Skip to main content

"விஜய் தேவரக்கொண்டாவுக்கு தெரியாமல் இது நடந்திருக்க வாய்ப்பில்லை" - பிரபல நடிகை குற்றச்சாட்டு

Published on 10/06/2023 | Edited on 10/06/2023

 

ijay Deverakonda anasuya issue

 

தெலுங்கு திரையுலகில் நடிகையாக வலம் வருபவர் அனுசுயா பரத்வாஜ். தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக பிரபலம் அடைந்தார். அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான 'புஷ்பா' படத்தில் சுனிலுக்கு மனைவியாக நடித்து பலரது கவனம் பெற்றார். இப்போது தமிழ் மற்றும் தெலுங்கில் நேற்று வெளியாகியுள்ள 'விமானம்' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதனால் ப்ரோமோஷன் பணிகளில் பிசியாக உள்ளார்.

 

அந்த வகையில் ஒரு பேட்டியில் விஜய் தேவரக்கொண்டா ரசிகர்களுக்கும் இவருக்கும் ஏற்பட்ட பிரச்சனை பற்றி கூறியுள்ளார். அவர் கூறுகையில், "நானும் விஜய் தேவரக்கொண்டாவும் நீண்ட காலமாக நண்பர்களாக இருந்தோம். அப்போது எந்த பிரச்சனையும் இல்லை. அர்ஜுன் ரெட்டி வெளியான போது ஒரு திரையரங்கிற்கு விஜய் தேவரக்கொண்டா சென்றிருந்தார். அப்படத்தில் அவர் மோசமான வசனங்கள் பேசியிருந்த நிலையில் திரையில் அந்த வசனங்கள் மியூட் செய்யப்பட்டன. அப்போது ரசிகர்களிடம் அந்த வசனத்தை பேசுமாறு சொன்னார். ரசிகர்களும் அந்த வசனத்தை சத்தமாக கத்தினர். படத்தில் ஒரு மோசமான கதாபாத்திரத்தில் அவர் நடித்துள்ளார். அது பரவாயில்லை. 

 

ஆனால் நிஜத்தில் அதை ஏன் ரசிகர்களிடம் ஊக்குவிக்கிறார். ஒரு தாயாக இந்த சம்பவம் வேதனையை அளிக்கிறது. இது குறித்து விஜய் தேவரக்கொண்டாவிடம் பேசினேன். தயவு செய்து நிஜ வாழ்க்கையில் இதுபோன்ற விஷயங்களை ஊக்குவிக்க வேண்டாம் என்று கூறியிருந்தேன். ஆனால் அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் என்னை தொடர்ந்து விமர்சனம் செய்து வந்தனர். ரசிகர்களை அவர் கட்டுப்படுத்தவில்லை. மேலும் அவரது குழுவில் இருக்கும் ஒரு முக்கிய நபர் எனக்கு எதிராக தொடர்ந்து கருத்து தெரிவித்து வருகிறார். விஜய்க்கு தெரியாமல் இது நடந்திருக்க வாய்ப்பில்லை. அவரது தூண்டுதலின் பெயரில் தான் நடக்கிறது" எனத் தெரிவித்தார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

காவல் நிலையத்தை நாடிய விஜய் தேவரகொண்டா

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
vijay devarakonda family star trol complaint issue

கீதா கோவிந்தம் பட இயக்குநர் பரசுராம் இயக்கத்தில் மீண்டும் விஜய் தேவரகொண்டா நடித்துள்ள தெலுங்கு படம் ஃபேமிலி ஸ்டார். விஜய் தேவரகொண்டாவிற்கு ஜோடியாக மிருணாள் தாக்கூர் நடித்திருக்க திவ்யன்ஷா கவுசிக், அஜய் கோஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தில் ராஜு தயாரித்துள்ள இப்படத்திற்கு கோபி சுந்தர் இசையமைத்துள்ளார். 

இப்படம் கடந்த 5ஆம் தேதி தெலுங்கு, தமிழ், இந்தியில் வெளியான நிலையில் கலைவையான வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் சமூக வலைத்தளங்களில் ட்ரோல்களுக்கும் உள்ளாக்கப்பட்டது. வசூல் ரீதியாகவும் பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை. இந்த நிலையில் ட்ரோல்களுக்கு எதிராக விஜய் தேவரகொண்டா தரப்பில் காவல் துறையில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. 

விஜய் தேவரகொண்டாவின் மேலாளர் அனுராக் மற்றும் அவரது ரசிகர் மன்ற தலைவர் நிஷாந்த் குமார் அளித்த புகாரில், “விஜய் தேவரகொண்டாவின் வளர்ச்சியை விரும்பாதவர்கள் இப்படத்திற்கு எதிராக சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். தனிநபராகவும் குழுக்களாகவும் இதை செய்து வருகின்றனர். இதன் காரணமாக படத்தின் வசூல் பாதிக்கப்பட்டுள்ளது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த சூழலில் விஜய் தேவரகொண்டா தன் தரப்பில் புகார் எதுவும் கொடுக்கப்படவில்லை என்று கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Next Story

திரைப்படமாகும் உண்மை சம்பவம் - நடிகைக்கு கொலை மிரட்டல்

Published on 08/04/2024 | Edited on 08/04/2024
raime sen maakaali poster issue

இந்தி மற்றும் பெங்காலி படங்களில் கவனம் செலுத்தி வருபவர் ரைமா சென். இப்போது இந்தியில் மாகாளி என்ற தலைப்பில் ஒரு படம் நடித்து வருகிறார். இப்படம் 16 ஆகஸ்ட் 1946 அன்று கல்கத்தாவில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்ட சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகிறது. இந்த சம்பவம் இந்தியாவை உலுக்கியது குறிப்பிடத்தக்கது. விஜய் யேலகண்டி இயக்கும் இப்படத்தை விஷ்வ பிரசாத் தயாரிக்க அனுராக் ஹல்டர் இசையமைக்கிறார். 

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கின் போஸ்டர் கடந்த 4ஆம் தேதி வெளியானது. அதில் இந்து மதத்தை குறிக்கும் வகையில் காளி தோற்றத்தில் ஒரு புறமும் முஸ்லீம் மதத்தை குறிக்கும் வகையில் ஹிஜாப் அணிந்த தோற்றத்தில் ஒரு புறமும் இணைந்து இருக்கும் முகம் கொண்ட புகைப்படம் இடம் பெற்றிருந்தது. இந்த போஸ்டரை தொடர்ந்து தொலைப்பேசி வாயிலாக தனக்கு மிரட்டல் வருவதாக ரைமா சென் தெரிவித்துள்ளார். 

raime sen maakaali poster issue

இது தொடர்பாக அவர் கூறுகையில், “மர்ம நபர்களால் பெங்காலி மற்றும் இந்தியில் அலைபேசி கால்கள் வருகிறது. சுசித்ரா சென்னின் பேத்தியாக இருந்த நான் எப்படி படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன் என்பதைப் பொறுத்து மிரட்டல்கள் வந்தன. எதிர்காலத்தில் கொல்கத்தாவில் தான் நீ இருக்க வேண்டும். அதை நினைவில் வைத்துக்கொள் என்கிறார்கள். முதலில் படத்தைப் பார்த்துவிட்டு தங்கள் கருத்தைச் சொல்லுங்கள் என்று நான் மக்களைக் கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.