‘மெஹந்தி சர்க்கஸ்’ படம் மூலம் கவனம் பெற்றவர் மாதம்பட்டி ரங்கராஜ். பின்பு கீர்த்தி சுரேஷ் நடித்த ‘பெண்குயின்’ படத்தில் நடித்திருந்தார். இதையடுத்து சீனு ராமசாமி இயக்கத்தில் ஒரு படம் நடிக்க கமிட்டானார். ஆனால் அது குறித்து எந்த அப்டேட்டும் இப்போது வரை வெளியாகவில்லை. இதனிடையே சமையல் கலைஞராக புகழ் பெற்றவர். முன்னணி படங்களின் வெற்றி விழாக்கள், திரை பிரபலங்களின் வீட்டு விழாக்கள் என தொடர்ச்சியாக தனது கேட்டரிங் சர்வீஸ் செய்து வருகிறார். இதனிடையே சின்னதிரையில் ஒளிபரப்பாகி வரும் சமையல் நிகழ்ச்சியில் நடுவராகவும் இருந்து வந்தார். 

Advertisment

கோவையைச் சேர்ந்த இவர், ஸ்ருதி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். ஆனால் கடந்த சில வருடங்களாக மாதம்பட்டி ரங்கராஜுக்கும் ஸ்ருதிக்கும் கருத்து வேறுபாடு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த சூழலில் கடந்த மாதம் பிரபல ஆடை வடிவமைப்பாளரான ஜாய் கிறிசில்டா, மாதம்பட்டி ரங்கராஜுக்கும் தனக்கும் திருமணம் நடைபெற்றதாக மணக்கோலத்தில் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்திருந்தார். மேலும் 6 மாதம் கர்ப்பமாக இருப்பதாகவும் தெரிவித்தார். 

இவர் ஏற்கனவே ஜோதிகா நடித்த  ’பொன்மகள் வந்தாள்’ பட இயக்குநர் ஜே.ஜே.ஃப்ரெட்ரிக்குடன் திருமணம் நடைபெற்றது. பின்பு கருத்து வேறுபாடு காரணமாக அவரை விவாகரத்து செய்தார். அதன் பின்பு திடீரென்று கோயிலில் எளிய முறையில் மாதம்பட்டி ரங்கராஜை கரம் பிடித்தது ரசிகர்கள் மத்தியில் குழப்பத்தையும் கேள்வியையும் எழுப்பியது. முதல் மனைவி ஸ்ருதியை மாதம்பட்டி ரங்கராஜ் முறையாக விவாகரத்து செய்தாரா, திருமணம் ஆனதை தெரிவித்தவுடன் கர்ப்பமாக இருப்பதையும் ஜாய் கிறிசில்டா தெரிவித்ததால் இருவருக்கும் எப்போது திருமணம் நடந்தது என்ற கேள்விகள் உலா வந்தது. இந்த கேள்விக்கு பதிலளிக்கும் வகையில், சில ஆண்டுகளுக்கு முன்பு நாங்கள் கணவன் மனைவியாக எங்கள் பயணத்தை தொடங்கினோம் என்றும் இந்தாண்டு குழந்தையை வரவேற்கத் தயாராகிறோம் என்றும் கூறியிருந்தார். ஆனால் மாதம்பட்டி ரங்கராஜ் இந்த விவகாரம் குறித்து இன்னும் பேசவில்லை. 

இந்த நிலையில் மாதம்பட்டி ரங்கராஜ், கோவையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது அவர் அருகில் ஸ்ருதியும் அமர்ந்திருந்தார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில் இருவரும் பக்கத்து பக்கத்து சீட்டில் அமர்ந்துள்ளனர். ஆனால் இருவரும் ஒருவரையொருவர் முகம் பார்த்துக் கொள்ளாதபடியும் பேசிக்கொள்ளாதபடியும் இருக்கின்றனர். இதனால் மீண்டும் ரசிகர்கள் மத்தியில் இது பேசு பொருளாகவுள்ளது. விரைவில் இதுகுறித்து மாதம்பட்டு ரங்கராஜ் விளக்கமளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வீடியோ வைரலான நிலையில் ஜாய் கிறிசில்டா, தனது சமூக வலைதளப் பக்கத்தில் மாதம்பட்டி ரங்கராஜ், தன்னுடைய கணவர் என்பதை குறிக்கும் வகையில் ஒரு பதிவை பகிர்ந்துள்ளார். அதில் கர்பமாக அவர் இருப்பதல் மருத்துவமனைக்கு சென்றுள்ளதை குறிப்பிட்டுள்ளார். மேலும் மருத்துவ ரிப்போர்ட்டில் அவர் பெயருடன் ரங்கராஜ் பெயரும் இணைந்திருப்பதை சுட்டிக்காட்டியுள்ளார். 

Advertisment