2D எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் சூர்யா தயாரித்து ரேவதி, ஜோதிகா நடித்துள்ள படம் 'ஜாக்பாட்'. வரும் ஆகஸ்ட் 2ஆம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இது படக்குழு அனைவரும் கலந்துகொண்டனர். அப்போது விழாவில் நடிகை ஜோதிகா பேசியபோது...
ADVERTISEMENT
ADVERTISEMENT
"ஹீரோஸ் என்னன்ன பண்றாங்களோ அதையெல்லாம் எங்களையும் பண்ணச் சொன்னார் இயக்குனர் கல்யாண். பெண்களுக்குப் பவர் இருக்க வேண்டும். இந்தப்படத்தில் அது இருக்கிறது. சூர்யா சண்டைக்காட்சிகளுக்கான கிட் வாங்கிக் கொடுத்துவிட்டு 'இனிமேல் இதெல்லாம் உனக்கு அவசியம் தேவைப்படும்' என்றார். அவர் தான் என்னோட எல்லா முயற்சிகளுக்கும் கை கொடுப்பவர். அவர் இல்லை என்றால் நான் இங்கு இல்லை. என்னோட ஜாக்பாட் சூர்யா தான்" என்றார்.
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT