ADVERTISEMENT
ADVERTISEMENT
இதுவரை 1000 படங்களுக்கு மேல் இசையமைத்து பல்வேறு நெஞ்சங்களில் குடிகொண்டிருக்கும் இசைஞானி இளையராஜா உலகமெங்கும் பல்வேறு இசை நிகழ்ச்சிகள் நடத்தி வருகிறார். அந்தவகையில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் இளையராஜாவை வைத்து ‘இசைராஜா - 75’ என்ற இசை திருவிழா நடத்த தற்போது முடிவு செய்யப்பட்டுள்ளது. தயாரிப்பாளர்கள் நலனுக்காக நடத்தும் இந்த மாபெரும் இசை நிகழ்ச்சிக்காக இளையராஜாவுடன் தயாரிப்பாளர் சங்கம் இன்று ஒப்பந்தம் போட்டுள்ளது. மிகவும் பிரமாண்டமாக நடைபெற இருக்கும் இந்த இசை திருவிழா அடுத்த வருடம் ஜனவரியில் நடக்கவுள்ளது.
Show comments