Skip to main content

ஜிமிக்கி கம்மலுக்கு நடனமாடிய ஜோ!

Published on 04/08/2018 | Edited on 04/08/2018

 

maniyarfamily

 

jyothika

 

 

 

சென்ற வருடம் வெளிவந்து மாபெரும் வெற்றிபெற்ற மலையாள பாடலான 'ஜிமிக்கி கம்மல்' பாடலுக்கு தமிழகமே நடனமாடி தலையசைத்தது. இளைஞர்களுக்கு மிகவும் பிடித்தமான இப்பாடலை ஜோதிகாவின் "காற்றின் மொழி" திரைப்படம் மூலம் மீண்டும் கேட்டு ரசிக்க ஒரு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் நடன இயக்குனர் விஜியின் நடன வடிவமைப்பில் ஜோதிகா, லட்சுமி மஞ்சு, சிந்து ஷியாம், குமரவேல் மற்றும் ஆர்.ஜெ சான்ட்ரா  'காற்றின் மொழி' படத்திற்காக இப்பாடலுக்கு நடனமாடினர். ராதாமோகன் இயக்கத்தில் ஒரே ஷெட்யூலில் இப்படத்தின் படப்பிடிப்பு  நிறைவடைந்தது. ஜி. தனஞ்ஜெயன், லலிதா தனஞ்ஜெயன், விக்ரம்குமார் ஆகியோர் பாப்டா மீடியா ஒர்க்ஸ் பிரைவேட் நிறுவனம் சார்பில் இப்படத்தை தயாரித்துள்ளனர்.  ஏற்கனவே நாயகி ஜோதிகாவுக்கு கேரளாவில் மிகப்பெரிய ரசிகர் கூட்டம் உள்ளது. 

 

 

 

இதோடு சேர்த்து ஜிமிக்கி கம்மலும் வரும் போது அதை கேரள ரசிகர்களுக்கு உற்சாகம் ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விதார்த், லட்சுமி மஞ்சு என்று முன்னணி நட்சத்திரங்களோடு நடிகர் சிம்பு இப்படத்தில் கெளரவ வேடமேற்று நடித்துள்ளார். A.H. காஷிஃப் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார். மாபெரும் புகழ் பெற்ற 'ஜிமிக்கி கம்மல்' மலையாள பாடலின் உரிமையை சத்யம் ஆடியோஸ் நிறுவனத்திடமிருந்து பாப்டா மீடியா ஒர்க்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் தனன்ஞ்ஜெயன் முறைப்படி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் ட்ரைலர் வெளியீடு பற்றிய தகவல் செப்டம்பர் மாதத்தில் வெளியாகும் என்றும், படத்தை அக்டோபர் 18ல் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளார்.

 

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திடீரென இயக்குனராக மாறிய பிரபல தயாரிப்பாளர்! 

Published on 15/11/2019 | Edited on 15/11/2019

இரண்டு முறை தேசிய விருது பெற்ற தயாரிப்பாளர் தனஞ்செயன் தயாரிப்பில் சிபிராஜ், நந்திதா நடிக்கும் கபடதாரி படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் அடுத்ததாக தயாரிப்பாளர் தனஞ்செயன் ஒரு புதிய படத்தை தயாரிப்பது மட்டுமல்லாமல் முதல்முறையாக இயக்கவும் உள்ளார்.

 

dhana

 

 

சமீபத்தில் இதுகுறித்து அவர் பேசும்போது.... ''நான் நிர்வாக தயாரிப்பாளராக பல படங்களில் பணியாற்றியபோது, அந்த படங்களின் கதை விவாதங்களிலும், திரைக்கதை உருவாக்கத்திலும் இணைந்து பணியாற்றினேன். அதில் கிடைத்த அனுபவங்கள் நிறைய பாடங்களை கற்று தந்தன. எனக்குள் ஒரு திரைப்படத்தை உருவாக்கும் ஆர்வம் நீண்ட காலமாக இருந்து வந்தது. அதற்கு சரியான நேரம் இப்போதுதான் அமைந்து இருக்கிறது. கடந்த நான்கு மாதங்களாக நானும், என் குழுவினரும் படத்தின் திரைக்கதை விவாதத்தில் ஈடுபட்டு இருந்தோம். சில நடிகர்களிடமும், தொழில்நுட்ப கலைஞர்களிடமும் என் கதையை சொன்னபோது, அவர்கள் வெகுவாக பாராட்டினார்கள். என் இயக்கத்தில் நடிக்கும் நடிகர்-நடிகைகளை அடுத்த மாதம் அறிவிக்க இருக்கிறேன். இது ஒரு திகில் படமாகும். படப்பிடிப்பை வரும் ஜனவரி மாதத்தில் தொடங்க திட்டமிட்டுள்ளோம்’’ என்றார்.

 

Next Story

டிக்கெட்டிற்கு 2 ரூபாய்... கஜா புயலுக்கு நிதி அளிக்கும் காற்றின் மொழி !

Published on 20/11/2018 | Edited on 20/11/2018
kaatrin mozhi

 

போப்டா சார்பில் தனஞ்செயன் தயாரித்து, ஜோதிகா நடிப்பில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது 'காற்றின் மொழி' திரைப்படம். இதற்கிடையே சமீபத்தில் தமிழக 'டெல்டா' பகுதி மக்கள்  'கஜா' புயலால் பாதிக்கப்பட்டதை அடுத்து அவர்களுக்கு நிவாரண நிதி அளிக்கும் வகையில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார் 'காற்றின் மொழி' தயாரிப்பாளர் தனஞ்செயன். அதில்.... 

 

 

 

"காற்றின் மொழி' திரைப்படத்தை ஒரு சிறந்த குடும்பப்படமாக கொண்டாடி வரும் தமிழக மக்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றி. இந்த சமயத்தில் 'கஜா' புயலால் பாதிக்கப்பட்ட தமிழக 'டெல்டா' பகுதி மக்களுக்கு நீங்கள் 'காற்றின் மொழி' திரைப்படம் பார்ப்பதன் மூலமும் உதவலாம். இன்று முதல் தமிழகமெங்கும் விற்பனையாகும் ஒவ்வொரு 'காற்றின் மொழி' டிக்கெட் வருமானத்தின் தயாரிப்பாளர் ஷேரிலிருந்து ரூபாய் 2 தமிழக அரசின் 'கஜா' புயல் நிவாரண நிதிக்கு வழங்கப்படும். நம்மால் முடிந்த அளவு நாம் எல்லோரும் நிவாரண நிதி அளித்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவோம்" என குறிப்பிட்டுள்ளார்.