Skip to main content

“என்னவேணா பண்ணட்டும் ஆனால் தமிழன்தான் ஆள வேண்டும்”- ஜாக்குவார் தங்கம் ஆவேசம்

Published on 11/01/2020 | Edited on 11/01/2020

சரவணன் அபுபக்கர் இயக்கத்தில்‘எனக்கு ஒன்னு தெரிஞ்சாகனும்’ என்னும் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இயக்குனர் இமயம் பாரதிராஜா, சண்டை பயிற்சியாளர் ஜாக்குவார் தங்கம், நடிகர் விஜி உள்ளிட்ட பிரபலங்கள் கலந்துகொண்டனர். 
 

jaguar thangam

 

 

அப்போது பேசிய சண்டை பயிற்சியாளர் ஜாக்குவார் தங்கம்,  “ரஜினி ரசிகர்களுக்கு ஒரு வேண்டுகோள், உங்கள் தலைவரும் அரசியலுக்கு வருகிறேன் என்று கூறினார். நீங்களும் அவர் அரசியலுக்கு வரவேண்டும் என எதிர்பார்க்கிறீர்கள். ஆனால், நீங்கள் உங்களுடைய தலைவருடைய படத்தையே பாதுகாக்க முடியாதவர்கள் எப்படி ரசிகராக இருக்க முடியும் என்று தெரியவில்லை. எப்படி நீங்களெல்லாம் படங்களை திருட்டு தனமாக பார்க்க அனுமதிக்கிறீர்கள், பார்க்கிறீர்கள் என்று எனக்கு தெரியவில்லை. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இளையதளபதி விஜய், அஜித், சூர்யா என்று யாராக இருந்தாலும் சரி, நீங்கள் இந்த நிலைமைக்கு வருவதற்கு காரணம் ஒரு தயாரிப்பாளர். அவரை இப்பட் நஷ்டமடைய விடாதீர்கள். உங்களுடைய ரசிகர்களை வைத்து கண்டுபிடியுங்கள். இன்றைக்கு கண்டுபிடிக்க முடியாதது எதுவுமே இல்லை. சீக்கிரம் இதையெல்லாம் கண்டுபிடிக்க வேண்டும். 

சூப்பர் ஸ்டார் நினைத்தால் பிரதமர் மோடியிடம் சொல்லி தமிழ் ராக்கர்ஸை பிடிக்கலாம். அமெரிக்காக்காரன் குண்டு போட்டால் கூட கண்டுபிடித்துவிடலாம் என்று சொல்கிறார்கள். இந்த தமிழ் ராக்கர்ஸை மட்டும் எப்படி கண்டுபிடிக்க முடியவில்லை என்று ஆச்சரியமாக இருக்கிறது. ஹீரோ ஹீரோயின்கள் தயாரிப்பாளர் மண்ணாக போகட்டும் என நினைக்காதீர்கள். அவர்கள் நன்றாக இருந்தால் மட்டும்தான் நீங்கள் அனைவரும் நன்றாக இருக்க முடியும். 

யாரு படங்களை திருட்டுத்தனமாக பார்த்தாலும் நாங்களே சென்று அடிப்போம். அந்த காலத்தில் அப்படிதான் இருந்தது. இப்போது அப்படியில்லை. அந்தமாதிரிதான் நீங்கள் இருக்க வேண்டும் இல்லையென்றால் சினிமா அழிந்துவிடும். தமிழ்நாட்டில் மட்டும்தான் இந்த திருட்டத்தனமாக படங்களை பார்க்கின்றனர். அரசாங்கம் நினைத்தால் தமிழ் ராக்கர்ஸை ஈசியாக கண்டுபிடிக்கலாம். 

ஆந்திரா நமது சகோதர நாடுதான். வந்தாரை வாழ வைக்கும் தமிழ்நாடு ஆனால், ஆட்சி செய்யவிட மாட்டோம். அதில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம். எங்களை நாங்கள்தான் எங்களை ஆள வேண்டும். என்னா வேண்டுமானாலும் பண்ணட்டும் ஆனால் தமிழன் ஆட்சி பண்ண வேண்டும். தமிழ் சினிமாவில் கூட பல தொழில்நுட்ப கலைஞர்கள் பணிபுரிவார்கள். இதுவே ஆந்திராவிலோ, கர்நாடகாவிலோ போய் பாருங்கள். பணிபுரிய விடவே மாட்டார்கள். அந்த காலத்தில் கன்னட சினிமாவில் பணிபுரிந்ததர்காக இரவில் கத்தி எடுத்துக்கொண்டு குத்த வந்தார்கள்” என்று கூறினார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“மகிழ்ச்சி..” - அயோத்திக்கு புறப்பட்ட நடிகர் ரஜினி!

Published on 21/01/2024 | Edited on 21/01/2024
Actor Rajini left for Ayodhya!

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு விழா வருகிற 22 ஆம் தேதி பிரம்மாண்டமாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த தொடக்க விழாவில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள், திரைப் பிரபலங்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொள்ள உள்ளனர். ராமர் கோவில் திறப்பு விழாவையொட்டி உத்தரப் பிரதேச மாநிலத்தில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை மாநில அரசும், மத்திய அரசும் செய்து வருகிறது.

இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் இன்று காலை அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக விமானம் மூலம், உத்தரப்பிரதேசத்திற்கு புறப்பட்டார். அதேபோல், நடிகர் தனுஷும் ராமர் கோயில் திறப்பு விழாவில் பங்கேற்க உத்தரப்பிரதேசம் புறப்பட்டுள்ளார். இருவரும் ஒரே விமானத்தில் பயணிப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

ராமர் கோயில் அறக்கட்டளையின் அழைப்பை ஏற்று நடிகர் ரஜினிகாந்த் இன்று உத்தரப் பிரதேசத்திற்கு புறப்பட்டுள்ளார். முன்னதாக அவர் விமான நிலையத்திற்கு செல்வதற்குமுன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது செய்தியாளர்கள், ‘அழைப்பின் பேரில் ராமர் கோயில் திறப்பு விழாவில் பங்கேற்க செல்கிறீர்கள் எப்படி உணர்கிறீர்கள்’ என கேள்வி எழுப்பினர். 

அதற்கு பதில் அளித்த ரஜினிகாந்த், “மிகவும் மகிழ்ச்சியாக உணர்கிறேன்” என்று பதில் அளித்துவிட்டு சென்றார். 

Next Story

“சிந்தனையில் நேர்மை இருந்தால் மன நிம்மதியாக வாழ முடியும்” - நடிகர் ரஜினிகாந்த்

Published on 15/01/2024 | Edited on 15/01/2024
Actor Rajinikanth wishes his pongal celebration

தமிழர் திருநாளான பொங்கல் திருநாள் இன்று (15-01-2024) தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதனைத் தொடர்ந்து மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் கொண்டாடப்பட உள்ளது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் எனப் பலரும் பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். மேலும், மதுரை மாவட்டம், அவனியாபுரம் பகுதியில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது. இதில், 1000 காளைகள், 600 மாடுபிடி வீரர்கள் பங்கேற்று விளையாடிக் கொண்டிருக்கின்றனர். இந்த போட்டியைக் காண ஏராளமான மக்கள் பார்வையிட்டு வருகின்றனர். 

இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்த் தனது பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “பொங்கல் நல்வாழ்த்துகள். அனைவரும் ஆரோக்கியத்துடனும், மன நிம்மதியுடனும், மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமென்று இந்த பொன்னாளில் நான் இறைவனை வேண்டுகிறேன். வாழ்க்கையில் ஒழுக்கம், சிந்தனையில் நேர்மை இருந்தாலே வாழ்க்கை சந்தோஷமாக நிம்மதியாக இருக்கும்” என்று கூறினார்.