Skip to main content

அமிதாப் பச்சன் நலம் பெற ஜான் சீனா வாழ்த்து! 

Published on 14/07/2020 | Edited on 14/07/2020

 

jhon cena


இந்தியா முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துகொண்டே வருகிறது. இந்நிலையில் பாலிவுட் நட்சத்திரங்களின் வீட்டில் பணிபுரிபவர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். தற்போது நிறைய பாலிவுட் நட்சத்திரங்களே கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய், அவருடைய மகள் உள்ளிட்டோர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

 

அமிதாப் மற்றும் அபிஷேக் இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மகள் ஆராத்யா வீட்டிலேயே தங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து அரசியல் பிரபலங்கள், திரை பிரபலங்கள் இத்துயரிலிருந்து விரைவில் அமிதாப்பின் குடும்பம் மீண்டு வரவேண்டும் என்று பிரார்த்தனைகளைத் தெரிவித்து வருகின்றனர்.

 

இந்நிலையில் ஹாலிவுட் நடிகரும் மல்யுத்தவீரருமான ஜான் சீனா அமிதாப்பின் குடும்பம் விரைவில் நலம் பெற வேண்டும் என்று வாழ்த்துத் தெரிவித்துள்ளார். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர்கள் இருவரது புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். 

 

முன்னதாக சுஷாந்தின் மறைவின்போது அவருடைய புகைப்படத்தைப் பகிர்ந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

 

சார்ந்த செய்திகள்

Next Story

இந்தியா - பாகிஸ்தான் போட்டி; பலத்த பாதுகாப்பு - பங்கேற்கும் முக்கிய பிரபலங்கள்

Published on 12/10/2023 | Edited on 12/10/2023

 

india vs pakistan world cup match rajini amitab attending

 

4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் ஐ.சி.சி. ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. நவம்பர் 19 ஆம் தேதி வரை நடைபெறும் இத்தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட 10 நாடுகளைச் சேர்ந்த கிரிக்கெட் அணிகள் பங்கேற்கின்றன. 

 

இந்தியாவை பொறுத்தவரை இதுவரை விளையாடிய 2 லீக் போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது. மூன்றாவது போட்டி நாளை மறுநாளான 14 ஆம் தேதி பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறவுள்ள இந்த போட்டி முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. அதனால் ஐசிசி மற்றும் பிசிசிஐ பிரம்மாண்டமாக இந்தப் போட்டியை நடத்த திட்டமிட்டுள்ளது. அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

 

மேலும் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின், பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் மற்றும் ரஜினிகாந்த் ஆகியோருக்கு இந்தப் போட்டியைக் காண பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா நேரில் சென்று கோல்டன் டிக்கெட்டை வழங்கினார். அதன்படி மூவரும் கலந்துகொள்கின்றனர். இதனால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பல்வேறு துறைகளிலிருந்து 11,000 பாதுகாவலர்கள் ஈடுபடவுள்ளனர். போட்டி ஆரம்பிப்பதற்கு முன்னதாக பிரபல பாடகர் அர்ஜித் சிங் பாடவுள்ளார். இப்போட்டி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

 

 

Next Story

அமிதாப்பச்சனுக்கு எதிராக பரபரப்பு புகார்

Published on 05/10/2023 | Edited on 05/10/2023

 

CAIT filed a complaint against Amitabh Bachchan

 

திரைப்படங்களை தாண்டி பல விளம்பர படங்களில் நடித்து வரும் அமிதாப் பச்சன், ஆன்லைன் வணிகத் தளமான ஃப்ளிப்கார்ட் நிறுவன விளம்பரங்களிலும் நடித்துள்ளார். ஆண்டுதோறும் அந்த நிறுவனம் வழங்கும் சிறப்பு சலுகையான ‘பிக் பில்லியன் டே’ இந்தாண்டு வருகிற 8 ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதை விளம்பரப்படுத்தும் பொருட்டு அதன் விளம்பரப் படத்தில் நடித்த அமிதாப் பச்சன் நடித்த விளம்பரம், சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதில் "சில்லறை விற்பனைக் கடைகளில் இது போன்ற மொபைல்களுக்கான ஆஃபர்கள் கிடைக்காது" என்ற வசனத்தை பேசியிருந்தார். 

 

இந்த வசனம் நுகர்வோரை தவறாக வழி நடத்துவதாக சிஏஐடி பொதுச்செயலாளர் பிரவீன் கண்டேல்வால் மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையத்திடம் புகார் அளித்துள்ளார். மேலும் நாட்டின் சிறு சில்லறை விற்பனையாளர்களுக்கு எதிராக அமைந்துள்ளதாகவும் அந்த விளம்பரத்தை திரும்பப் பெறவும் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதோடு நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் ஃப்ளிப்கார்ட் மீது அபராதம் விதிக்கப்படவும் அமிதாப் பச்சனுக்கு ரூ.10 லட்சம் அபராதம் விதிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளது.