ADVERTISEMENT

"அனைத்தும் பொய்யா.... " - நம்பிய ரசிகர்களை ஏமாற்றிய ஜானி டெப்

04:25 PM Jun 28, 2022 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

ஜானி டெப் (50) 'பைரேட்ஸ் ஆஃப் தி கரிபியன்' படங்களில் கேப்டன் ஜாக் ஸ்பேரோ கதாபாத்திரத்தில் நடித்து உலகளவில் ஏராளமான ரசிகர்களை வைத்துள்ளார். கடந்த 2003 ஆம் ஆண்டு வெளியான 'பைரேட்ஸ் ஆஃப் தி கரிபியன்' படம் ரசிகர்களிடையே பெரும் வெற்றி பெறவே அடுத்தடுத்த பாகங்களைத் தயாரித்துப் படக்குழு வெளியிட்டு வந்தது. அப்படி இதுவரை 5 பாகங்கள் வெளியாகியுள்ள நிலையில், அது அனைத்திலுமே கேப்டன் ஜாக் ஸ்பேரோ என்ற கதாபாத்திரத்தில் ஜானி டெப் தான் நடித்திருப்பார்.

இதனிடையே ஜானி டெப்பின் முன்னாள் மனைவி ஆம்பர் பிரபல பத்திரிக்கை ஒன்றிற்கு பெண்கள் சந்திக்கும் பாலியல் துன்புறுத்தல் குறித்து கட்டுரை எழுதியிருந்தார். அதில் தனது முன்னாள் கணவர் ஜானி டெப் தன்னை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கினர் என்று குற்றம்சாட்டி இருந்தார். அத்துடன் தனது முன்னாள் கணவர் ஜானி டெப்பின் மீது ஆம்பர் ஹெர்ட் நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்திருந்தார். இது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. அதனால் 'பைரேட்ஸ் ஆஃப் தி கரிபியன்' ஆறாவது பாகத்தில் நடிப்பதில் இருந்து ஜானி டெப்பை நீக்கி படத்தைத் தயாரிக்கும் டிஸ்னி நிறுவனம் அறிக்கை வெளியிட்டிருந்தது.

இந்நிலையில் ஜானி டெப் மீதான குற்றச்சாட்டு போலியானது என்று நீதிமன்றம் தீர்ப்பளித்ததைத் தொடர்ந்து, அவர் மீண்டும் 'பைரேட்ஸ் ஆஃப் தி கரிபியன்' 6 படத்தில் நடிக்கவுள்ளார் என்றும், அதற்காக ஜானி டெப்க்கு ரூ.2535 கோடி ஒப்பந்தத்திற்கு டிஸ்னி நிறுவனம் அழைப்பு விடுத்துள்ளதாகக் கூறப்பட்டது. ஆனால் இதனை முற்றிலுமாக மறுத்துள்ள ஜானி டெப்பின் பி.ஆர் குழு இது குறித்த வதந்திகளை யாரும் நம்பவேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளது. 'பைரேட்ஸ் ஆஃப் தி கரிபியன்' 6 படத்தில் மீண்டும் ஜானி டெப் நடிக்கவிருந்த செய்தியைக் கேட்டு உற்சாகத்திலிருந்த ரசிகர்கள் ஜானி டெப் தரப்பு அளித்த விளக்கத்தைக் கேட்டு ஏமாற்றமடைந்துள்ளனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT