திட்டமிட்டபடி திரைக்கு வரும் 'ஜெயில்'... வெளியீட்டு உரிமையை கைப்பற்றிய பிரபல தயாரிப்பு நிறுவனம்

jail movie confirm release on dec9

வசந்தபாலன் இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ், அபர்ணதி, ராதிகா சரத்குமார் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ஜெயில்'. இப்படத்தின் அனைத்துப் பணிகளும்நிறைவடைந்த நிலையிலும், ‘ஜெயில்’ படத்தைத் திரைக்குக் கொண்டுவருவதில் படக்குழு தீவிரம் காட்டிவருகிறது. இப்படத்தை க்ரிக்ஸ்சினிமாஸ் கிரியேஷன்ஸ்நிறுவனம் தயாரிக்க, ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.டீசர், பாடல் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில், ‘ஜெயில்’ திரைப்படம் டிசம்பர் 9ஆம்தேதி திரையரங்கில் வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது.

இதனிடையே படத்தின் தயாரிப்பாளருக்கும், வெளியீட்டு உரிமையைக் கைப்பற்றிய ஸ்டூடியோக்ரீன்நிறுவனத்துக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.இதனால் 'ஜெயில்' படம் வெளியாகுமாஎன்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் எழுந்தது.

alt="ad" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="ab53bb25-3e4c-4acd-aaa6-66d443a9f4d8" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/ik-ad%20%281%29_8.jpg" />

இந்நிலையில், ‘ஜெயில்’ படம் திட்டமிட்டபடிடிசம்பர் 9ஆம்தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. மேலும், தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை எம்.எஸ்.எம். ஃபிலிம் டிரேடர்ஸ் நிறுவனம் சார்பில் எம். செண்பகமூர்த்தி கைப்பற்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

GV prakash jail vasanthabalan
இதையும் படியுங்கள்
Subscribe