Skip to main content

"தனது சிறந்த நடிப்பால் அனைவரையும் மகிழ்வித்தவர் அவர்!" - ஜூனியர் என்.டி.ஆர் வருத்தம்!

Published on 08/09/2020 | Edited on 08/09/2020
gewgse

 

 

தெலுங்கின் முன்னணி காமெடியனாகவும், வில்லன் நடிகராகவும் வலம் வந்தவர் ஜெயபிரகாஷ் ரெட்டி. இவர் ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்த ஆறு படத்தில் ரெட்டி என்னும் கதாபாத்திரத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அஜித்தின் ஆஞ்சநேயா மற்றும் தனுஷின் உத்தமபுத்திரன் படங்கள் மூலம் தமிழில் பிரபலமடைந்த நடிகர் ஜெயபிரகாஷ் மாரடைப்பு காரணமாக இன்று காலமானார். 73 வயதான இவர் மேடை நாடகத்தில் தனது நடிப்பு பயணத்தை தொடங்கியவர், பின்னர் தெலுங்கு திரையுலகில் அனைத்து முன்னணி ஹீரோக்களுடனும் பணிபுரிந்துள்ளார். இவரின் மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில் நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் ஜெயபிரகாஷ் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில்...

 

"தனது சிறந்த நடிப்பால் அனைவரையும் மகிழ்வித்த ஜெயபிரகாஷ் ரெட்டி இனி வரப்போவது இல்லை என்ற என்ற செய்தி கேட்டு அதிர்ச்சியடைத்தேன். அவரது ஆத்மாவுக்கு அமைதி கிடைக்க விரும்புகிறேன். உங்கள் ஆத்மா சாந்தியடையட்டும் ஜெயபிரகாஷ் ரெட்டி காரு" என கூறியுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

"யுத்த பூமியில் காத்திருக்கிறேன்" - வாழ்த்து தெரிவித்து ரகசியத்தை உடைத்த ஹிரித்திக் ரோஷன்

Published on 20/05/2023 | Edited on 20/05/2023

 

Hrithik Roshan breaks the secret by congratulating junior ntr birthday

 

'ஆர்.ஆர்.ஆர்' பட வெற்றியால் இந்திய அளவில் பிரபலமான ஜூனியர் என்.டி.ஆர், தற்போது அவரது 30வது படத்தில் நடிக்கிறார். கொரட்டாலா சிவா இயக்கும் இப்படத்தில் பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் தென்னிந்திய சினிமாவில் அறிமுகமாகிறார். சைஃப் அலிகான் வில்லனாக நடிக்கிறார். இப்படத்தை அடுத்து கே.ஜி.எஃப் பட இயக்குநர் பிரஷாந்த் நீல் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். 

 

'என்.டி.ஆர் 30' படத்தை என்.டி ஆர்ட்ஸ் மற்றும் யுவசுதா ஆர்ட்ஸ் நிறுவனங்கள் தயாரிக்கின்றன. அனிருத் இசையமைக்கிறார். இந்நிலையில் ஜூனியர் என்.டி.ஆர் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதனை முன்னிட்டு 'என்.டி.ஆர் 30' படக்குழுவும் படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நேற்று இரவு 7மணிக்கு வெளியிட்டது. அதன்படி படத்துக்கு 'தேவரா' என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் 5 ஆம் தேதி (05.04.2024) திரைக்கு வரும் என படக்குழு தெரிவித்துள்ளது.

 

இந்நிலையில் ஜூனியர் என்.டி.ஆருக்கு திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பாலிவுட் நடிகர் ஹிரித்திக் ரோஷன் வாழ்த்து தெரிவித்து வெளியிட்டுள்ள பதிவில், "பிறந்தநாள் வாழ்த்துகள் ஜூனியர் என்.டி.ஆர். உங்களுக்கு மகிழ்ச்சியான நாளாகவும் சிறந்த ஆண்டாகவும் அமைய வாழ்த்துகள். உங்களுக்காக யுத்த பூமியில் காத்திருக்கிறேன் நண்பரே. நாம் சந்திக்கும் வரை உங்கள் நாட்கள் மகிழ்ச்சியும் அமைதியும் நிறைந்ததாக இருக்கட்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார். 

 

நாம் சந்திக்கும் வரை என ஹிரித்திக் ரோஷன் குறிப்பிட்டது விரைவில் இருவரும் இணையவுள்ள படமாக இருக்கும் என யூகிக்க முடிகிறது. முன்னதாக யாஷ்ராஜ் பிலிம்ஸ் தயாரிப்பில் அயன் முகர்ஜி இயக்கத்தில் ஹிரித்திக் ரோஷன் நடிக்கும் வார் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தில் ஜூனியர் என்.டி.ஆர் கமிட்டாகியுள்ளதாக தகவல் வெளியானது. இப்போது கிட்டத்தட்ட அது உறுதியாகியுள்ளது. படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவிப்பதற்கு முன் ஹிரித்திக் ரோஷன் அந்த ரகசியத்தை சூசகமாக உடைத்துள்ளது போல் தெரிகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. இப்படம் மூலம் பாலிவுட்டில் தடம் பதிக்கவுள்ளார் ஜூனியர் என்.டி.ஆர். 

 

 

 

 

Next Story

பாலிவுட்டில் என்ட்ரி; ஹிரித்திக் ரோஷன் படத்தின் இரண்டாம் பாகத்தில் ஜூனியர் என்.டி.ஆர்

Published on 05/04/2023 | Edited on 05/04/2023

 

Jr NTR is act to bollywood movie in Hrithik Roshan War 2

 

'ஆர்.ஆர்.ஆர்' பட வெற்றியால் இந்திய அளவில் பிரபலமான ஜூனியர் என்.டி.ஆர், தற்போது அவரது 30வது படத்தில் நடிக்கிறார். கொரட்டாலா சிவா இயக்கும் இப்படத்தில் பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் தென்னிந்திய சினிமாவில் அறிமுகமாகிறார். இப்படத்தை அடுத்து கே.ஜி.எஃப் பட இயக்குநர் பிரஷாந்த் நீல் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். 

 

இந்த நிலையில் பாலிவுட் படத்தில் ஜூனியர் என்.டி.ஆர் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. யாஷ்ராஜ் பிலிம்ஸ் தயாரிப்பில் அயன் முகர்ஜி இயக்கத்தில் ஹிரித்திக் ரோஷன் நடிக்கும் வார் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் தொடங்கவுள்ளது. இப்படத்தில் ஜூனியர் என்.டி.ஆர் நடிக்க கமிட்டாகியுள்ளதாக சொல்லப்படும் நிலையில் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இத்தகவல் உறுதியாகும் பட்சத்தில் முதல் முறையாக பாலிவுட்டில் தடம் பதிக்கவுள்ளார் ஜூனியர் என்.டி.ஆர். 

 

சமீப காலமாக தென்னிந்திய படங்களான 'புஷ்பா', 'கே.ஜி.எஃப் 2', 'ஆர்.ஆர்.ஆர்' உள்ளிட்ட படங்கள் பாலிவுட்டில் வெற்றி பெற்று வசூல் சாதனை படைத்தன. மேலும், பாலிவுட்டில் தடம் பதித்த தென்னிந்திய பிரபலங்கள் விஜய் சேதுபதி, நயன்தாரா வரிசையில் ஜூனியர் என்.டி.ஆரும் இணையவுள்ளார்.