இந்தியாவின் 75 வது சுதந்திர தின விழா நேற்று (15.8.2022) நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி கொடியேற்ற, மற்ற மாநிலங்களில் அந்தெந்த மாநில முதல்வர்கள் கொடியேற்றி வெகு விமர்சையாக சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. மேலும் பிரதமரின் கோரிக்கையை ஏற்று அரசியல் கட்சித் தலைவர்கள். திரை பிரபலங்கள் என பல்வேறு தரப்பினரும் தங்களது வீட்டில் கொடியேற்றிக் கொண்டாடினர்.
அந்த வகையில் பீச் ஃப்ரெண்ட்ஸ் குரூப் சார்பில் சென்னை பெசன்ட் நகர் பீச்சில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. மீடியா 95 பழனி ராஜ் தலைமையில் தேசியக் கொடியேற்றப்பட்டு பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.