Skip to main content

“அவருடைய மரணத்தை அதற்காக பயன்படுத்தாதீர்கள்” -பிரபல நடிகரின் மகன் வேண்டுகோள்

Published on 24/06/2020 | Edited on 24/06/2020
babil khan

 

கிரிக்கெட் வீரர் எம்.எஸ். தோனியின் வாழ்க்கை வரலாறு படத்தின் தோனியாக நடித்தவர் சுசாந்த் சிங் ராஜ்புத். இந்தி சின்னத்திரையில் நடித்து மிகவும் பிரபலமாகி, அதன்பின் பாலிவுட்டில் நடிகராக வலம் வந்தார். இவர் கடந்த ஜூன் 14ஆம் தேதி தனது பாந்த்ரா இல்லத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இது மிகப்பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. அவரது மரணத்திற்கு காரணம் பாலிவுட்டில் நடைபெறும் ‘நெபோடிஸம்’தான் என்று சமூக வலைதளங்களில் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன.

 

 

இந்நிலையில் அண்மையில் மறைந்த பாலிவுட் நடிகர் இர்ஃபான் கானின் மகன் பாபில் கான் நெபொடிஸத்தில் சுசாந்த் சிங் மரணத்தை பயன்படுத்தாதீர்கள் என்று நீண்ட பதிவை வெளியிட்டுள்ளார். 

 

 

அதில், “இன்னும் இதை ஏற்றுக் கொள்ளமுடியவில்லை. ஈடுபாடு மிக்க இரண்டு மனிதர்களை நாம் இழந்துவிட்டோம். ஈடுபாட்டுடன் இருப்பதே நமது ஆன்மீக பயணத்தின் திறவுகோல். சுஷாந்த் இந்த உலகை விட்டு புறப்பட்டுச் சென்றவிதம் அதிர்ச்சியளிக்கிறது. இயற்கையாகவே நாம் ஏதோ ஒன்றின் மீதோ அல்லது ஒருவரின் மீதோ பழியை சுமத்தி விடுகிறோம். இது பயனற்றது. ஏனெனில் மன அமைதிக்காக அடுத்தவர் மீது பழி சுமத்துவது நேர்மையான அமைதியாக இருக்கமுடியாது. அது ஒரு பொய்மையின் பிரதிபலிப்பாகவே இருக்கும்.

 

 

இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவத்துக்கு யார் மீதும் பழி சுமத்த வேண்டாம் என்று உங்களை கேட்டுக் கொள்கிறேன். காரணங்களை ஆராய வேண்டாம் ஏனெனில் அது இழப்பில் வாடுபவர்களை மேலும் நம்பிக்கை இழக்க வைக்கும்.

 

 

அதற்கு பதில் அந்த மனிதர்களின் வளர்ச்சியை கொண்டாடி, அவர்களுடைய ஞானத்தை நம் பயணத்தில் வெளிப்படுத்தி, அவர்களுடைய நினைவுகளின் சிறிய விளக்குகளை நம்முடைய ஆன்மாக்களில் ஏற்றுவோம்.

 

 

நல்லவற்றுக்கு துணை நில்லுங்கள் ஆனால் அதற்கு சுஷாந்தின் மரணத்தை துணைக்கு கொள்ளாதீர்கள். வாரிசு அரசியலை எதிர்க்க விரும்பினால் செய்யுங்கள், ஆனால் அதற்கு சுஷாந்தை ஒரு காரணமாக பயன்படுத்தாதீர்கள்” என்று தெரிவித்துள்ளார். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சுஷாந்த் சிங் போதை பழக்கத்திற்கு காதலி ரியா உடந்தை - குற்றப்பத்திரிகை தாக்கல்

Published on 13/07/2022 | Edited on 13/07/2022

 

Girlfriend Riya complicit in Sushant Singh's drug addiction - charge sheet filed by NCB by

 

இந்தி திரைப்பட நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட், கடந்த 2020-ஆம் ஆண்டு ஜூன் 14ஆம் தேதி மும்பையில் தற்கொலை செய்துகொண்டார். சுஷாந்த் சிங் தற்கொலை தொடர்பான வழக்கை மும்பை காவல்துறை, பீகார் காவல்துறை, போதைப் பொருள் தடுப்பு பிரிவினர், அமலாக்கத்துறை, சிபிஐ ஆகிய ஐந்து அமைப்புகள் விசாரித்தன. இது தொடர்பான வழக்கில் ரியா சக்ரவர்த்தி 2020-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் கைதாகி பின்பு ஒரு மாதம் கழித்து மும்பை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்றார். பின்பு போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் தற்போது வரை விசாரணை நடத்தி வருகின்றனர். 

 

இந்நிலையில் சுஷாந்த் சிங் தற்கொலை தொடர்பான வழக்கில் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பணியகம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். அதில் ரியா சக்ரவர்த்தி உள்ளிட்ட 35 பேர் மீது மொத்தம் 38 குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர். மேலும் அந்த அறிக்கையில், "ரியா சக்ரவர்த்தி, அவரது சகோதரர் ஷோயிக்,சாமுவேல் மிராண்டா உள்ளிட்ட பலரிடம் பலமுறை கஞ்சா வாங்கி மறைந்த நடிகர் சுஷாந்த் சிங்கிடம் வழங்கியுள்ளார். போதைப்பொருள் கடத்தலுக்கு நிதியுதவி செய்து அவரும் அதனை உட்கொண்டுள்ளார். குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் கடந்த 2020-ஆம் ஆண்டு மார்ச் முதல் டிசம்பர் வரை  போதைப்பொருட்களை வாங்க, விற்க, விநியோகம் செய்துள்ளனர்." என குறிப்பிடப்பட்டுள்ளது . 

 

ரியா சக்ரவர்த்தி போதை பொருட்களை இந்தியாவில் இருந்து ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்துள்ளார். இது தொடர்பாக அவர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் சுஷாந்தின் தீவிர போதைப் பழக்கத்திற்கு அவரின் காதலி ரியாவும் உடந்தையாக இருந்துள்ளார் என்பது உறுதியாகியுள்ளது.     
 

 

  

Next Story

சுஷாந்த் சிங்கின் குடும்ப உறுப்பினர்கள் கார் விபத்தில் பலி

Published on 16/11/2021 | Edited on 16/11/2021

 

Sushant Singh's family members killed in car accident

 

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டோனியின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்து பிரபலமான இந்தி திரைப்பட நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட், சென்ற ஆண்டு ஜூன் 14ஆம் தேதி மும்பையில் தற்கொலை செய்துகொண்டார். அவரது மரணத்திற்குக் காரணம், பாலிவுட்டில் நடக்கிற குடும்ப ஆதிக்கமே என்று சமூக ஊடகங்களில் பலரும் குற்றம்சாட்டினர். சுஷாந்த் சிங் தற்கொலை தொடர்பான வழக்கை மும்பை காவல்துறை, பீகார் காவல்துறை, போதைப் பொருள் தடுப்பு பிரிவினர், அமலாக்கத்துறை, சிபிஐ ஆகிய ஐந்து அமைப்புகள் விசாரித்தன. இருப்பினும், அவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்ற மர்மத்திற்கு இதுவரை அவர்களால் விடை கண்டுபிடிக்க முடியவில்லை.

 

ad

 

இந்நிலையில் சுஷாந்த் சிங்கின் குடும்பத்தை சேர்ந்த 5 பேர் கார் விபத்தில் பலியாகியுள்ளனர். ஹரியானா மாநிலத்தின் மூத்த காவல்துறை அதிகாரியாக இருக்கும்  ஓ.பி. சிங்கின் சகோதரி கீதா தேவியின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்ட பின்னர் அவர்கள் பாட்னாவில் உள்ள வீட்டிற்கு  திரும்பி கொண்டிருந்தனர்.  அப்போது பீகார் மாநிலத்தின் லக்கிசராய் மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்த கார் எதிரே வந்த ட்ரக் மீது  மோதி விபத்துக்குள்ளானது. இதில் சுஷாந்த் சிங்கின் குடும்ப உறுப்பினர்கள் உட்பட மொத்தம் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.