Skip to main content

ஒன்றரை நிமிடத்தில் அவதார் உலகத்திற்குள் அழைத்து செல்லும் ஜேம்ஸ் கேமரூன்

Published on 10/05/2022 | Edited on 10/05/2022

 

James Cameron takes us to the Avatar world - avatar 2 teaser released

 

ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் 2009ம் ஆண்டு வெளியான படம் 'அவதார்'. 237 மில்லியன் டாலர் பொருட்செலவில் வெளியான இப்படம் 2.847 பில்லியன் டாலர் வசூல் செய்து வரலாற்று சாதனை படைத்தது. பிரம்மாண்டத்தின் உச்சத்தில் அமைந்திருக்கும் இப்படத்தின் காட்சிகள் பார்க்கும் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியது. இந்த படத்தின் இரண்டாவது பாகமான 'அவதார் 2' படத்தை 2017-ல் தொடங்கிய படக்குழு கடந்த ஆண்டு படப்பிடிப்பு நிறைவு செய்தது. 'அவதார்2' படத்தின் இறுதிக்கட்ட பணிகள் முடிவடைந்த நிலையில் இந்த படத்திற்கு 'அவதார்: தி வே ஆஃப் வாட்டர்' என தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது.

 

இந்நிலையில் 'அவதார்: தி வே ஆஃப் வாட்டர்' படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. ஒரு நிமிடத்திற்கு மேலாக ஓடக்கூடிய இந்த டீசரில் படத்தின் தலைப்பை போலவே கடலில் அதிக காட்சிகள் இடம்பெற்றிருக்கின்றன. மேலும் இந்த ஒன்றரை நிமிட டீசரிலேயே பார்ப்பவர்களை அவதார் உலகத்துக்கே கடத்தி செல்வது போல் இந்த டீசர் வெளியாகியுள்ளது. ஜேம்ஸ் கேமரூன் இயக்கி, கேமரூன் மற்றும் ஜான் லாண்டாவ் தயாரித்த இப்படத்தில் ஜோ சல்டானா, சாம் வொர்திங்டன், சிகோர்னி வீவர், ஸ்டீபன் லாங், கிளிஃப் கர்டிஸ் உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடித்துள்ளனர்.

 

 'அவதார்: தி வே ஆஃப் வாட்டர்' படம் 160 மொழிகளில் டிசம்பர் 16-ஆம் தேதி பிரம்மாண்டமாக திரையரங்கில் வெளியாகவுள்ளது. படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க முதல் பாகமான 'அவதார்' படத்தை செப்டம்பர் 23-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

 

 

 
 

சார்ந்த செய்திகள்

Next Story

‘உலக அரங்கில் இந்திய சினிமா’ - ஜேம்ஸ் கேமரூன் மகிழ்ச்சி

Published on 07/02/2024 | Edited on 07/02/2024
James Cameron about rajamouli rrr

51வது சாட்டர்ன் விருதுகள் நடந்து முடிந்த நிலையில் ஜேம்ஸ் கேமரூன் இயக்கிய அவதார் 2 படம் 4 விருதுகளை வென்றுள்ளது. இதற்காக விருது விழாவில் கலந்து கொண்ட இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன், இந்திய சினிமா குறித்து மகிழ்ச்சியடைவதாக தெரிவித்துள்ளார். 

கடந்த வருடம் நடந்த கிரிட்டிக்ஸ் சாய்ஸ் விருதுகள் விழாவில் ராஜமௌலியை சந்தித்து பேசிய ஜேம்ஸ் கேமரூன் ஆர்.ஆர்.ஆர் படம் குறித்து பாராட்டியிருந்தார். இந்த நிலையில் சாட்டர்ன் விருது விழாவில் ராஜமௌலியின் ஆர்.ஆர்.ஆர் படம் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, “நான் அவருடன் அந்த நேரத்தில் நேர்மையாக இருந்தேன். இது அற்புதமானது என்று நான் நினைத்தேன். இந்திய சினிமா உலக அரங்கில் கவனம் ஈர்ப்பதை பார்ப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது” என பதிலளித்தார். 

ராஜமௌலி இயக்கத்தில் 2022ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் ஆர்.ஆர்.ஆர். இப்படத்தில் ராம் சரண், ஜூனியர் என்டிஆர், ஆலியா பட் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். டிவிவி தானையா தயாரித்திருந்த இப்படம் கிட்டத்தட்ட ரூ.1200 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இப்படத்திற்கு கீரவாணி இசையமைத்திருந்த நிலையில் 'நாட்டு நாட்டு' பாடல் திரைத்துறையில் உயரிய விருதாகப் பார்க்கப்படும் ஆஸ்கர் விருதை தட்டிச் சென்றது. மேலும் ஆஸ்கர் பெற்ற முதல் இந்தியப் படம் என்ற பெருமையைப் பெற்றது.

Next Story

பரபரப்பைக் கிளப்பிய நீர்மூழ்கிக் கப்பல் விபத்து - டைட்டானிக் இயக்குநர் பகீர் தகவல்

Published on 24/06/2023 | Edited on 24/06/2023

 

James Cameron about Ocean Gate accident

 

உலகளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய டைட்டானிக் கப்பல் விபத்து, இப்போது 111 ஆண்டுகளை கடந்துள்ளது. இன்று வரை அக்கப்பலை நீர்மூழ்கிக் கப்பலில் சென்று மக்கள் பார்த்து வருகின்றனர். அப்படி கடந்த 18ஆம் தேதி கப்பலை பார்வையிட 5 பேர் கொண்ட குழு சென்றுள்ளனர். அந்த நீர்மூழ்கி கப்பல் காணாமல் போனதை அடுத்து அதில் பயணித்த 5 பேரும் உயிர் இழந்துவிட்டதாக அமெரிக்க கடலோரக் காவல்படை அறிவித்திருந்தது. 

 

இந்த சம்பவம் தற்போது பரபரப்பைக் கிளப்பிய நிலையில் டைட்டானிக் படத்தை இயக்கியவரும், டைட்டானிக் படத்திற்க்காக 33 முறை கடலுக்கு அடியில்  சென்று டைட்டானிக் கப்பலை பார்த்தவருமான இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் தற்போது பேசியுள்ளார். 

 

அவர் பேசுகையில், "நீர்மூழ்கி கப்பல் மூலம் செல்வது மோசமான யோசனை தான் என்று நான் முன்பே நினைத்தேன்.ஆனால் அதை கண்டுபிடித்தவர் என்னை விட புத்திசாலி என்றும் கருதினேன். இருப்பினும் நான் அந்த தொழில்நுட்பத்தை ஒருபோதும் பரிசோதிக்கவில்லை. காணாமல் போன நீர்மூழ்கிக் கப்பலில் வடிவமைப்புக் குறைபாடுகள் இருந்தது. மேலும் அந்த கப்பலின் முகம் பகுதி மோசமாக இருந்தது. அதோடு கப்பல் காணாமல் போன அதே நேரத்தில் பலத்த சத்தம் கேட்டது என்பதை ஒரு மணி நேரத்திற்குள் உறுதிப்படுத்தினோம்" என தெரிவித்தார்.