Skip to main content

அரசு அனுமதிக்காக காத்திருக்கும் 'இந்தியன் 2' படக்குழு!

Published on 20/05/2020 | Edited on 20/05/2020

 

indian 2


நடிகர் ரஜினிகாந்த நடித்த '2.0' படத்தைத் தொடர்ந்து ஷங்கர் இயக்கத்தில் நடிகர் கமலஹாசன் நடித்தும் வரும் படம் 'இந்தியன் 2'. 

இந்தப் படம் ஆரம்பத்ததிலிருந்து ஏதாவது தடை ஏற்பட்டு ஷூட்டிங் தள்ளிப்போய்க்கொண்டே இருந்தது. இடையே ஷூட்டிங் நடைபெற்று, பின்னர் இடைவெளி அதன்பின் ஷூட்டிங். இப்படித்தான் 'இந்தியான் 2' பட ஷூட்டிங் நடைபெற்று வந்தது.
 


அண்மையில் சென்னையிலுள்ள ஈ.வி.பி. ஃபிலிம் சிட்டியில் பிரம்மாண்ட அரங்கு அமைத்து ஷூட்டிங் நடைபெற்றது. அப்போது, திடீரென ராட்சத கிரேன் விழுந்து மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி இறந்தனர், 9 பேருக்கு காயம் ஏற்பட்டது.

இதன்பின்னர், இது மிகப்பெரும் சர்ச்சையைத் திரையுலகில் உண்டாக்கியது. இது தொடர்பான விசாரணை இன்னும் முடிவு பெறவில்லை. இந்த விபத்தினால் 'லைகா' நிறுவனம் - நடிகர் கமல் இருவருக்கும் அறிக்கை போர் ஏற்பட்டது.

இதனையடுத்து, கரோனா பரவல் காரணமாக சினிமா ஷூட்டிங் கடந்த மூன்று மாதங்களாக நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் கடும் பொருளாதார இழப்பை 'லைகா' நிறுவனம் சந்தித்திருப்பதாகவும், 'இந்தியன் 2' படத்தைக் கைவிடப்போவதாகவும் கடந்த வாரம் சொல்லப்பட்டது.
 

 


இதனிடையே தமிழக அரசு எடிட்டிங், டப்பிங் போன்ற பணிகள் செய்ய அனுமதி வழங்கியதை அடுத்து 'இந்தியன் 2' படத்தின் எடிட்டிங் இரண்டு இடங்களில் நடைபெற்று வருவதால் 'இந்தியன் 2' படம் கைவிடப்படவில்லை என்று நம்பிக்கை தருகிறது. மேலும், லாக்டவுன் முடிந்தவுடன் ஷூட்டிங்கை 'பின்னி மில்'லில் வைக்க படக்குழு திட்டமிட்டு, அதற்கான முதற்கட்ட பணிகளில் இறங்கியிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நெருங்கும் நாடாளுமன்றத் தேர்தல்; குழு அமைத்த கமல்ஹாசன்

Published on 30/01/2024 | Edited on 30/01/2024
Parliamentary elections approaching; Kamal Haasan announce Team

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. பல்வேறு அரசியல் கட்சிகளும் தேர்தலுக்கான தேர்தல் பணிக்குழு மற்றும் கூட்டணி தொகுதிப் பங்கீடு ஆகிய விஷயங்களைத் தீவிரப்படுத்தி வருகின்றனர். திமுக தனது கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தைகளைத் தொடங்கியுள்ளது.

இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் சார்பில் தேர்தல் பணி ஒருங்கிணைப்புக் குழுவை கட்சித் தலைமை அறிவித்துள்ளது.  மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் ஒருங்கிணைப்புக் குழு குறித்த தகவலை வெளியிட்டுள்ளார். ஏ.ஜி. மௌரியா, தங்கவேலு, அருணாச்சலம் ஆகியோர் அடங்கிய தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. தேர்தல் தொடர்பான செயல் திட்டங்களை உருவாக்கவும், செயல்படுத்தவும் இவர்களுக்கு வழிகாட்டுதல் அளிக்கப்பட்டுள்ளதாக கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

Next Story

'அது ஒரு கருவிதான்'-பணம் குறித்து கமல்ஹாசன் பேச்சு

Published on 24/09/2023 | Edited on 24/09/2023

 

'It's a tool' - Kamal Haasan talks about money

 

கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் பணம் குறித்து உரையாற்றிய பேச்சு இணையத்தில்  வைரலாகி வருகிறது.

 

கமல்ஹாசன் பேசியதாவது, ''என்னோட அனுபவத்தில் சொல்கிறேன். மூச்சு இல்லாமல் 40 செகண்ட் அல்லது ஒரு நிமிடம் தாங்குவோம். தண்ணி இல்லாமல் ஆறு ஏலு நாட்கள் தாங்குவோம். சாப்பாடு இல்லாமல் பத்து நாட்கள் தாங்குவோம். அதைவிட பணம் எப்படி முக்கியமாக இருக்க முடியும். இதையெல்லாம் வாங்குவதற்கு அது ஒரு கருவி. ஆண்களுக்கு புரியும்படி சொல்ல வேண்டும் என்றால் தாடி வைக்க வேண்டுமா அல்லது மழிக்க வேண்டுமா என்பது உங்களுடைய இஷ்டம். அதை நீங்கள் பிளேடு கிட்டப் போய் கேட்டுக் கொண்டிருக்கக் கூடாது. அதுவெறும் கருவி தான். அதுவா சொல்லும் வேணாம் தாடிய கொஞ்சம் நீளமாகவே வச்சுக்கோ அல்லது முழுவதும் சவரம் பண்ணிக்க, இல்ல மீசை மட்டும் வச்சுக்க என பிளேடுக்கு சொல்லத் தெரியாது. அவ்வளவுதான் பணமும். அது பேசாமடந்தை.

 

நான் சினிமா நடிக்க வந்த பொழுது இப்படி எல்லாம் நடிக்க முடியுமா என்று பலர் இருந்தனர். முக்கியமாக என் ஏரிக்கரையில் தெரிந்த முதல் சூரியன் சிவாஜி. அதன் பிறகு தான் இப்படி ஒரு கேலக்ஸி இருக்கிறது என்றே தெரியும். அதற்கு காரணம் எனக்கு கோனார் நோட்ஸ் கொடுத்து பொழிப்புரை சொல்லி அனுப்பி வைத்தவர் சிவாஜி சார் தான். நான் உங்களுக்குச் சொல்லிக் கொள்வதெல்லாம் இன்னொரு சிவாஜி ஆகவேண்டும் என நான் நினைக்கவே இல்லை. இன்னொரு சிவாஜி வருவாரா என்று கூட கேட்கவில்லை'' என்றார்.