”செட்டில் மணிரத்னம் என்னை மட்டும் சாப்பிட சொல்வார்” - ஜெயராம் பேச்சு

Jayaram

மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம், சரத்குமார், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், அமிதாப்பச்சன், பிரபு, நிழல்கள் ரவி, ரகுமான், விக்ரம் பிரபு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.

விழாவில் நடிகர் ஜெயராம் பேசுகையில், “இது போன்ற அற்புதமான படத்தில் சிறிய பகுதியாக இருப்பது எனக்கு பெருமை மற்றும் சந்தோசம். அதற்கு தயாரிப்பாளர் சுபாஸ்கரன், மணிரத்னம், மற்றும் படக்குழுவிற்கு நன்றி கூறிக்கொள்கிறேன். படம் பார்க்கும் போதுதான் எல்லா படத்திற்கும் கதை தெரியும். ஆனால் பொன்னியின் செல்வன் கதையும், கதாபாத்திரமும் மக்கள் மனதில் பதிந்திருக்கிறது. அருள்மொழி வர்மன், வந்திய தேவனும் உடல்வாகுவிற்காக கடுமையாக உடற்பயிற்சி செய்தனர். மணி ரத்னம் என்னை மட்டும் சாப்பிட சொல்வார். ஏனெனில் என் கதாப்பாத்திரம் குண்டாக தெரிய வேண்டும். மணிரத்னம் சாருடன் ரவிவர்மன், ரகுமான், தோட்டா தரணி எனப் பலர் உழைத்துள்ளனர். ஆழ்வார்கடியன் நம்பி உங்கள் மனதில் நிறைந்து இருப்பார்" எனத் தெரிவித்தார்.

Actor Jayaram
இதையும் படியுங்கள்
Subscribe