Skip to main content

பொன்னியின் செல்வனுக்கு கரோனா; ஜெயம் ரவி கொடுத்த அட்வைஸ் 

Published on 22/10/2022 | Edited on 22/10/2022

 

 

jayam ravi tested covid 19 positive

 

மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம்,கார்த்தி,ஜெயம்ரவி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி பெரும் வரவேற்பையும் வசூலை வாரிக் குவித்தும் வருகிறது பொன்னியின் செல்வன் படம். கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை தழுவி எடுக்கப்பட்டுள்ள இந்த படம் இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ளது. முதல் பாகம் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வரும் நிலையில் இரண்டாம் பாகம் அடுத்த ஆண்டு கோடையில் திரைக்கு வரவுள்ளது. 

 

இந்நிலையில் இப்படத்தில்  பொன்னியின் செல்வனாக நடித்த ஜெயம் ரவிக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக அவர் ட்விட்டர் பக்கத்தில், "எனக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. நான் அனைத்து வகையான கரோனா நெறிமுறைகளையும் பின்பற்றி என்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். சமீபகாலமாக என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தேவைப்பட்டால் பரிசோதனை செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். முகக்கவசம் அணியுங்கள், பாதுகாப்பாக இருங்கள்"  எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ரசிகர் மரணம் - வீட்டுக்குச் சென்று ஜெயம் ரவி ஆறுதல்

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
jayam ravi condolence to his fan passed away

சென்னை எம்.ஜி.ஆர் நகர் ஜெயம் ரவி ரசிகர் மன்றத்தில் தலைவராக இருந்தவர் ராஜா (வயது 33). சென்னை கே.கே.நகர் பகுதியைச் சேர்ந்த இவர் சமீபத்தில் உடல்நலக்குறைவால் காலமானார். ஜெயம் ரவி மீது மிகுந்த அன்பு கொண்டிருந்த ராஜா, ஜெயம் ரவி ரசிகர் மன்றம் சார்பில் பல நற்பணிகள் செய்து வந்ததாக கூறப்படுகிறது. 

ராஜாவின் மரணத்தை அறிந்த ஜெயம் ரவி, ராஜா வீட்டுக்குச் சென்று, ராஜாவின் படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செய்தார். மேலும் ராஜாவின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி எந்த உதவியானாலும் தான் செய்து தருவதாக உறுதியளித்துள்ளார். 

ஜெயம் ரவி தற்போது மணிரத்னம் - கமல் கூட்டணியில் உருவாகும் தக் லைஃப் படத்தில் நடித்து வருகிறார். மேலும் ராஜேஷ் இயக்கத்தில் பிரதர், அறிமுக இயக்குநர் புவனேஷ் அர்ஜுனன் இயக்கத்தில் ஜீனி, கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் காதலிக்க நேரமில்லை உள்ளிட்ட படங்களில் நடித்து முடித்துள்ளர்.  

Next Story

ஜெயம் ரவிக்கு பதில் அருண் விஜய்; தொடர்ந்து நடக்கும் மாற்றம்!

Published on 01/04/2024 | Edited on 01/04/2024
maniratnam kamal in thug life arun vijay replaced jayam ravi character

கமல்ஹாசன் தற்போது ஷங்கர் இயக்கும் 'இந்தியன் 2' மற்றும் இந்தியன் 3 படத்தை கைவசம் வைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு மொத்தமும் முடிந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்தியன் 2 படத்தின் போஸ்ட் புரொடைக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது. இப்படத்தை முடித்துவிட்டு அ. வினோத் இயக்கத்தில் ஒரு படம் நடிக்க கமிட்டானார். ஆனால் அது தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது. 

இந்த சூழலில் மணிரத்னத்துடன் அவர் கைகோர்த்துள்ள ‘தக் லைஃப்’ பட பூஜை கடந்த அக்டோபர் மாதம் போடப்பட்டது. ராஜ்கமல் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படத்தை கமல்ஹாசனும், ரெட் ஜெயண்ட் நிறுவனம் இணைந்து வழங்க ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். இப்படத்தின் டைட்டில் அறிவிப்பு வீடியோ, கமல் பிறந்தநாளை முன்னிட்டு வெளியான நிலையில், ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியது. 

இப்படத்தில் ஜெயம் ரவி, துல்கர் சல்மான், த்ரிஷா, கௌதம் கார்த்திக், மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லக்‌ஷ்மி, விருமாண்டி புகழ் அபிராமி, நாசர் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜனவரி மாத இறுதியில் தொடங்கியது. சென்னையில் நடந்ததாக கூறப்பட்ட நிலையில், அடுத்த கட்ட படப்பிடிப்பு செர்பியாவில் நடத்த திட்டமிட்டிருந்ததாக சொல்லப்பட்டது. மேலும் அங்கு பணிகள் நடந்ததாக கூறப்படும் நிலையில், கமல் வருகை தரவில்லையாம். அவர் நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளதால் தேர்தல் முடிந்த பின்பு தான் படப்பிடிப்பில் கலந்து கொள்வதாக கூறப்பட்டு வருகிறது. இதனால் மணிரத்னம் உள்ளிட்ட படக்குழு தற்போது சென்னையில் இருப்பதாக திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

இதனிடையே தக் லைஃப் படத்திலிருந்து துல்கர் சல்மான் கால்ஷீட் பிரச்சனை காரணமாக விலகியுள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியானது. பின்பு அவருக்கு பதில் சிம்பு நடிக்கவுள்ளதாக கூறப்பட்டது. இதனை தொடர்ந்து ஜெயம் ரவியும் கால்ஷீட் பிரச்சனை காரணமாக விலகியுள்ளதாக தகவல் வெளியானது. பின்பு அவருக்கு பதில் நிவின் பாலியிடம் பேச்சு வார்த்தை நடந்ததாக முணுமுணுக்கப்பட்டது. இந்த நிலையில் ஜெயம் ரவிக்கு பதிலாக அருண் விஜய் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

ஏற்கனவே மணிரத்னத்துடன் செக்கச்சிவந்த வானம் படத்தில் அருண் விஜய் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது அவர் பாலா இயக்கும் வணங்கான் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பில் நடித்து வருகிறார்.