Advertisment

திரைப்பட எழுத்தாளர் சங்கத்தின் தலைவராக மீண்டும் பொறுப்பேற்றுக் கொண்டார் கே.பாக்யராஜ் 

k baghyaraj

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="9350773771"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த சர்கார் படத்துக்கு கதை திருட்டு பிரச்சினை காரணமாக தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கம் தலைவர் பதவியை சமீபத்தில் ராஜினாமா செய்தார் இயக்குனர் கே.பாக்யராஜ். இதையடுத்து பாக்யராஜின் ராஜினாமாவை ஏற்க மாட்டோம் என சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர். முறைப்படி தேர்தலில் போட்டியிட்டு மீண்டும் தலைவர் ஆவேன் என பாக்யராஜ் அவர்களை சமாதானப்படுத்தினார். ஆனால் அவரது சமாதானத்தை ஏற்காத தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தின் முக்கிய நிர்வாகிகள் மனோஜ் குமார், யார் கண்ணன், விக்ரமன், செல்வமணி உள்ளிட்ட 21 பேர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர். இந்நிலையில் நிர்வாகிகளின் முடிவை அறிந்து அதிர்ச்சி அடைந்த பாக்யராஜ் தனது முடிவை மாற்றிக்கொண்டு தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தின் தலைவராக தற்போது மீண்டும் பொறுப்பேற்றுக் கொண்டார்.இதை சென்னையில் நடைபெற்ற 'கோகோ மாக்கோ' படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் மீண்டும் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டதை அவர் உறுதி செய்தார்.

Advertisment

k.bagyaraj kbaghyaraj
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe