஇரங்கல்" என பதிவிட்டுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்