Advertisment

வெற்றிப்படத்தின் இரண்டாம் பாகம் பூஜையுடன் தொடக்கம்!

Indru Netru Naalai

விஷ்ணு விஷால், மியா ஜார்ஜ், கருணாகரன் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 2015-ஆம் ஆண்டு வெளியான படம் 'இன்று நேற்று நாளை'. ஆர்.ரவிக்குமார் இயக்கிய இப்படத்தை தயாரிப்பாளர் சி.வி.குமார் தயாரித்திருந்தார். தமிழ் சினிமாவிற்கு புதிய கதைக்களமான 'டைம் ட்ராவல்'-லை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட இப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளது என்ற தகவல் நீண்ட நாட்களாக வலம் வந்த நிலையில், இரண்டாம் பாகத்தின் பணிகள் இன்று (18/01/2021) பூஜையுடன் தொடங்கியுள்ளன.

Advertisment

படத்திற்கான கதையை இயக்குனர் ஆர்.ரவிக்குமார் எழுத, அறிமுக இயக்குனர் கார்த்திக் பொன்ராஜ் இயக்குகிறார். இரண்டாம் பாகத்தையும் தயாரிப்பாளர் சி.வி.குமார் தயாரிக்க, ஜிப்ரான் இசையமைக்கிறார்.இத்தகவலை தயாரிப்பாளர் சி.வி.குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Advertisment

actor vishnu vishal
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe