Skip to main content

''பிகில் படத்தில் நடிச்சப்ப இருந்த சந்தோஷம், இப்ப உங்க கூட இருக்கும்போதும் இருக்கு'' - இந்துஜா

Published on 21/10/2019 | Edited on 21/10/2019

'உதவும் உள்ளங்கள்' தொண்டமைப்பு வருடந்தோறும் பல்வேறு அமைப்புகளில் உள்ள ஆதரவற்ற குழந்தைகளை ஒன்று திரட்டி அவர்களுக்காக 'ஆனந்த தீபாவளி' என்ற நிகழ்வை நடத்தி வருகின்றனர். இந்த வருடம் சுமார் 1222 குழந்தைகள் 'ஆனந்த தீபாவளி' நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். நேற்று நடந்த இந்நிகழ்வில் நடிகைகள் இந்துஜா, அதுல்யா ரவி கலந்து கொண்டு குழந்தைகளுடன் இணைந்து தீபாவளி கொண்டாடினர்.

 

indhuja athulaya

 

 

அப்போது நிகழ்வில் நடிகை இந்துஜா இந்நிகழ்ச்சி குறித்து பேசியபோது... ''இந்த வருடம் தீபாவளி கொண்டாட்டமாக நான் தளபதி விஜய்யுடன் நடித்த பிகில் படம் திரைக்கு வருகிறது. இப்படத்தில் நடிப்பதற்கு என்னை அணுகிய போது நான் எவ்வளவு சந்தோஷம் அடைந்தேனோ, அதே சந்தோஷம் உங்களை இன்று சந்தித்தபோது அடைந்தேன். மேலும் இந்த அமைப்பின் நிறுவனர் திரு. சங்கர் மகாதேவன், மற்றும் இந்த அமைப்பின் நலம் விரும்பி திருமதி. கிருத்திகா உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்” என்றார்.

 

மேலும் நடிகை அதுல்யா ரவி பேசும்போது... “உலகில் அனைவரும் ஒருவருக்கொருவர் உதவிசெய்து வந்தால், ஆதரவற்றோர் என்று யாரும் இருக்கமாட்டார்கள். எனவே நம்மால் முடிந்த உதவியை இயலாதவர்களுக்கு செய்து அவர்களின் வாழ்க்கை முன்னேற்றதிற்கு பாதை வகுக்க வேண்டும்” என்றார்.


 

சார்ந்த செய்திகள்