பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்திருக்கும் 'காலா' படம் வரும் ஏப்ரல் 27ம் தேதி என்று முன்னர் அறிவித்திருந்த தனுஷ் பின்னர் டிஜிட்டல் கட்டணங்களை குறைக்க வலியுறுத்தி கடந்த ஒன்றரை மாதங்களுக்கு மேலாக நடைபெற்று முடிந்த சினிமா ஸ்ட்ரைக் காரணமாகவும், கடந்த மாதம் வெளியாக வேண்டிய புதிய படங்கள் வரிசையாக அடுத்தடுத்து வெளியாக இருப்பதாலும் 'காலா' படம் வருகிற ஜூன் 7ஆம் தேதி வெளியாகும் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து இப்படத்திற்கான இறுதிக்கட்ட பணிகள் முழு வீச்சில் நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில் இப்படத்தின் பாடல்களை வரும் மே 9ம் தேதி வெளியிட இருப்பதாக தனுஷ் சில நாட்களுக்கு முன் அறிவித்திருந்தார். இந்நிலையில், இப்படத்தில் வரும் ‘செம வெயிட்’ என்ற சிங்கிள் பாடலை மே 1ஆம் தேதி உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு நாளை மாலை 7 மணிக்கு வெளியிட இருப்பதாக தனுஷ் தற்போது அறிவித்திருக்கிறார். இந்த இன்ப அதிர்ச்சி காரணமாக ரசிகர்கள் குதூகலத்தில் உள்ளனர்.
அஜித் பிறந்தநாளில் ரஜினி ரசிகர்களுக்கு ட்ரீட்
சார்ந்த செய்திகள்
Next Story
'ஒரு மாதத்துக்கு தமிழ்நாடு திரும்ப வாய்ப்பு இல்லை' - ரஜினிகாந்த்
பல்வேறு சர்ச்சைகளுக்கு இடையே கடந்த ஜூன் 7ஆம் தேதி வெளியான ரஜினியின் 'காலா' படம் உலகமெங்கும் வெற்றிகரமாக ஓடி வசூல் சாதனைகள் நிகழ்த்தி வருகிறது. இதில் ரஜினி நில உரிமைக்காக போராடுபவராக நடித்துள்ளார். இதையடுத்து ரஜினி தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார். இதற்காக இவர் டார்ஜிலிங் சென்று அங்கு படபிடிப்பில் கலந்துகொண்டு நடித்து வருகிறார். இந்நிலையில் படப்பிடிப்பில் இருந்த ரஜினி அங்குள்ள செய்தியாளர்களிடம் காலா குறித்தும், இப்படத்தை குறித்தும் பேசியபோது... "காலா படம் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. நாடு முழுக்க பெரும் வரவேற்புடன் ஓடிக்கொண்டிருக்கிறது. கர்நாடகாவிலும் அந்த மாநில அரசின் ஒத்துழைப்போடு நன்றாக ஓடுகிறது" என்றார். மேலும் தான் ஒரு மாதத்துக்கு தமிழ்நாடு திரும்ப வாய்ப்பு இல்லை என்றும் டார்ஜிலிங் மற்றும் அதன் சுற்று பகுதிகளில் நடைபெறும் படப்பிடிப்பை முடித்த பிறகே சென்னை திரும்ப இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
Next Story
'காலா' - விற்கு அதிக கட்டணம் வசூலித்த தியேட்டர்கள் மீது நடவடிக்கை
சூப்பர்ஸ்டார் ரஜினி நடிப்பில் கடந்த 7ஆம் தேதி உலகமெங்கும் வெளியான 'காலா' படம் மாபெரும் வெற்றிபெற்று வசூல் சாதனை நிகழ்த்தி வருகிறது. இதற்கிடையே 'காலா' படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக கூறி பொதுநல வழக்கு ஒன்று தொடரப்பட்டது. இதையடுத்து தியேட்டர்களில் டிக்கெட்டுகள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதை தடுப்பதற்காக தீவிரமாக கண்காணிக்கப்பட்ட நிலையில் தற்போது இந்த வழக்கு விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, காலா படத்துக்கு கூடுதல் கட்டணம், பார்க்கிங் வசூலிக்கும் திரையரங்குகள் மீது நடவடிக்கை எடுக்கும்படி தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியது. மேலும் நடவடிக்கை எடுக்க தவறும் பட்சத்தில் சட்ட அமலாக்க அமைப்புகள் மீது மக்கள் நம்பிக்கை இழந்து விடுவார்கள் என்று நீதிபதிகள் எச்சரித்து உள்ளனர். இதனால் அதிக கட்டணம் வசூலித்த தியேட்டர்கள் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.