Skip to main content

சென்சார் போர்ட பாத்து கேக்குறேன், இதை உங்களால் தடுக்க முடியுமா..? - தயாரிப்பாளர் கே.ராஜன் ஆவேசம்!

Published on 10/09/2019 | Edited on 10/09/2019

பியாண்ட் எண்டர்டெயின்மெண்ட் மற்றும் 8 பாய்ண்ட் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் டி.மது, பி.அருமைச்சந்திரன் தயாரித்து, டி. ரங்கநாதன் இயக்கியுள்ள படம் 'ப்ளூவேல்'. பூர்ணா முன்னணி கதாபத்திரத்தில் நடிக்கும் இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட தயாரிப்பாளர் கே.ராஜன் சென்சார் குறித்து பேசியபோது....

 

k rajan

 

 

''யூடியூபில் பாலியல் ரீதியான வக்கிரமான விஷயங்கள் வெளிப்படையாக காண்பிக்கப்படுகிறது. நான் சென்சார் போர்டை பார்த்து கேள்வி கேட்கிறேன். நாங்கள் திரைப்படங்கள் எடுக்கும்போது கொஞ்சம் வரம்பு மீறினாலும் அதை வெட்டு, இதை வெட்டு என்று சொல்கிறீர்கள். அதையே ஏன் உங்களால் யூடியூபில் நடக்கும் அநியாங்களுக்கும் , டெலிவிஷன் நிகழ்ச்சிகளில் நடிக்கும் அக்கிரமத்திற்கும் செய்ய முடியவில்லை...? சமுதாயத்தை இவையெல்லாம் அழித்துக்கொண்டிருக்கின்றன. இந்த அழிவில் இருந்து சமுதாயத்தை காக்கவேண்டியது நம் கடமை'' என்றார். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

எனக்கு இந்த படம் மேல் நம்பிக்கையே இல்லை..! - பூர்ணா 

Published on 10/09/2019 | Edited on 10/09/2019

பியாண்ட் எண்டர்டெயின்மெண்ட் மற்றும் 8 பாய்ண்ட் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் டி.மது, பி.அருமைச்சந்திரன் தயாரித்து, டி. ரங்கநாதன் இயக்கியுள்ள படம் 'ப்ளூவேல்'. பூர்ணா முன்னணி கதாபத்திரத்தில் நடிக்கும் இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட நடிகை பூர்ணா இப்பட அனுபவம் குறித்து பேசியபோது....

 

poorna

 

 

''முதலில் நான் இயக்குனரிடமும், ஒளிப்பதிவாளரிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறன். ஏனென்றால், என்னை முதலில் இந்த படத்தில் நடிக்க கூப்பிட்டபோது இப்படக்குழுவினர் அனைவரும் புதுமுகமாக இருக்கிறார்களே, இது நமக்கு ஒத்துவருமா என்று யோசித்தேன். அதுபோக ப்ளுவேல் கேம் குறித்தும் எனக்கு தெரியாது. அதுவும் இது சின்ன பட்ஜெட் படம் வேறு. அதனால் ஒரு தயக்கத்துடனே படப்பிடிப்பிற்கு சென்றேன். இன்னும் சொல்லப்போனால் நான் இரண்டாம் நாள் படப்பிடிப்பிற்கு செல்லவே இல்லை. இந்த படம் மேல் எனக்கு நம்பிக்கையே இல்லாததால் ஏதோ ஒரு கலக்கம் என்னுள் இருந்துகொண்டே இருந்தது. பிறகு இயக்குனரும், ஒளிப்பதிவாளரும் என்னை நேரில் சந்தித்து கன்வின்ஸ் செய்து படப்பிடிப்பிற்கு அழைத்து சென்றனர். அதன்பின் இப்படக்குழு எனக்கு ஒரு குடும்பம் போல் மாறிவிட்டது. இவ்வளவு சிறிய பட்ஜெட்டில் இந்த அளவு பிரமாண்டமாக எடுக்கமுடியாது. படம் முடிந்து ட்ரைலர் எல்லாம் பார்க்கும்போது, இந்த படத்திற்கா நாம் இப்படி செய்துவிட்டோம் என எனக்கு மிகவும் அவமானமாகவும், வருத்தமாகவும் இருந்தது. அதனால்தான் தற்போது அனைவரின் முன்னிலையிலும் இருவரிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்'' என்றார்.

 

Next Story

உலகை உலுக்கிய 'புளு வேல்' கேம் படமாகிறது 

Published on 07/11/2018 | Edited on 07/11/2018
blue whale

 

கடந்த சில மாதங்களுக்கு முன்பு ‘புளு வேல்’ (Blue Whale) என்ற விளையாட்டால் பலர் தங்கள் உயிரை இழந்தது உலகத்தையே உலுக்கியது. இந்நிலையில் அதை மையப்படுத்தி ஒரு சமூக திரில்லர் படமாக உருவாகும் படம்  'புளு வேல்'. சில மணி நேரத்தில் நடக்கும் கதையாக இப்படம் உருவாகிவருகிறது. இன்றைக்கு இருக்கும் காலகட்டத்தில் கணவன், மனைவி இருவருமே வேலைக்குச் சென்று சம்பாதித்தால் தான் குடும்பம் நடத்த முடியும். மேலும், தங்கள் குழந்தைகள் ஆடம்பரமாகவும், அவர்களின் எதிர்காலத்தை வளமானதாக அமைத்துக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பெற்றோர் இருவருமே சம்பாதிக்கின்றனர். 

 

 

 


அதைவிட, விலைமதிக்க முடியாத அன்பு, கவனிப்பு, பாசம் மற்றும் நேரத்தை அவர்களுடன் செலவழிக்காதது பிள்ளைகளை தவறான பாதையில் கொண்டு சேர்க்கும் என்ற விபரீதத்தை அறியாதிருக்கிறார்கள் என்ற சமூக கருவை உள்ளடக்கி உருவாகும் இப்படத்தில் நடிகை பூர்ணா காவல்துறை உதவி ஆணையாளராக வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சிறுவன் கதாபாத்திரத்தில் மாஸ்டர் கபீஷ் கன்னா நடிக்கிறார். இவரின் பெற்றோராக கேரளாவைச் சேர்ந்த பிர்லா போஸ் மற்றும் திவ்யா நடிக்கின்றனர். பியாண்ட் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் டி.மது மற்றும் 8 பாயிண்ட் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் பி. அருமை சந்திரன் இருவரும் இணைந்து தயாரிக்கும் இப்படத்தை டி.ரங்கநாதன் இயக்குகிறார். மேலும் இப்படத்தின் இறுதிக் கட்ட படப்பிடிப்பும், வெளியாவதற்கான பணிகளும் ஒரே நேரத்தில் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. வரும் 2019ம் ஆண்டு ஜனவரி-பிப்ரவரியில் இப்படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டிருக்கிறார்கள்.