![jailer success sun pictures helped under privileged patients.](http://image.nakkheeran.in/cdn/farfuture/vKKr6V1kiiZ93XIwWPBcvqLA8EfF9GDHuCuidaEZUw8/1694090709/sites/default/files/inline-images/09_40.jpg)
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி, மோகன்லால், சிவராஜ் குமார், ஜாக்கி ஷெராஃப், தமன்னா, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த மாதம் 10 ஆம் தேதி வெளியான படம் ஜெயிலர். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. குறிப்பாக அனிருத்தின் பின்னணி இசை பலராலும் பாராட்டப்பட்டது.
வசூலிலும் உலகம் முழுவதும் ரூ. 600 கோடியைக் கடந்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஜெயிலர் படத்தின் வசூல் சாதனை படைத்துள்ளதையடுத்து ரஜினி, நெல்சன், அனிருத் ஆகியோரை சந்தித்து காசோலை மற்றும் விலையுர்ந்த கார்களை பரிசாக அளித்து மகிழ்ந்தார்.
இதனைத் தொடர்ந்து சன் பிக்சர்ஸ் நிறுவனம், 100 ஆதரவற்ற குழந்தைகளின் இதய அறுவை சிகிச்சைக்காக ரூ.1 கோடி வழங்கியது. இது சம்மந்தமாக சன் பிக்சர்ஸ் சார்பில் காவேரி கலாநிதி அப்பல்லோ மருத்துவமனையின் தலைவர் பிரதாப் ரெட்டியிடம் காசோலையை வழங்கினார். இதையடுத்து தற்போது ஏழை நோயாளிகளின் சிகிச்சைக்காக ரூ.60 லட்சம் மதிப்புள்ள காசோலையை டாக்டர் கல்பனா பாலகிருஷ்ணன் மற்றும் அடையார் கேன்சர் இன்ஸ்டிடியூட் செயல் துணைத் தலைவர் டாக்டர்.ஹேமந்த் ராஜாவிடம் காவேரி கலாநிதி வழங்கினார்.