Skip to main content

ஜீவஜோதியின் 18 வருட போராட்டம்; கையில் எடுத்த 'ஜெய் பீம்' இயக்குநர்

Published on 26/07/2022 | Edited on 26/07/2022

 

jai bhim director gnanavel next is dosa king

 

'கூட்டத்தில் ஒருவன்', 'ஜெய் பீம்' உள்ளிட்ட படங்களை இயக்கி ரசிகர்களிடம் பிரபலமானவர் ஞானவேல். குறிப்பாக உண்மை சம்பவத்தை தழுவி சூர்யாவை வைத்து ஞானவேல் இயக்கிய 'ஜெய் பீம்' படம் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த படத்திற்கு கிடைத்த வெற்றியை தொடர்ந்து தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களின் பட்டியலில் இணைந்தார் ஞானவேல். 

 

இந்நிலையில் ஞானவேல் இயக்கும் அடுத்த படத்தை பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. பிரபல தயாரிப்பு நிறுவனமான 'ஜங்க்லீ பிக்சர்ஸ்' இந்தியில் தயாரிக்கவுள்ள புது படத்தை 'தோசை கிங்' என்ற தலைப்பில் ஞானவேல் இயக்கவுள்ளார். இப்படத்தின் மூலம் இந்தியில் ஞானவேல் அறிமுகமாகவுள்ளார். இப்படம் பிரபல உணவு நிறுவனத்தின் நிறுவனர் ராஜகோபால் மீது அதிர்ச்சியூட்டும் குற்றங்களை சுமத்தி 18 வருட போராட்டத்திற்கு பிறகு அவருக்கு தண்டனை பெற்று தந்த ஜீவஜோதி வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகவுள்ளது. ஏற்கனவே கடந்த ஆண்டு 'ஜங்க்லீ பிக்சர்ஸ்' நிறுவனம் இதற்கான உரிமையை கைப்பற்றியிருந்தது.        

 

ராஜகோபால், கடந்த 2019-ஆம் ஆண்டு ஜீவஜோதியின் கணவர் சாந்தகுமாரைக் கொலை செய்த குற்றத்திற்காக ஆயுள் தண்டனை பெற்றார். மேலும் அந்த தண்டனை காலத்திலே ராஜகோபால் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.    

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“இந்தியா கூட்டணிக்கு வாக்களியுங்கள்” - ஜெய் பீம் இயக்குநர் வேண்டுகோள்

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
Jai Bhim director plea to Vote for India Alliance in election 2024

18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இதையொட்டி அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு தங்களது வேட்பாளர்களுடன் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

தமிழகத்தைப் பொறுத்தவரை தி.மு.க, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், வி.சி.க உள்ளிட்ட சில கட்சிகள் இந்தியா கூட்டணியிலும் பா.ஜ.க, பா.ம.க, த.மா.கா உள்ளிட்ட சில கட்சிகள் என்.டி.ஏ கூட்டணியிலும் அ.தி.மு.க, தே.மு.தி.க தனிக்கூட்டணியிலும் நாம் தமிழர் கட்சி தனித்தும், தேர்தலில் களம் காண்கின்றனர்.  

இந்த நிலையில் திரைப் பிரபலங்களும் வாக்குரிமையின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் வகையில் பேசி வருகின்றனர். ஏற்கெனவே விஜய் சேதுபதி, “நமக்காக இல்லைன்னாலும் நம்ம குழந்தைகளோட எதிர்காலத்திற்கும், நம்ம அடுத்த தலைமுறையோட எதிர்காலத்திற்கும் நிச்சயமா ஓட்டு போட வேண்டும். காசு வாங்கிட்டு ஓட்டு போடுவது, காசுக்காக ஓட்டை விற்பது எவ்ளோ பெரிய துரோகமோ, அதை விட பச்சை துரோகம் ஓட்டு போடாமல் இருப்பது” என விழிப்புணர்வு வீடியோவை வெளியிட்டிருந்தார். 

பின்பு விஜய் ஆண்டனியும் சமீபத்திய செய்தியாளர்கள் சந்திப்பில் அனைத்திலும் அனைவரும் ஓட்டு போட வேண்டும் என கூறி வந்தார். இவர்களை தொடர்ந்து இயக்குநர் த.செ ஞானவேல், “வாக்குரிமை என்பது என் உரிமைகளைக் காத்து, உணர்வுகளைப் புரிந்து ஆட்சி செய்கிற ஆட்சியாளர்களைத் தேர்ந்தெடுக்கும் சமூகக் கடமை” என அவரது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் அவர் பகிர்ந்துள்ள செய்திக் குறிப்பில், “வருங்கால தலைமுறையினருக்கு வெறுப்பு நிலவாத, சக இந்தியர்களின் தனித்துவத்தை மதிக்கிற பாதுகாப்பான சூழலை அமைத்து தருவது நமது தார்மீக கடமை. இந்தியா கூட்டணி கட்சிகளின் வாக்குறுதிகள் சமூக நல்லிணக்கத்தையும், சமூக நீதியையும் காப்பாற்றும் என்கிற நம்பிக்கை அளிக்கின்றன.

மாநில உரிமை, மொழி உரிமை, கருத்து உரிமை, கல்வி உரிமை போன்ற அடிப்படை உரிமைகளை மீட்டெடுப்பதும், காத்துக் கொள்வதும் அவசியம். அதன் அடிப்படையில் தி.மு.க, காங்கிரஸ், இடதுசாரிகள், விடுதலை சிறுத்தைகள் உள்ளடக்கிய இந்தியா கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களுக்கு வாக்களிக்கும்படி நானறிந்த, என்னை அறிந்த அனைவரிடமும் கேட்டுக்கொள்கிறேன்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 
 

Next Story

‘குறி வச்சா இரை விழணும்...’ - வேட்டையனாக வரும் ரஜினி

Published on 12/12/2023 | Edited on 12/12/2023
thalaivar 170 title released

ஜெயிலர் படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து தனது 170வது படத்திற்கு த.செ. ஞானவேலுடன் கூட்டணி வைத்துள்ளார் ரஜினி. லைகா தயாரிப்பில் அனிருத் இசையமைக்கும் இப்படம் 2024 ஆம் ஆண்டுக்குள் வெளியாகும் எனப் படக்குழு தெரிவித்துள்ளது. 

இப்படத்தில் துஷாரா விஜயன், ரித்திகா சிங், மஞ்சு வாரியர், ராணா டகுபதி, ஃபகத் ஃபாசில், அமிதாப் பச்சன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இதனால் படத்தின் எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. படப்பிடிப்பு கேரளாவின் திருவனந்தபுரத்தில் தொடங்கி திருநெல்வேலி, கன்னியாகுமரி, மும்பை உள்ளிட்ட பகுதிகளில் நடந்தது. இது தொடர்பான வீடியோக்கள் தொடர்ச்சியாக சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது. 

இதையடுத்து அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. இதில் கலந்துகொண்டு நடித்து வருகிறார் ரஜினி. இந்த நிலையில், ரஜினி தனது 73வது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார். இதை முன்னிட்டு இப்படத்தின் டைட்டில் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. ‘வேட்டையன்’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. மேலும் டீசரில் போலீஸ் கதாபாத்திரத்தில் ரஜினி வருகிறார். ‘குறி வச்சா இரை விழணும்...’ என ரஜினி பேசும் வசனம் ரசிக்க வைக்கிறது. இந்த டீசர் தற்போது சமூக வலைத்தலங்களில் வைரலாகி வருகிறது.