ilaiyaraja

Advertisment

Advertisment

சென்னையில் முதன்முறையாக சிறப்பு ஒலிம்பிக் சர்வதேச கால்பந்து போட்டி இன்று ஆகஸ்ட் 3ஆம் தேதி முதல் 6ஆம் தேதி வரை கோலாகலமாக நேரு விளையாட்டு அரங்கில் நடைபெறவுள்ளது. இதன் தொடக்கவிழா இன்று மதியம் 3 மணிக்கு தொடங்குகிறது. இந்த விழாவில் முதன்மை விருந்தினராக இசைஞானி இளையராஜா கலந்துகொண்டு கால்பந்தாட்டத்தை தொடங்கி வைக்கிறார். இதில் மொத்தம் 15 நாடுகளை சேர்ந்த 168 வீரர்கள் அடங்கிய 21 அணிகள் பங்கேற்று விளையாடவுள்ளது. மேலும் இதன் நிறைவு விழா மாலை 5.30 மணிக்கு நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறவுள்ளது. இதில் மாண்புமிகு விளையாட்டு மற்றும் கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் கலந்துகொண்டு நிறைவு உரையாற்றவுள்ளார்.