Skip to main content

“ஐ சீ யூ மார்வெல்”- வாழ்த்தா? சவாலா?... அவதார் இயக்குநர் ட்வீட்

Published on 23/07/2019 | Edited on 23/07/2019

டைட்டானிக், அவதார் என இரு பிரமாண்ட படங்களை இயக்கிய ஜேம்ஸ் கேமரூன் அவெஞ்சர்ஸ் டீமிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
 


 
கடந்த ஏப்ரல் 26ஆம் தேதி  ‘அவெஞ்சர்ஸ்: எண்ட் கேம்’ படம் உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதற்கு சாட்சியாக இப்படம் வசூல் வேட்டையில் இறங்கியது. உலகளவில் அதிக வசூல் பெற்ற படங்களின் வரிசையில் இரண்டாம் இடத்திலிருந்த டைட்டானிக் வசூலை முறியடித்து இரண்டாம் இடத்திற்கு முன்னேறியது அவெஞ்சர்ஸ் எண்ட் கேம். அவதார் படம் 2 பில்லியன் டாலரை 47 நாட்களில் கடந்து சாதனை படைத்திருந்தது. அந்த சாதனையையும் 11 நாட்களில் கடந்து முறியடித்துள்ளது. 
 

வசூல் சாதனையில் முதலிடத்திலுள்ள அவதார் சாதனையையும் முறியடிக்கும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. இந்நிலையில் ஜேம்ஸ் கேமரூன் அவெஞ்சர்ஸ் டீமிற்கு வாழ்த்து செய்தி ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

  
“கெவினுக்கும் மற்றும் அனைத்து மார்வெல் உறுப்பினர்களுக்கும், நிஜ டைட்டானிக் கப்பலை ஒரு பனிப்பாறை மூழ்கடித்தது. என்னுடைய டைட்டானிக்கை அவெஞ்சர்ஸ் மூழ்கடித்துவிட்டது. லைட்ஸ்டார்ம் என்டர்டெயின்மென்ட் உறுப்பினர்கள் அனைவரும் உங்களின் மகத்தான சாதனைக்குத் தலைவணங்குகிறோம். திரைப்படத் துறை துடிப்போடு இருக்கிறது என்று மட்டும் நீங்கள் காட்டவில்லை. அது முன்பை விட பெரியதாக இருக்கிறது என்பதையும் நிரூபித்திருக்கிறீர்கள்” என்று அந்த பதிவில் தெரிவித்துள்ளார். அவெஞ்சர்ஸ் லோகோ‘ஏ’டைட்டானிக் கப்பலை தலைகீழாக கவிழ்ப்பதுபோல அந்த பதிவில் படம் ஒன்று இருப்பது குறிப்படத்தக்கது.
 

 

இதனையடுத்து அவெஞ்சர்ஸ் படத்தின் வசூல் மெதுவாக குறைந்தது. இதனால் முதல் இடத்தை அவதார் தான் தக்க வைக்கும் என்று சொல்லப்பட்டது. உடனடியாக அவெஞ்சர்ஸ் தயாரிப்பு குழு ஜூன் 28ஆம் தேதி மீண்டும் ரி ரிலீஸ் செய்தது. 40 மில்லியன் எடுத்தால் முதலிடத்தை பிடித்துவிடலாம் என்கிற நிலையில் ரிலீஸாகி கடந்த சனிக்கிழமை முதல் இடத்தை பிடித்து அவதாரை இரண்டாம் இடத்திற்கு தள்ளியது. அவதார் படம் 2.79 பில்லியன் டாலர்களை சம்பாதித்துள்ளது. 
 

இந்நிலையில் அவதார் படக்குழு அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் டீமிற்கு வாழ்த்து தெரிவித்து. அதில், ஐ சீ யூ மார்வெல் என்றும் அவதார் மொழியிலும் எழுதிவிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘உலக அரங்கில் இந்திய சினிமா’ - ஜேம்ஸ் கேமரூன் மகிழ்ச்சி

Published on 07/02/2024 | Edited on 07/02/2024
James Cameron about rajamouli rrr

51வது சாட்டர்ன் விருதுகள் நடந்து முடிந்த நிலையில் ஜேம்ஸ் கேமரூன் இயக்கிய அவதார் 2 படம் 4 விருதுகளை வென்றுள்ளது. இதற்காக விருது விழாவில் கலந்து கொண்ட இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன், இந்திய சினிமா குறித்து மகிழ்ச்சியடைவதாக தெரிவித்துள்ளார். 

கடந்த வருடம் நடந்த கிரிட்டிக்ஸ் சாய்ஸ் விருதுகள் விழாவில் ராஜமௌலியை சந்தித்து பேசிய ஜேம்ஸ் கேமரூன் ஆர்.ஆர்.ஆர் படம் குறித்து பாராட்டியிருந்தார். இந்த நிலையில் சாட்டர்ன் விருது விழாவில் ராஜமௌலியின் ஆர்.ஆர்.ஆர் படம் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, “நான் அவருடன் அந்த நேரத்தில் நேர்மையாக இருந்தேன். இது அற்புதமானது என்று நான் நினைத்தேன். இந்திய சினிமா உலக அரங்கில் கவனம் ஈர்ப்பதை பார்ப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது” என பதிலளித்தார். 

ராஜமௌலி இயக்கத்தில் 2022ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் ஆர்.ஆர்.ஆர். இப்படத்தில் ராம் சரண், ஜூனியர் என்டிஆர், ஆலியா பட் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். டிவிவி தானையா தயாரித்திருந்த இப்படம் கிட்டத்தட்ட ரூ.1200 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இப்படத்திற்கு கீரவாணி இசையமைத்திருந்த நிலையில் 'நாட்டு நாட்டு' பாடல் திரைத்துறையில் உயரிய விருதாகப் பார்க்கப்படும் ஆஸ்கர் விருதை தட்டிச் சென்றது. மேலும் ஆஸ்கர் பெற்ற முதல் இந்தியப் படம் என்ற பெருமையைப் பெற்றது.

Next Story

பரபரப்பைக் கிளப்பிய நீர்மூழ்கிக் கப்பல் விபத்து - டைட்டானிக் இயக்குநர் பகீர் தகவல்

Published on 24/06/2023 | Edited on 24/06/2023

 

James Cameron about Ocean Gate accident

 

உலகளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய டைட்டானிக் கப்பல் விபத்து, இப்போது 111 ஆண்டுகளை கடந்துள்ளது. இன்று வரை அக்கப்பலை நீர்மூழ்கிக் கப்பலில் சென்று மக்கள் பார்த்து வருகின்றனர். அப்படி கடந்த 18ஆம் தேதி கப்பலை பார்வையிட 5 பேர் கொண்ட குழு சென்றுள்ளனர். அந்த நீர்மூழ்கி கப்பல் காணாமல் போனதை அடுத்து அதில் பயணித்த 5 பேரும் உயிர் இழந்துவிட்டதாக அமெரிக்க கடலோரக் காவல்படை அறிவித்திருந்தது. 

 

இந்த சம்பவம் தற்போது பரபரப்பைக் கிளப்பிய நிலையில் டைட்டானிக் படத்தை இயக்கியவரும், டைட்டானிக் படத்திற்க்காக 33 முறை கடலுக்கு அடியில்  சென்று டைட்டானிக் கப்பலை பார்த்தவருமான இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் தற்போது பேசியுள்ளார். 

 

அவர் பேசுகையில், "நீர்மூழ்கி கப்பல் மூலம் செல்வது மோசமான யோசனை தான் என்று நான் முன்பே நினைத்தேன்.ஆனால் அதை கண்டுபிடித்தவர் என்னை விட புத்திசாலி என்றும் கருதினேன். இருப்பினும் நான் அந்த தொழில்நுட்பத்தை ஒருபோதும் பரிசோதிக்கவில்லை. காணாமல் போன நீர்மூழ்கிக் கப்பலில் வடிவமைப்புக் குறைபாடுகள் இருந்தது. மேலும் அந்த கப்பலின் முகம் பகுதி மோசமாக இருந்தது. அதோடு கப்பல் காணாமல் போன அதே நேரத்தில் பலத்த சத்தம் கேட்டது என்பதை ஒரு மணி நேரத்திற்குள் உறுதிப்படுத்தினோம்" என தெரிவித்தார்.