'ஜெயில்' படத்தின் முக்கிய அறிவிப்பை வெளியிட்ட படக்குழு

jail movie new update out now

வசந்தபாலன் இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ், அபர்ணதி, ராதிகா சரத்குமார் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ஜெயில்'. இப்படத்தின் அனைத்து பணிகளும் முன்னரே நிறைவடைந்த நிலையிலும், கரோனா பரவல் காரணமாகப் படத்தை வெளியிடுவதில் சிக்கல் எழுந்தது. தற்போது கரோனாபரவல் குறைந்துள்ளதால் ஜெயில் படத்தைத்திரைக்குக் கொண்டு வருவதில் படக்குழு தீவிரம் காட்டி வருகிறது. ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படத்தின் திரையரங்கு வெளியீட்டு உரிமையைப் பிரபல தயாரிப்பு நிறுவனமான ஸ்டூடியோக்ரீன் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. படத்தின் டீசர், பாடல் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.

alt="ad" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="0c59fd69-45f1-47ea-9c02-617a8a15257c" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/jango-inside-news-ad_9.jpg" />

இந்நிலையில் படத்தின் முக்கிய அறிவிப்பைப் படக்குழு தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அதில்," ஜெயில் படத்திற்குத்தணிக்கை குழு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. விரைவில் படத்தின் ரிலீஸ் தேதியை அறிவிக்க உள்ளோம் " எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

சமீபத்தில் வெளியான ஜெயில் படத்தின் 'நகரோடி'பாடல் யூடியூப் தளத்தில் 1 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

GV prakash jail vasanthabalan
இதையும் படியுங்கள்
Subscribe