Skip to main content

காரின் பதிவெண்ணிற்கு 34 லட்சங்களை செலவழித்த ஜேம்ஸ் பாண்ட் ரசிகர்!

Published on 28/11/2020 | Edited on 28/11/2020

 

aashik

 

சினிமா என்பதை பொழுதுபோக்கு அம்சமாக மட்டுமே பார்ப்பவர்களும் இருக்கிறார்கள். அதை மிகவும் நேசித்து, தனக்குப் பிடித்த சினிமாவிற்காகவும், சினிமா நட்சத்திரத்திற்காகவும் எந்த எல்லைக்கும் செல்லக் கூடியவர்களும் இருக்கிறார்கள். அகமதாபாத்தைச் சேர்ந்த ஆஷிக் படேல், இரண்டாவது வகை.

 

புகழ்பெற்ற துப்பறியும் கதாபாத்திரமான ஜேம்ஸ் பாண்டின் ரசிகரான இவர், சமீபத்தில் 39.5 லட்சத்திற்கு விலையுயர்ந்த காரினை வாங்கியுள்ளார். காருக்குப் பதிவு எண் வாங்குவதற்கு, அகமதாபாத்தின்  போக்குவரத்து அலுவலகத்தை தொடர்புகொண்ட இவர், ஜேம்ஸ் பாண்டின் '007' என்ற எண்ணைப் பதிவு எண்ணாகக் கேட்டுள்ளார். அது ஃபேன்சி எண் என்பதால், ஏலம் விடப்பட்டுள்ளது. ஏலத்தில், '007' எண்ணுக்குத் தொடக்க விலையாக, 25 ஆயிரம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

 

இதனைத் தொடர்ந்து, நடந்த ஏலத்தில், ஆஷிக் படேல் 34 லட்சத்திற்கு, '007' எண்ணை வாங்கியுள்ளார். அவருக்கு, "ஜி.ஜே.01.டபிள்யூ.ஏ.007" என்ற பதிவு எண்ணை, அகமதாபாத் போக்குவரத்து அலுவலம் வழங்கியுள்ளது. இதைப்பற்றி ஆஷிக் கூறுகையில், "நான் என் முதல் காருக்கு '007' என்ற எண்ணை வாங்கியிருக்கிறேன், இது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. இது பணத்தைப் பொறுத்தது அல்ல. இந்த எண், எனக்கு அதிர்ஷ்டத்தை தரும் என்ற என் நம்பிக்கையைப் பொறுத்தது" எனக் கூறியுள்ளார். காரின் பதிவெண்ணிற்காக, 34 லட்சம் வரை ஒருவர் செலவு செய்துள்ளது, பலரையும் திகைப்படையச் செய்துள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நரேந்திர மோடி 007 - ஜேம்ஸ் பாண்டோடு ஒப்பிட்டு கிண்டல் செய்த திரிணாமூல் காங்கிரஸ்!

Published on 20/10/2021 | Edited on 20/10/2021

 

pm modi as james bond

 

இந்திய பிரதமர் நரேந்திர மோடி, கடந்த 2014ஆம் ஆண்டு முதன்முதலாக பிரதமராக பதவியேற்றார். பின்னர் 2019 தேர்தலில் மீண்டும் வென்று இரண்டாவது முறையாக பிரதமரானார். இதன்மூலம் தொடர்ந்து 7வது வருடமாக மோடி, இந்தியாவின் பிரதமர் பதவியை வகித்துவருகிறார்.

 

மோடி, பிரதமர் பதவிக்கு வந்து ஏழு ஆண்டுகள் ஆகியுள்ளதை பாஜக தொண்டர்கள் கொண்டாடிவருகின்றனர். அதேநேரத்தில் காங்கிரஸ்,  திரிணாமூல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பிரதமர் மோடி தலைமையான ஆட்சியைக் கடுமையாக விமர்சித்துவருகின்றன.

 

இந்தநிலையில், திரிணாமூல் காங்கிரஸைச் சேர்ந்த எம்.பி.யான டெரெக் ஓ பிரையன், பிரதமர் மோடியை ஜேம்ஸ் பாண்ட் போல் சித்தரிக்கும் படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். கோட் - சூட்டுடன் ஜேம்ஸ் பாண்ட் போல பிரதமர் மோடி சித்தரிக்கப்பட்டிருக்கும் அந்தப் படத்தில் ‘they call me 007’ என்ற வாசகமும் இடம்பெற்றுள்ளது.

 

மேலும் அந்தப் படத்தில், 007 என்பது 0 முன்னேற்றம், 0 பொருளாதார வளர்ச்சி, 7 ஆண்டுகளாக இருக்கும் தவறான நிதி மேலாண்மை ஆகியவற்றைக் குறிப்பிடுவதாக கூறப்பட்டுள்ளது. இந்தப் படம் தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.

 

 

Next Story

முதல் 'ஜேம்ஸ் பாண்ட்' ஷான் கானரி ஏன் இறந்தார்? -வெளியான காரணம்...

Published on 01/12/2020 | Edited on 01/12/2020
shan connery

 

 

உலகளவில் மிகவும் புகழ்பெற்ற கதாபாத்திரம் ஜேம்ஸ் பாண்ட். இப்புகழ் பெற்ற கதாபாத்திரத்தில் நடிப்பவர்களுக்கும், ரசிகர்களிடையே புகழ் பெற்றுவிடுவார்கள். அந்தளவிற்கு சிறப்பான இந்த ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தில் முதன்முதலில் நடித்தவர் ஷான் கானரி. மேலும் இவர் 1962 முதல் 1983 வரை ஏழு ஜேம்ஸ் பாண்ட் படங்களில் நடித்துள்ளார்.

 

புகழ்பெற்ற நடிகரான ஷான்  கானரி,  கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி, அவரது இல்லத்தில் காலமானார். 90 வயதான அவரின் உயிர் தூக்கத்திலேயே பிரிந்தது. இதனைத்தொடர்ந்து உலகமெங்கிலும் உள்ள ஜேம்ஸ் பாண்ட் ரசிகர்கள், சமூகவலைதளங்கள் மூலமாக தங்கள் அஞ்சலியை செலுத்தினர்.

 

இந்தநிலையில், ஷான் கானேரியின் இறப்பு சான்றிதழ் தற்போது வெளியாகிவுள்ளது. அதில் ஷான் கானரி, நிமோனியாவாலும், இருதய செயலிழப்பு காரணமாகவும் மரணமடைந்ததாக அதில் கூறப்பட்டுள்ளது. மேலும் இருதய செயலிழப்பு, வயது முதிர்வினால் ஏற்பட்டது எனவும் கூறப்பட்டுள்ளது.