Skip to main content

"இது சினிமால ஒரு பெரிய பஞ்சாயத்தா இருக்கு... "- நடிகர் பரத் பேச்சு 

Published on 05/11/2022 | Edited on 05/11/2022

 

"It's a big panchayat in the cinema" - actor Bharath talks!

நடிகர் பரத் மற்றும் நடிகை வாணிபோஜன் நடித்துள்ள 'மிரள்' திரைப்பட ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னையில்  நேற்று (04/11/2022) நடைபெற்றது. 

 

விழாவில் பேசிய நடிகர் பரத், "ஒவ்வொரு படத்தோட ஆடியோ ரிலீஸ் ஆரம்பிக்கும்போது, அந்த படத்தோட ஜார்னி ஒன்னு இருக்கும். எடுத்தோனே, இமிடியெட்டா ஆரம்பிச்சோம், அந்த படத்த ரிலீஸ் பண்ணுனோம்கிறது என் லைஃப்ல நடந்ததே இல்ல. ஒவ்வொரு படத்துக்கும் ஒரு ஜார்னி இருக்கும். அதுல வந்து, ஒரு டைரக்டர் கதை சொல்லி; அந்த கதை எனக்கு புடிச்சு; அந்த டைரக்டருக்கு சம்டைம் புரொடியூசர் இல்லாம; திருப்பி, நான் உட்கார்ந்து என்னோட கான்டேக்ட் லிஸ்ட்லாம் நோண்டி; எந்த புரொடியுசர் என்னனு; இல்ல, சம்டைம்ஸ் அந்த டைரக்டருக்கு புரொடியூசர்ஸ் இருப்பாங்க, ஆனா கதை எனக்கு புடிக்காது. 

 

சார் வேற எதாவது படம் பண்லாமானு, அந்த புரொடியூசர்ட்ட கேட்டா, இல்ல சார் இந்த கதை தான் பெஸ்ட் கதை. இத தான் படமா பண்றோம்பாங்க. நல்ல கதை இல்லனு தெரிஞ்சு நான் போக முடியாது. இப்படி ஒவ்வொரு படத்துக்கும் ஒவ்வொரு ஹிஸ்ட்ரி இருக்கு எனக்கு. அப்படி ஆரம்பிச்சது தான் இந்த படம். சக்தி வந்து கத சொன்னாரு. கத சொல்லி முடிச்சி வேற சில காரணங்களால, அவரு எடுத்துட்டு வந்த புரொடியூசரோட படம் பண்ண முடியல. எனக்கு எப்படினா, நல்ல கதை வந்துருச்சு அப்படினாலே, அதுக்கு அப்புறம் எனக்கு தூக்கம் வராது. 

 

ஏன்னா, அந்த கதையில நான் கதாநாயகனா இருக்கணும். ரொம்ப கேப் விட்டோம்னா, அந்த டைரக்டர் வேற எங்கேயோ ஓடிப் போயிருவாரு. இது ஒரு பெரிய பஞ்சாயத்தா இருக்கு சினிமால. இது எனக்கு மட்டுமல்ல. எல்லா ஹீரோஸுக்கும் அப்படி தான். ஆக்ஸஸ் பிலிம் ஃபாக்டரில டெல்லி பாபு சாரோட மிகப்பெரிய ப்ளஸ் என்னனா, இமிடியெட்டா ரெஸ்பான்ஸ் பண்ணுவாரு. அது யாரு, என்ன, எப்படி கேட்டகிரி எதுமே கிடையாது. நான் போன் பண்ணி, மெசேஜ் பண்ணி அடுத்த நிமிஷமே எனக்கு கால் வந்துச்சு. நான் அவருட்ட எக்ஸ்பிளைன் பண்ணன். 

 

பிரஜாக்ட்டோட ஸ்ட்ரக்ச்சர எக்ஸ்பிளைன் பண்ணன். சார் இப்படி இருக்கு. ஒரு புது டைரக்டர் வந்து என்னை அப்ரோச் பண்ணிருக்காரு. எனக்கு ரொம்ப புதுசாப்படுது சார். இந்த கதையோட நிறைய விசயம் புதுசா இருக்கு. சொன்ன உடனே அப்படியே யோசிச்சாரு. ‘ஐ கால் யு பேக்  ஃபை மினிட்ஸ்’ அப்படினு சொல்லிட்டு, இமிடியெட்டா வந்துட்டு, எனக்கு போன் பண்ணி, நான் ஃபேக்டரில இருந்து வந்துட்டு இருக்கேன். த்ரீ ஓ கிளாக் போய் கதை சொன்னாரு. கதை சொல்லி முடிச்சி, ஃபியூ ஹவர்ஸில் லாக் தி பிலிம். எதுக்கு நான் இந்த ஜார்னிய சொல்ல வரனா, இது எடுத்த ஒரு டைரக்டர் கதை சொன்னாரு. உடனே அங்க போய் லாக் பண்ணி நடந்த ஒருநாள் விசயம் கிடையாது. 

 

இது மாதிரி ஒவ்வொரு படத்துக்குமே, எனக்கு இந்த மாதிரி ஜார்னி நடந்து, ஆனா ஒரு நல்ல படம் எங்கபோய் சேருமோ, அங்கு கரெக்டா போய் சேந்துடும்" எனத் தெரிவித்தார். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

"ரொம்ப எமோஷனலான மொமெண்ட் இது" - அபர்ணா தாஸ்

Published on 07/02/2023 | Edited on 07/02/2023

 

aparna das speech at kavin dada trailer launch event

 

அறிமுக இயக்குநர் கணேஷ் கே பாபு இயக்கத்தில் கவின் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'டாடா'. கவினுக்கு ஜோடியாக பீஸ்ட் படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்த அபர்ணா தாஸ் நடிக்கிறார். 'முதல் நீ முடிவும் நீ' புகழ் ஹரிஷ், ‘வாழ்’ புகழ் பிரதீப் ஆண்டனி உள்ளிட்ட பலரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஒலிம்பியா மூவிஸ் சார்பில் எஸ்.அம்பேத்குமார் தயாரிக்கிறார். இப்படத்தின் மூன்று பாடல்கள் மற்றும் டீசர் முன்னதாக வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்தது. 

 

இப்படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வரும் 10ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் ரெட் ஜெயண்ட் நிறுவனம் தமிழகத்தில் வெளியிடுகிறது. இதையொட்டி இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா அண்மையில் நடைபெற்றது. 

 

கதாநாயகி அபர்ணாதாஸ் பேசுகையில், “கதாநாயகியாக நான் நடித்த முதல் தமிழ் படம் இது என்பதால் எனக்கு எமோஷனலாக இருக்கிறது. கேரளாவுக்கு வந்து கதை சொன்னதில் இருந்து படம் முடியும் வரை எனக்கு உறுதுணையாக நின்ற என் இயக்குநர் கணேஷூக்கு நன்றி. என்னை இயக்குநரிடம் அறிமுகப்படுத்தியது கவின்தான். கவின் இல்லை என்றால் இந்தப் படத்தில் நான் இல்லை. தமிழ் சினிமாவில் இது என் சிறந்த தொடக்கமாக இருக்கும்” என்றார்.  

 

நடிகர் கவின் பேசுகையில், ”நான்கு வருடங்களாக ‘டாடா’ படத்திற்காக நாங்கள் திட்டமிட்டோம். இத்தனை வருடங்களும் நாங்கள் இந்தப் படம் சிறப்பாக வரவேண்டும் என்றுதான் உழைத்தோம். பிரதீப், பாலு நாங்கள் அனைவருமே கல்லூரி காலத்தில் இருந்தே நண்பர்கள். என் மேல் அவர் வைத்திருந்த நம்பிக்கைதான் இவ்வளவு தூரம் படத்தைக் கொண்டு வந்துள்ளது. எனக்குத் தெரிந்த பாபு இவ்வளவு மெச்சூர்டான கண்டெண்ட் யோசிப்பானா என்பது தெரியாது. ரெட் ஜெயண்ட் மூவீஸ் இந்தப் படத்தை ஒத்துக் கொண்டதற்கு நன்றி" என்றார். 

 

 

Next Story

இசை வெளியீட்டு விழாவில் பாக்யராஜ் சொன்ன குட்டிக்கதை

Published on 09/01/2023 | Edited on 09/01/2023

 

 A short story told by Bhagyaraj at the audio launch event

 

பாம்பூ ட்ரீஸ் சினிமாஸ் - அல் முராட் & சக்தி வேல் பிக்சர்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள படம் 'லாக்'. இப்படத்தை ரத்தன் லிங்கா எழுதி இயக்கி உள்ளார். இவர் ஏற்கெனவே சில குறும்படங்களை இயக்கியவர். 'அட்டு' என்ற திரைப்படத்தை இயக்கியதன் மூலம் வடசென்னை வாழ்வியலை பதிவு செய்தவர் என்ற முத்திரை பதித்தவர். 'லாக்' படத்தின் இசை வெளியீட்டு விழா பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது.

 

இந்நிகழ்வில் கலந்துகொண்ட இயக்குநர் கே.பாக்யராஜ் பேசும்போது வாழ்வில் பிரச்சனைகள் வருவது பற்றி ஒரு குட்டிக் கதையும் சொன்னார். இயக்குநர் கே.பாக்யராஜ் பேசியதில், “படத்தின் இயக்குநர் ரத்தன் லிங்கா பேசும்போது பல்வேறு சிரமங்கள், இடைஞ்சல்களைச் சந்தித்துத்தான் இந்தப் படம் உருவானது என்றார். நல்லது நடக்கும் போது இது மாதிரி இடையூறுகள் வந்துகொண்டு தான் இருக்கும். அதையும் தாண்டித்தான் வர வேண்டும். எவ்வளவு முயன்றாலும் வரவேண்டிய இடையூறுகள் வந்தே தீரும். எனக்கு இப்போது ஒரு கதை ஞாபகம் வருகிறது. 

 

மூன்று திருடர்கள் தினமும் விநாயகரை வேண்டிவிட்டு திருடப் போவார்கள். ஒன்றும் கிடைக்காவிட்டால் வந்து சண்டை போடுவார்கள். அப்படிப் பலநாள் எதுவும் கிடைக்கவில்லை. அன்று வேண்டும்போது, இன்று மட்டும் எதுவும் கிடைக்காவிட்டால் எங்களுக்கு கெட்ட கோபம் வரும் என்று எச்சரித்துவிட்டு திருடச் சென்றார்கள். அன்றும் ஒன்றுமே கிடைக்காதுபோகவே, ஒவ்வொருவராக விநாயகர் கோவிலுக்குள் கல் வீசினார்கள். ஆனால், மூன்றாவது திருடன் மட்டும் கொஞ்சம் தயங்கினான். விநாயகர் தண்டித்துவிட்டால் என்ன செய்வது? என்று பயந்து அந்தக் கல்லைத் தூக்கிக் கோயிலுக்கு வெளியே உயரமாக இருந்த மரத்தின் மீது வீசினான்.

 

அதே நேரத்தில் கண் வலித்தது. என்ன என்று பார்த்தால் எதிரே விநாயகர் நின்றார். தலையில் ரத்தத்தோடு. நான் எதுவுமே செய்யவில்லையே! நான் கல்லை கோயிலைத் தாண்டித்தானே வீசினேன்! என்றான். எனக்கு ஏன் இப்படி ஒரு தண்டனை கொடுத்தாய் விநாயகா? என்றான். அதற்கு விநாயகர், நீங்கள் இப்படி செய்வீர்கள் என்றுதான் நான் தான் மரத்தின் மீது ஏறி ஒளிந்து கொண்டு உட்கார்ந்திருந்தேன் என்றார். அதுபோல இடையூறுகள் எப்படியென்றாலும் வாழ்வில் வந்தே தீரும்.” என்று கூறினார்.