Skip to main content

"என் கதாபாத்திரத்தை உங்களுக்காக அர்ப்பணிக்கிறேன் சார்" - அஜித்துக்கு நன்றி சொன்ன நடிகர்!

Published on 23/07/2021 | Edited on 23/07/2021

 

bfshdsfr

 

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான பா. ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா, துஷாரா விஜயன், பசுபதி, காளி வெங்கட், உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'சார்பட்டா பரம்பரை'. இப்படத்தை கே 9 ஸ்டூடியோஸ் மற்றும் நீலம் ப்ரொடக்சன்ஸ் இணைந்து தயாரித்துள்ளன. வடசென்னை மக்களிடையே பிரபலமாக இருந்த குத்துச்சண்டை விளையாட்டை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படம், ஜூலை 22ஆம் தேதி நேரடியாக அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியானது. ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுவரும் இப்படத்தில் வில்லன் வேம்புலியாக நடிகர் ஜான் கொக்கென் நடித்திருந்தார். 

 

hrhehert

 

இவரின் கதாபாத்திரத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துவரும் நிலையில், இவர் தன் கதாபாத்திரம் குறித்தும், நடிகர் அஜித் குறித்தும் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில்... "எப்போதும் என்னை ஊக்கப்படுத்தியதற்கும், என் மேல் எனக்கு நம்பிக்கை வைத்து என்னை ஊக்குவித்ததற்கும் நன்றி அஜித் சார். ஒவ்வொரு நாளும் கடினமாக உழைக்கவும், சிறந்த மனிதராகவும் மாற நீங்கள் என்னை ஊக்குவிக்கிறீர்கள். இந்த ‘வேம்புலி’ கதாபாத்திரத்தை உங்களுக்காக அர்ப்பணிக்கிறேன் சார். லவ் யூ சார்" என கூறியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஜப்பானில் 3 விருதுகளைப் பெற்ற சார்பட்டா பரம்பரை

Published on 21/05/2023 | Edited on 21/05/2023

 

3 award-winning Sarbata parambarai in Japan

 

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான பா. ரஞ்சித், ஆர்யாவை வைத்து இயக்கிய 'சார்பட்டா பரம்பரை' படம் நேரடியாக ஓடிடியில் வெளியானது. இதில் துஷாரா விஜயன், பசுபதி, காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். கே 9 ஸ்டூடியோஸ் மற்றும் நீலம் ப்ரொடக்சன்ஸ் இணைந்து தயாரித்திருந்த இப்படத்தை வட சென்னை மக்களிடையே பிரபலமாக இருந்த குத்துச்சண்டை விளையாட்டை மையமாக வைத்து உருவாக்கியிருந்தார் ரஞ்சித்.

 

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. படத்தைப் பார்த்த கமல்ஹாசன் படக் குழுவினரை நேரில் அழைத்து தனது பாராட்டுக்களைத் தெரிவித்தார். மேலும் விமர்சன ரீதியாகவும் பலரது வரவேற்பைப் பெற்றது. சில வாரங்கள் முன் இப்படத்தின் இரண்டாம் பாகம் 'சார்பட்டா பரம்பரை 2' உருவாகவுள்ளதாக அறிவிப்பு வெளியானது. இது தொடர்பான போஸ்டரை ஆர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து, "மேட்ச் பார்க்க ரெடியா... ரோஷமான ஆங்கில குத்துச்சண்ட சுற்று 2" எனக் குறிப்பிட்டிருந்தார். 

 

இந்நிலையில் ஜப்பானில் நடைபெற உள்ள 2021 ஆம் ஆண்டுக்கான ‘ஒசாகா தமிழ் சர்வதேசத் திரைப்பட விழா’வில் சிறந்த இயக்குநர், சிறந்த திரைப்படம், சிறந்த கலை இயக்குநருக்கான விருதுகளை சார்பட்டா பரம்பரை வென்றுள்ளது.

 

 

Next Story

'சார்பட்டா பரம்பரை' பிரபலங்களுடன் இணைந்த த்ரிஷா

Published on 25/04/2022 | Edited on 25/04/2022

 

Trisha joins 'Sarpatta Parambarai' celebrities

 

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் த்ரிஷா. கடைசியாக இவர் நடிப்பில் வெளியான படம் 'பரமபதம்'. அடுத்து மணிரத்னத்தின் 'பொன்னியின் செல்வன்' படத்தில் குந்தவை தேவி கதாபாத்திரத்தில் த்ரிஷா நடித்து முடித்துள்ளார். இந்த படம் செப்டம்பர் மாதம் 30-ஆம் தேதி திரையரங்கில் வெளியாகவுள்ளது. 

 

இந்நிலையில் த்ரிஷா நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன் படி அருண் வசீகரன் இயக்கும் 'தி ரோடு' படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் த்ரிஷா நடிக்கிறார். சாம் சி.எஸ். இசையமைக்கும் இப்படத்தில் மியா ஜார்ஜ், 'சார்பட்டா பரம்பரை' பட பிரபலம் சந்தோஷ் பிரதாப் மற்றும் 'டான்சிங் ரோஸ்' சபீர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். 2000-ஆம் ஆண்டு மதுரையில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இப்படம் உருவாகி வருகிறது. மேலும் மதுரையில் இன்று படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.