teja

கடந்த மார்ச் மாதத்திலிருந்து கரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்தியா முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில் அண்மையில் ஒருசில தளர்வுகளுடன் ஒருசில பணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

Advertisment

அந்த வகையில், தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் வெப் தொடர்கள் படப்பிடிப்புகளை குறைந்த எண்ணிக்கையில் தொழிலாளர்களை வைத்து நடத்திக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டது.

Advertisment

ஏற்கனவே தெலுங்கு தொலைக்காட்சி தொடர் படப்பிடிப்பில் பங்கேற்ற நடிகை நவ்யா சாமி, அவருடன் இணைந்து நடித்த ரவிகிருஷ்ணா ஆகியோருக்கு கரோனா தொற்று ஏற்பட்டது. பாஹர்வாடி என்ற இந்தி நகைச்சுவை தொடர் ஷூட்டிங்கில் பங்கேற்ற ஒருவர் கரோனா தொற்றில் பலியானார். அதே படப்பிடிப்பில் பங்கேற்ற மேலும் 8 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது.

இந்த நிலையில் தெலுங்கு வெப் சீரிஸ் படப்பிடிப்பில் கலந்து கொண்ட பிரபல இயக்குனர் தேஜாவும் தற்போது கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தேஜா தெலுங்கில் ஜெயம், சித்திரம், நேனு ராஜூ நேனு மந்திரி, ஒக்க வி சித்திரம், நிஜம் உள்பட பல வெற்றி படங்களை இயக்கியவர்.