Skip to main content

நான் பட வாய்ப்புக்காக போஸ் கொடுக்கவில்லை -  ரகுல் பிரீத்தி சிங்

Published on 19/02/2018 | Edited on 20/02/2018
rakulpreet


தமிழ், தெலுங்கில் பிசியாக நடித்து வரும் ரகுல் பிரீத்தி சிங் ஹிந்தியில் நடித்த 'அய்யாரி' படம் சமீபத்தில் வெளியானது. இதனையடுத்து சமீபத்தில் இவருடைய கவர்ச்சி படம் ‘மேக்ஸிம்’ என்ற ஆங்கில பத்திரிகை அட்டையில் வெளியான நிலையில் இதை பற்றி தென்இந்திய பட உலகில் பரபரப்பாக பேசப்பட்டது. இந்நிலையில் இது குறித்து விளக்கமளித்து ரகுல் பிரீத்தி சிங் பேசுகையில்...."மேக்ஸிம் ஆங்கில புத்தக அட்டை படத்தில் இடம் பெறும் வாய்ப்பு யாருக்கும் எளிதாக கிடைத்து விடாது. அந்த இதழுக்கு நான் கவர்ச்சி போஸ் கொடுத்துவிட்டதாக தென்இந்தியாவில் தான் பரபரப்பாக பேசிக்கொள்கிறார்கள். ஆனால் இந்தி படஉலகில் இது பெரிய விஷயமே இல்லை. 'அய்யாரி' என்ற இந்தி படத்தில் நான் நடித்திருப்பதால் தான் இந்த வாய்ப்பு என்னை தேடி வந்தது. இந்தி சினிமாவில் நடித்து வரும் தீபிகா படுகோனே, ராதிகா ஆப்தே, பிரியங்கா சோப்ரா உள்பட பல நடிகைகள் இந்த பத்திரிகைக்கு கவர்ச்சி போஸ் கொடுத்து இருக்கிறார்கள். நடிகைகள் தங்கள் உடலை நேர்த்தியாக வைத்து இருக்கிறார்கள் என்பதை வெளிப்படுத்த இதுபோன்ற வாய்ப்புகள் பயன்படுகின்றன. பட வாய்ப்புக்காக இது போன்று போஸ் கொடுக்கவில்லை" என பேசினார்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

சிவகார்த்திகேயனின் 'அயலான்' - அப்டேட் வெளியீடு!

Published on 26/11/2020 | Edited on 26/11/2020

 

sivakarthikeyan

 

நடிகர் சிவகார்த்திகேயன், நெல்சன் இயக்கத்தில் 'டாக்டர்' என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை, கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது.  'டாக்டர்' படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடைந்த நிலையில், ஒரே ஒரு பாடல் காட்சி மட்டும் மீதம் இருக்கிறது.

 

இந்நிலையில், 'டாக்டர்' படத்திற்குப் பிறகு, சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவர இருக்கும் 'அயலான்' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு, இன்று தொடங்கியுள்ளது. 'டாக்டர்' படத்தை தயாரிக்கும் கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் நிறுவனமே இப்படத்தையும் தயாரிக்கிறது. படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தொடங்கியுள்ளதை பட நிறுவனம், தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. 

 

அயலான் படத்தில் சிவகார்த்திகேயனின் ஜோடியாக, ரகுல் ப்ரீத் சிங் நடிக்கிறார். இவர்களோடு, யோகி பாபு, கருணாகரன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இப்படத்தை ஆர்.ரவிக்குமார் இயக்குகிறார்.

 


 

Next Story

தன் கதாபாத்திரம் குறித்து விளக்கமளித்த ரகுல் பிரீத்திசிங்

Published on 26/02/2018 | Edited on 26/02/2018
rkl


தமிழ், தெலுங்கு, ஹிந்தி படங்களில் நடித்து பிரபலமாகி பின் தீரன் படத்தின் மூலம் தமிழில் ரீ எண்டரி கொடுத்த ரகுல் பிரீத்திசிங், அதன் பின் ஸ்பைடர் படத்தில் நடித்தார். தற்போது சூர்யா நடிப்பில், செல்வராகவன் இயக்கும் புதிய படத்தில் நடிக்கிறார். இந்நிலையில் ரகுல் பிரீத்திசிங் தற்போது நடிக்கும் படங்களில் இரண்டாவது  நாயகியாக நடிக்கிறார் என்று செய்திகள் பரவலாக வெளியானது. இதுகுறித்து பதில் அளித்து ரகுல் பிரீத்திசிங் பேசுகையில்....."நான் தற்போது நடிக்கும் படங்களில் முதன்மை நாயகியாகத் தான் நடித்து வருகிறேன். நான் நடிக்கும் படங்களில் வேறு நாயகிகளும் நடிக்கிறார்கள். என்றாலும், அவர்களை காரணம் காட்டி எனது பாத்திரத்தை எந்த இயக்குனரும் டம்மி ஆக்கவில்லை. இரண்டாவது நாயகியாகவும் நடிக்கவில்லை. எந்த படத்திலாவது, மற்ற நடிகைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து விட்டு என்னை இரண்டாவது நாயகி ஆக்கினால், நான் அந்த படத்தில் இருந்து வெளியேறி விடுவேன்" என்றார் ஆவேசமாக.