Skip to main content

இளம் திறமையாளர்களுக்கு ஐசரி கணேஷ் ஏற்படுத்திக் கொடுக்கும் புதிய தளம்!

Published on 06/03/2021 | Edited on 06/03/2021

 

vels film

தயாரிப்பாளர் கலைமாமணி ஐசரி கணேஷ், வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல்ஸ் மூலம் பல புதிய இளம் திறமையாளர்களை தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்தி, வெற்றிபெறச் செய்துள்ளார். இந்நிறுவனத்தின் மூலம் மேலும் பல திறமையாளர்களின் திரைப்படங்கள் இந்தாண்டு வெளியாகவுள்ளன. இந்நிலையில் திரைத்துறையில் தங்கள் படைப்புகளின் வழியே சாதிக்க துடிக்கும்  திறமையாளர்களை அடையாளப்படுத்தும் விதமாக 'வேல்ஸ் சிக்னேச்சர் (Vels Signature)' எனும் புதிய தளமொன்றை ஐசரி கணேஷ்  நிறுவியுள்ளார். இந்நிறுவனம் 'கான்சப்ட் நோட் (Conzept Note)' நிறுவனத்துடன் இணைந்து செயல்பட உள்ளது.. திரைத்துறையில் குறும்படம், சுயாதீன இசை ஆல்பம் போன்றவற்றை உருவாக்கி இணைய வெளியில் அடையாளம் தேடும் புதிய திறமையாளர்களை ஊக்குவிக்கும் வகையில் இத்தளமானது செயல்படவுள்ளது.

 

ad

 

இது குறித்து 'கான்சப்ட் நோட்' சார்பாக ஷ்யாம் ஜாக் கூறிகையில், "தென்னிந்திய திரைத்துறையின் பெருமைமிகு அடையாளங்களில் ஒன்றான வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல்ஸ் நிறுவனத்துடன், திரைத்துறையில் ஆர்வத்துடன் சாதிக்க துடிக்கும் திறமையாளர்களை அடையாளப்படுத்தும் விதமான இந்த புதிய பயணத்தில் இணைந்திருப்பது பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது. திரைப்படங்களை போலவே குறும்படங்கள், இசை ஆல்பங்கள், டாக்குமெண்ட்ரி படங்கள் மக்களை சென்றடைவதில் பெரும் சிக்கல்களை சந்தித்து வருகின்றன. இதனை முற்றிலும் மாற்றும் வகையில் குறும்படங்கள் முதல் இளம் திறமையாளர்களின் படைப்புகளை பெரும் மக்கள் திரளிடம் எடுத்து செல்லும் பணியினை  'வேல்ஸ் சிக்னேச்சர்' நிறுவனம் செய்யவுள்ளது" எனக் கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“சினிமாவில் அவர் தான் எனக்கு எல்லாமே, அப்பா மாதிரி பார்க்கிறேன்” - ஆர்.ஜே பாலாஜி

Published on 24/01/2024 | Edited on 24/01/2024
rj balaji about Ishari Ganesh

கோகுல் இயக்கத்தில் ஆர்.ஜே பாலாஜி நடிப்பில் உருவாகியுள்ள படம் 'சிங்கப்பூர் சலூன்'. ஐசரி கணேஷ் தயாரித்துள்ள இப்படத்தில் மீனாட்சி சௌத்ரி, சத்யராஜ், லால் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படம் வருகிற 25ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த நிலையில் ஆர்.ஜே பாலாஜி,  மீனாட்சி சௌத்ரி, தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் ஆகியோரை நாம் சந்தித்தோம். அப்போது படம் தொடர்பான பல்வேறு விஷயங்களை மூவரும் பகிர்ந்திருந்தனர்.

அதன் ஒரு பகுதியில், ஐசரி கணேஷ் குறித்து பேசிய ஆர்.ஜே பாலாஜி, “எல்.கே.ஜி பட சமயத்தில் அவரை எனக்கு ரொம்ப பிடிக்கும். நன்கு தெரியும். பவர்ஃபுல்லான மனிதராகத் தான் அவரை பார்த்தேன். அதனால் தான் அரசியல் படம் எடுக்கிறோம், அது தடை இல்லாமல் எடுக்க வேண்டும், எங்க எல்லாத்திற்குமே தெரிந்த, பிடித்த நபரே தயாரிப்பாளராக இருக்க வேண்டும் என முடிவெடுத்தோம்.

அவரை ரொம்ப புடிக்கும், தெரிந்த மனிதர். இதையெல்லாம் தாண்டி, சினிமாவில் அவர் தான் எனக்கு எல்லாமே. மேலும் சினிமா சார்ந்த உறவாக மட்டும் இதைப் பார்க்கவில்லை. அப்பா மாதிரி தான் பார்க்கிறேன். எனக்கு தெரிந்த ஒருத்தர், அவரை ரொம்ப புடிக்கும். அதன் பிறகு சினிமாவில் அவர்தான் எல்லாமே. பின்பு அவர் சினிமாவிற்கு அப்பார்ப்பட்ட மனிதர். அப்படித்தான் அவரை நான் பார்க்க விரும்புகிறேன். இது எப்பவுமே மாறாது.

ஒரு தயாரிப்பாளராக அவரைப் பார்த்தால், இதுவரை நான் எடுத்த இரண்டு படத்திற்கு, ஒரு முறை கூட ஃபோன் பண்ணி என்ன நடக்குது அங்க என கேட்டதில்லை. என் மீது அவ்வளவு நம்பிக்கை வைத்திருக்கிறார். நானும் அதற்கு மதிப்பளித்து, கடினமாக உழைப்பேன். அந்த நம்பிக்கையை உடைத்திடக் கூடாதென பயப்படுவேன்” என்றார். 

Next Story

"5 திரைப்படங்கள் ரெடி" - பட்டியலிட்ட தயாரிப்பாளர் ஐசரி கணேஷ்

Published on 23/03/2023 | Edited on 23/03/2023

 

Vels Film International company listed his upcoming movies

 

தமிழ் சினிமாவில் 'தேவி', 'எல்.கே.ஜி', 'கோமாளி' என பல்வேறு படங்களை தயாரித்துள்ள நிறுவனம் வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல். இப்போது ஹிப் ஹாப் ஆதியின் 'பி.டி சார்', வருண் நடிக்கும் ஜோஷ்வா, இமை போல் காக்க உள்ளிட்ட சில படங்களை தயாரித்து வருகிறது. இந்த நிலையில் பங்கு சந்தை வர்த்தகத்தில் கால்பதித்துள்ளது வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம். இந்நிறுவனத்தின் பங்குகள் தேசிய பங்கு சந்தை வணிகத்தில் இன்று பட்டியலிடப்பட்டிருக்கிறது. இதற்கான பிரத்யேக தொடக்க விழா சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது. இதில் பங்கு சந்தை தொடர்பான பலரும் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்கள். 

 

மேலும் நடிகர்கள் சரத்குமார், ஜெயம் ரவி, விக்ரம் பிரபு, ஜீவா, ஹிப்ஹாப் ஆதி, ஆரி அர்ஜுனன், ஆரவ், பிரசாந்த் உள்ளிட்ட நடிகர்களும், இயக்குநரும் நடிகருமான சுந்தர்.சி, பேரரசு, ஆர்.வி.உதயகுமார், ஆர்.கே.செல்வமணி, கௌரவ் நாராயணன், நடிகை சங்கீதா கிரிஷ், இயக்குநர்கள் கோகுல், ஏ.எல்.விஜய், தமிழ்நாடு விநியோகஸ்தர்கள் சங்க நிர்வாகிகளில் ஒருவரான திருப்பூர் சுப்பிரமணியம் என திரையுலகினர் வருகை தந்தனர். 

 

இந்நிகழ்வில் வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவன தலைவரான ஐசரி கே கணேஷ் பேசுகையில், ''கிட்டத்தட்ட 45 ஆண்டுக்காலமாக எனக்கு தமிழ் திரையுலகத்துடன் தொடர்பிருக்கிறது. நான் பச்சையப்பன் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்தபோது ‘வாக்குமூலம்’ என்ற பெயரில் ஒரு படத்தை தயாரித்திருக்கிறேன். தயாரிப்பு மட்டுமல்ல 25 முதல் 30 திரைப்படங்கள் வரை நான் நடித்திருக்கிறேன். 25 படங்களை தயாரித்திருக்கிறேன். எனவே திரைத்துறையில் நல்ல அனுபவத்தையும், திரைத்துறையினரிடத்தில் நம்பிக்கையையும் பெற்றிருக்கிறேன். இதன் காரணமாக தற்போது பொதுமக்கள் பங்கேற்புடன் கூடிய பங்கு சந்தை வணிகத்தில் ஈடுபட உள்ளோம்.

 

எங்களது நிறுவனம், திரைப்படத் தயாரிப்புகளில் மட்டுமல்லாமல் திரைப்படத்தின் விநியோகம் மற்றும் திரையரங்கத் திரையிடல் ஆகியவற்றிலும் கவனம் செலுத்துகிறது. எங்கள் நிறுவனத்தின் சார்பில் பெங்களூரூவில் படப்பிடிப்பு வளாகம் மற்றும் தொழில்நுட்ப வசதிகளுடனான உள்ளரங்கத்துடன் கூடிய பொழுதுபோக்கு பூங்காவினை உருவாக்கி இருக்கிறோம். ஜூன் மாதம் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறக்கப்படவிருக்கிறது. இந்த ஜாலிவுட் எனப்படும் பொழுதுபோக்கு சாகச பூங்காவின் 77 சதவீத பங்குகளை வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் லிமிடெட் பெற்றிருக்கிறது. இது இந்தியாவிலேயே தலைசிறந்த தீம் பார்க்காக திகழும்.

 

ஜெயம் ரவி - ஏ.ஆர்.ரகுமான் ஆகியோர் கூட்டணியில் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் திரைப்படம் ஒன்று தயாராக உள்ளது. இதனைத் தொடர்ந்து நடிகர்கள் ஜீவா, அர்ஜுன் மற்றும் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா கூட்டணியில் பான் இந்திய திரைப்படம் ஒன்றும் தயாராகிறது. இதனை இயக்குநர் பா.விஜய் இயக்குகிறார்'' என்றார்.