Skip to main content

'இதற்கு மேல் எது சொன்னாலும் சஸ்பென்ஸ் போய் விடும்' - சீட்டின் நுனியில் அமர்த்தும் k13 டீசர் ! 

Published on 19/03/2019 | Edited on 19/03/2019

அருள்நிதி மற்றும் ஸ்ரத்தா ஸ்ரீநாத் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கும் இயக்குனர் பரத் நீலகண்டனின் 'K13' பட டீசர் நேற்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 84 விநாடிகள் ஓடும் இந்த டீசர் பார்வையாளர்களிடையே படம் எப்படி இருக்கும் என்ற ஆர்வத்தையும் தூண்டியிருக்கிறது.மேலும் இது குறித்து இயக்குனர் பரத் கூறும்போது...

 

k13

 

"டீசரை இறுதி வடிவத்துக்கு கொண்டு வர மிகவும் சவாலாக இருந்தது. வேறு பல பதிப்புகளையும் தயார் செய்தோம். என் குழுவுக்கு நன்றி, குறிப்பாக இதை கிரியேட்டிவாக அணுகிய படத்தொகுப்பாளர் ரூபனுக்கு நன்றி. இதற்கு மேல் எதையும் சொன்னால் சஸ்பென்ஸ் போய் விடும். இது ஒரு திரில்லர் படம் தான், மற்றவற்றை பார்வையாளர்களே பெரிய திரைகளில் பார்த்து அனுபவிக்கட்டும். நாங்கள் இந்த டீசர் வெறும் ஒரு முன்னோட்டமாக மட்டும் இருப்பதை விரும்பவில்லை, மாறாக கதாபாத்திரங்களை பற்றி சொல்ல முயற்சித்தோம். இப்போதெல்லாம் பார்வையாளர்கள் மற்றும் திரைப்பட ரசிகர்கள் படம் பார்க்கும் முன்பு சின்ன கதாபாத்திரங்களை கூட தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறார்கள். எனவே நாங்கள் இதை முயன்றோம், இப்போது மக்கள் அந்த கதாபாத்திரங்களை அடையாளம் கண்டு கொள்வது மகிழ்ச்சியளிக்கிறது" என்றார். SP சினிமாஸ் சார்பில் SP ஷங்கர் மற்றும் சாந்த பிரியா தயாரிக்கின்றனர். இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் மற்றும் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்த படத்துக்கு சாம் சிஎஸ் இசையமைக்கிறார். 

 

 

சார்ந்த செய்திகள்