Skip to main content

மார்வெல் நிறுவனத்துடன் ஜூனியர் என்டிஆர் சந்திப்பு

Published on 19/01/2023 | Edited on 19/01/2023

 

Junior NTR meeting with Marvel studios

 

ராஜமௌலி இயக்கத்தில் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் ஆர்.ஆர்.ஆர். இப்படம் 2023 ஆம் ஆண்டு நடக்கும் ஆஸ்கர் விருது போட்டிக்கு இந்தியா சார்பாக அனுப்பப்படும் என்று பலரும் எதிர்பார்த்தனர். ஆனால் 95வது ஆஸ்கர் விருது போட்டியில் இந்தியா சார்பாக குஜராத்தி படம் 'செல்லோ ஷோ' தேர்வானதால் தனிப்பட்ட முயற்சியில் 15 பிரிவுகளின் கீழ் ஆஸ்கருக்கு ஆர்.ஆர்.ஆர் படக்குழு விண்ணப்பித்துள்ளது. இதன் காரணமாக தீவிர ப்ரோமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகிறது படக்குழு.

 

இதனிடையே, திரைத்துறையில் ஆஸ்கருக்கு அடுத்தபடியாகக் கருதப்படும் கோல்டன் குளோப் விருது, 'நாட்டு நாட்டு’ பாடலுக்காக இசையமைப்பாளர் கீரவாணிக்கு வழங்கப்பட்டது. முன்னதாக ஜூனியர் என்.டி.ஆர் ஒரு பேட்டியில் "மார்வெல் நிறுவனம் தயாரிக்கும் படங்களில் நடிக்க ஆசை இருக்கிறது" எனக் கூறியிருந்தார். 

 

இந்த நிலையில் ஜூனியர் என்டிஆர், அமெரிக்காவில் உள்ள மார்வெல் ஸ்டுடியோவின் நிர்வாகி விக்டோரியா அலோன்சோவை சந்தித்துப் பேசியுள்ளார். இருவரும் சில நிமிடங்களே பேசியுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் மார்வெல் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில் ஜூனியர் என்டிஆர் நடிக்க ஏதேனும் வாய்ப்பு அமையுமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

"யுத்த பூமியில் காத்திருக்கிறேன்" - வாழ்த்து தெரிவித்து ரகசியத்தை உடைத்த ஹிரித்திக் ரோஷன்

Published on 20/05/2023 | Edited on 20/05/2023

 

Hrithik Roshan breaks the secret by congratulating junior ntr birthday

 

'ஆர்.ஆர்.ஆர்' பட வெற்றியால் இந்திய அளவில் பிரபலமான ஜூனியர் என்.டி.ஆர், தற்போது அவரது 30வது படத்தில் நடிக்கிறார். கொரட்டாலா சிவா இயக்கும் இப்படத்தில் பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் தென்னிந்திய சினிமாவில் அறிமுகமாகிறார். சைஃப் அலிகான் வில்லனாக நடிக்கிறார். இப்படத்தை அடுத்து கே.ஜி.எஃப் பட இயக்குநர் பிரஷாந்த் நீல் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். 

 

'என்.டி.ஆர் 30' படத்தை என்.டி ஆர்ட்ஸ் மற்றும் யுவசுதா ஆர்ட்ஸ் நிறுவனங்கள் தயாரிக்கின்றன. அனிருத் இசையமைக்கிறார். இந்நிலையில் ஜூனியர் என்.டி.ஆர் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதனை முன்னிட்டு 'என்.டி.ஆர் 30' படக்குழுவும் படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நேற்று இரவு 7மணிக்கு வெளியிட்டது. அதன்படி படத்துக்கு 'தேவரா' என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் 5 ஆம் தேதி (05.04.2024) திரைக்கு வரும் என படக்குழு தெரிவித்துள்ளது.

 

இந்நிலையில் ஜூனியர் என்.டி.ஆருக்கு திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பாலிவுட் நடிகர் ஹிரித்திக் ரோஷன் வாழ்த்து தெரிவித்து வெளியிட்டுள்ள பதிவில், "பிறந்தநாள் வாழ்த்துகள் ஜூனியர் என்.டி.ஆர். உங்களுக்கு மகிழ்ச்சியான நாளாகவும் சிறந்த ஆண்டாகவும் அமைய வாழ்த்துகள். உங்களுக்காக யுத்த பூமியில் காத்திருக்கிறேன் நண்பரே. நாம் சந்திக்கும் வரை உங்கள் நாட்கள் மகிழ்ச்சியும் அமைதியும் நிறைந்ததாக இருக்கட்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார். 

 

நாம் சந்திக்கும் வரை என ஹிரித்திக் ரோஷன் குறிப்பிட்டது விரைவில் இருவரும் இணையவுள்ள படமாக இருக்கும் என யூகிக்க முடிகிறது. முன்னதாக யாஷ்ராஜ் பிலிம்ஸ் தயாரிப்பில் அயன் முகர்ஜி இயக்கத்தில் ஹிரித்திக் ரோஷன் நடிக்கும் வார் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தில் ஜூனியர் என்.டி.ஆர் கமிட்டாகியுள்ளதாக தகவல் வெளியானது. இப்போது கிட்டத்தட்ட அது உறுதியாகியுள்ளது. படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவிப்பதற்கு முன் ஹிரித்திக் ரோஷன் அந்த ரகசியத்தை சூசகமாக உடைத்துள்ளது போல் தெரிகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. இப்படம் மூலம் பாலிவுட்டில் தடம் பதிக்கவுள்ளார் ஜூனியர் என்.டி.ஆர். 

 

 

 

 

Next Story

பாலிவுட்டில் என்ட்ரி; ஹிரித்திக் ரோஷன் படத்தின் இரண்டாம் பாகத்தில் ஜூனியர் என்.டி.ஆர்

Published on 05/04/2023 | Edited on 05/04/2023

 

Jr NTR is act to bollywood movie in Hrithik Roshan War 2

 

'ஆர்.ஆர்.ஆர்' பட வெற்றியால் இந்திய அளவில் பிரபலமான ஜூனியர் என்.டி.ஆர், தற்போது அவரது 30வது படத்தில் நடிக்கிறார். கொரட்டாலா சிவா இயக்கும் இப்படத்தில் பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் தென்னிந்திய சினிமாவில் அறிமுகமாகிறார். இப்படத்தை அடுத்து கே.ஜி.எஃப் பட இயக்குநர் பிரஷாந்த் நீல் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். 

 

இந்த நிலையில் பாலிவுட் படத்தில் ஜூனியர் என்.டி.ஆர் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. யாஷ்ராஜ் பிலிம்ஸ் தயாரிப்பில் அயன் முகர்ஜி இயக்கத்தில் ஹிரித்திக் ரோஷன் நடிக்கும் வார் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் தொடங்கவுள்ளது. இப்படத்தில் ஜூனியர் என்.டி.ஆர் நடிக்க கமிட்டாகியுள்ளதாக சொல்லப்படும் நிலையில் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இத்தகவல் உறுதியாகும் பட்சத்தில் முதல் முறையாக பாலிவுட்டில் தடம் பதிக்கவுள்ளார் ஜூனியர் என்.டி.ஆர். 

 

சமீப காலமாக தென்னிந்திய படங்களான 'புஷ்பா', 'கே.ஜி.எஃப் 2', 'ஆர்.ஆர்.ஆர்' உள்ளிட்ட படங்கள் பாலிவுட்டில் வெற்றி பெற்று வசூல் சாதனை படைத்தன. மேலும், பாலிவுட்டில் தடம் பதித்த தென்னிந்திய பிரபலங்கள் விஜய் சேதுபதி, நயன்தாரா வரிசையில் ஜூனியர் என்.டி.ஆரும் இணையவுள்ளார்.