Skip to main content

பிரபல முன்னணி நடிகர் தன்னிடம் தவறாக நடக்க முயன்றார்- விஜய் பட நடிகை பரபரப்பு பேட்டி...

Published on 06/11/2019 | Edited on 06/11/2019

தமிழில் என் சுவாச காற்றே, விஜய்யுடன் நெஞ்சினிலே, விஜயகாந்துடன் நரசிம்மா உள்ளிட்ட படங்களில் ஹீரோயினாக நடித்தவர் ஈஷா கோபிகர். இதன்பின் தென்னிந்திய படங்களில் வாய்பு குறைந்தவுடன் பாலிவுட்டில் நடிக்க தொடங்கிவிட்டார்.
 

isha kopikar

 

 

சமீபத்தில் இவர் ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் தனக்கு 15 வயது இருக்கும்போது ஒரு பிரபல முன்னணி நடிகர் என்னிடம் பாலியல் உறவு வைத்துக்கொள்ள முயற்சி செய்தார் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

அந்த பேட்டியில் அவர் கூறியது. “பாலிவுட் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்த போது என்னை அழைத்த அந்த தயாரிப்பாளர், படத்தின் ஹீரோவைப் போய் பார்க்குமாறு கூறினார்.

அந்த நடிகர் டப்பிங் பணியில் ஈடுபட்டிருந்தார். நான் அந்த நடிகரை சந்தித்தபோது என்னுடன் யார் வந்திருப்பது என்று கேட்டார். நான் என்னுடைய கார் டிரைவருடன் வந்திருப்பதாகக் கூறினேன். மறுநாள் தனியாக வருமாறு அந்த நடிகர் என்னிடம் கூறினார். அப்போதே எனக்குப் புரிந்துவிட்டது. நான் மறுநாள் வேலையிருப்பதாகக் கூறி வெளியேறிவிட்டேன்.
 

miga miga avasaram


பின்னர் அந்த தயாரிப்பாளருக்கு போன் செய்து திறமைக்காக மட்டும் எனக்கு வாய்ப்பளியுங்கள் என்று கூறி, அந்த நடிகருடன் நடிக்க மறுத்துவிட்டேன். அப்போது எனக்கு 15 அல்லது 16 வயது இருக்கும்” என்றார்.

ஈஷா கோபிகரின் இந்த புகாரை அடுத்து மீடூ மூவ்மெண்டில் இருக்கும் பெண்கள் அவருக்கு ஆதரவாக ட்விட்டரில் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பாடகி சின்மயியும் இதுகுறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். “ 15 வயது பெண்ணை தன்னுடன் செக்ஸ் உறவு வைத்துக்கொள்ள நடிகர் அழைத்திருந்தால் அவர், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றவாளி . குழந்தைகள் மீது பாலியல் விருப்பம் கொள்பவர்கள் மீது போக்சோ சட்டத்தைப் பயன்படுத்தி சிறையில் தள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன்” என்று கூறியுள்ளார்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

விஜய் படம் பார்க்கும் சி.எஸ்.கே வீரர்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Ruturaj Gaikwad watch vijay leo movie

இந்தாண்டிற்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் லீக் போட்டிகள் கடந்த மாதம் 22ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் 5 முறை கோப்பையை வென்ற சென்னை சூப்பர் கிஸ் அணியை ருதுராஜ் கெயிக்வாட் தலைமை தாங்குகிறார். இளம் வீரரான இவர் தொடர்ந்து ஒவ்வொரு போட்டிகளிலும் தனது அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இதுவரை 8 போட்டிகலில் விளையாடி 4 போட்டிகளில் வெற்றியைப் பெற்றுள்ளார். 

இந்த நிலையில் ருதுராஜ் கெயிக்வாட், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விஜய்யின் லியோ படம் பார்ப்பதைப் போன்று ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். இதையடுத்து அந்தப் புகைப்படத்தை சி.எஸ்.கே ரசிகர்களும் விஜய் ரசிகர்களும் சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.

 

Ruturaj Gaikwad watch vijay leo movie

லியோ படம் விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த வருடம் வெளியானது. லலித் குமார் தயாரித்திருந்த இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். பல சிக்கல்களைத் தாண்டி வெளியான இப்படம் கலவையான விமர்சனத்தையே பெற்றது. இருப்பினும் ரூ.500 கோடிக்கு மேல் உலகம் முழுவதும் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.

Next Story

“சமத்துக் குழந்தை விஜய்” - கில்லி பட அனுபவம் பகிரும் ஒளிப்பதிவாளர் கோபிநாத்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
ghilli cameraman s. gopinath about vijay

விஜய், த்ரிஷா, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் தரணி இயக்கத்தில் கடந்த 2004ஆம் ஆண்டு வெளியான படம் கில்லி. ஏ.எம் ரத்னம் தயாரித்திருந்த இப்படத்திற்கு வித்யாசாகர் இசையமைத்திருந்தார். பாடல்கள் அனைத்தும் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. தெலுங்கில் மகேஷ்பாபு நடிப்பில் வெளியான ‘ஒக்கடு’ படத்தின் ரீமேக்கான இப்படம் ரசிகர்களின் ஏகோபத்திய வரவேற்பைப் பெற்று, விஜய் மற்றும் த்ரிஷா கரியரில் ஒரு மைல் கல் படமாக அமைந்தது. இன்றளவும் விஜய் ரசிகர்களின் ஃபேவரிட் படங்களில் முக்கியமான படமாக இப்படம் இருந்து வருகிறது.  

இந்த நிலையில் 20 வருடம் கழித்து 4கே டிஜிட்டல் தரத்தில் மெருகூட்டப்பட்டு கடந்த 20ஆம் தேதி கில்லி படம் ரீ ரிலிஸானது. புது விஜய் படம் வெளியானது போல் அவரது ரசிகர்கள் ஆர்வத்துடனும் ஆரவாரத்துடனும் படத்தை வரவேற்றனர். இரண்டு நாட்களில் ரூ.12 கோடி வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. ரசிகர்களின் வரவேற்பு குறித்து பிரகாஷ்ராஜ் மற்றும் த்ரிஷா, அவர்களது சமூக வலைத்தளப்பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டிருந்தனர். மேலும் ரீ ரிலீஸ் வரவேற்பு தொடர்பாக தயாரிப்பாளர் ஏ.எம் ரத்னம், இயக்குநர் தரணி மற்றும் படத்தை வெளியிட்ட விநியோகிஸ்தர் சக்திவேலன், விஜய்யை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். 

இந்த நிலையில் கில்லி படத்தின் ஒளிப்பதிவாளர் கோபிநாத், நக்கீரன் ஸ்டூடியோவுடனான பொக்கிஷம் நிகழ்ச்சியில் படம் அனுபவங்கள் குறித்து பகிர்ந்து கொண்டார். அப்போது விஜய்யை பற்றி அவர் கூறுகையில், “விஜய் தன்னை இயக்குநரிடம் முழுமையாக ஒப்படைத்து விடுவார். கதைகேட்கும் வரை இயக்குநரோடு என்ன பண்ணலாம் எப்படிப் பண்ணலாம் எனப் பேசுவார். ஆனால் ஒப்புகொண்ட பிறகு சமத்துக் குழந்தை போல் மாறிவிடுவார். அது புது இயக்குநராக இருந்தாலும் சரி. பெரிய இயக்குநராக இருந்தாலும் சரி. ஒரே மாதிரிதான் இருப்பார். அவரிடமிருந்து 100 சதவீதம் ஒத்துழைப்பு இருக்கும். அவரால் நமக்கு எந்த டென்ஷனுமே இருக்காது. அவரோடு ஒர்க் பண்ணிவிட்டு வெளியில் ஒர்க் பண்ணுவது கஷ்டம். எல்லாரும் அதே மாதிரி ஒத்துழைப்பு கொடுப்பார்கள் எனச் சொல்ல முடியாது” என்றார்.