நெல்லை ரசிகர்களின் சந்திப்பிற்கிடையே தன் அடுத்த படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டு அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்திய நடிகர் ரஜினி தற்போது மேலும் ஒரு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். 2.0 படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து VFX வேலைகள் முடிந்து படம் தயாராக நேரம் தேவைப்படுவதால் அவருடைய அடுத்த படமான காலா ஏப்ரலில் வெளியாகும் என சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் காலா படத்தின் டீஸர் வரும் மார்ச் 1ம் தேதி வெளியாக இருப்பதாக தனுஷ் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். அவர் டுவிட்டரில் பதிவிட்டுருப்பதாவது....( "The news you have all been waiting for. #kaala TEASER FROM MARCH 1ST. Get ready to be in awe of our one and only Superstar’s charisma and style. “ இந்த கரிகாலனோட முழு ரவுடித்தனத்த பாத்தது இல்ல..ல ..? பாப்பீங்க!!!" ) என்றார். இந்த செய்தியால் ரசிகர் பெரு மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
வெளியானது காலா பட டீசர் ரிலீஸ் தேதி
சார்ந்த செய்திகள்
Next Story
இவன்லாம் ஹீரோவான்னு சிரிச்சேன்
Next Story
ரஜினி ரசிகர்கள் மோதல் வேன்கள் கண்ணாடி உடைப்பு!!
ரஜினியின் காலா படம் ரிலீஸ் என்றது முதல் தினம் தினம் பரபரப்புதான்.
நேற்று தமிழகத்தில் காலா படம் திரையிடப்பட்ட திரையரங்குகளில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. புதுக்கோட்டை ஆர்.கே.பி திரையரங்கில் காலா படம் திரையிடப்பட்டது. கந்தர்வகோட்டை பகுதியில் இருந்து இரு வேன்களில் ரசிகர்கள் காலா பார்க்க வந்துள்ளனர். அப்போது திரையரங்கிற்குள் மற்றொரு குழு ரசிகர்களுடன் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அதனால் உள்ளூர் ரசிகர்கள் பாதியிலேயே வெளியேறிவிட்டனர்.
இந்த நிலையில் படம் முடிந்து கந்தர்வகோட்டை ரசிகர்கள் தாங்கள் வந்த வேன்களில் ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்த போது புதுக்கோட்டை நகரைக் கடந்து மச்சுவாடி பகுதியில் தயாராக நின்ற ஒரு கும்பல் ரஜினி ரசிகர்கள் வந்த வேன்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் இரு வேன் கண்ணாடிகளும் உடைந்து சிதறியது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில் தாக்குதல் நடத்திய மர்ம கும்பல் தப்பி சென்றுவிட்டனர். சம்பவம் குறித்து போலிசார் விசாரனை செய்து வருகின்றனர்.