Skip to main content

“கற்றது தமிழ் படம்போல இனி பண்ணமாட்டேன்”- நடிகர் ஜீவா திட்டவட்டம்...

Published on 03/02/2020 | Edited on 03/02/2020

ரத்தின சிவா இயக்கத்தில் ஜீவா நடிப்பில் உருவாகியுள்ள படம் சீறு. இந்த படத்திற்கு இசயமைப்பாளர் டி.இமான் இசயமைக்க, ஐசரி கணேஷ் தயாரித்திருக்கிறார். இந்த படம் வருகிற 7ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸாக இருக்கும் நிலையில் படம் குறித்து பிரத்யேகமாக நமக்கு பேட்டியளித்தார் ஹீரோ ஜீவா. 
 

jiiva

 

 

அப்போது அவரிடம்,‘சிவா மனசுல சக்தி’ போன்ற ஜாலியான படங்களும் பண்ணுங்க, அதேபோல கற்றது தமிழ், ரௌத்திரம் பழகு, ராம் போன்ற படங்களிலும் கவனும் செலுத்துங்கள் ஜீவா என்று உங்களுடைய ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தெரிவிக்கின்றனர் என்று கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த ஜீவா, “அந்த ஜானரில்தான் ஜிப்ஸி என்கிற படம் பண்ணியிருக்கிறேன். ராம், கற்றது தமிழ் படங்கள் ரிலீஸ் சமயத்திலும் பல பிரச்சனைகள் வந்தன. கற்றது தமிழ் மாதிரி படம் இனி நான் எப்போதும் பண்ண மாட்டேன். அந்த படம் அப்போது பார்க்கும்போதும் மன அழுத்தத்தை தரும், இப்போது பார்க்கும்போதும் ஏதாவது ஒரு வகையில் மன அழுத்தத்தை தரும். அனைவரும் ஏதோ விஷயத்தால் நெகட்டிவ்வாக பாதிக்கப்பட்டிருப்பார்கள். அதை நாம் அப்பட்டமாக வெளியே காட்ட வேண்டும் என அவசியமில்லை. நெகட்டிவ் இருந்தாலும் எல்லாவற்றையும் மீறி லைஃபில் பாஸிட்டிவ்வாக இருக்க வேண்டும் என்றுதான் படங்கள் பண்ணுகிறேன். கற்றது தமிழ் படம் பலருக்கு நெகட்டிவ்வாக பட்டது, அதேபோல பாஸிட்டிவ்வாகவும் பட்டது. அது ஒரு கேள்விக்குள் இருக்கும் படம். சிவா மனசுல சக்தி பார்த்தீர்கள் என்றால் அந்த காலக் கட்டத்திற்கு ஏற்றார்போல் என்னுடைய வயதிற்கு ஏற்றார்போல அந்த படத்தை பண்ணினேன். அதன்பின் நிறைய படங்கள் பண்ணேன், ஒரு இடத்தில் இரண்டு மூன்று வருடங்கள் இடைவெளி வந்துவிட்டது. அதன்பின் திருநாள் போன்ற படங்கள் ஒருசில ஆடியன்ஸை கவர்ந்தது. நீங்கள் சொல்லும் ஆடியன்ஸ் எல்லாம் இண்டர்நெட் மற்றும் நகரத்தில் வசிக்கும் ஆடியன்ஸ் சொல்கிறீர்கள். நான் சொல்வது வீட்டில் இருக்கும் குட்டி குழந்தைகள், ஃபேமிலி அப்படி சொல்கிறேன். நான் முன்பை போல வித்தியாச வித்தியாசமான படங்கள் பண்ணிக்கொண்டுதான் இருக்கிறே. ஆனால், அது யாரும் வெளிச்சம்போட்டு காட்ட மாட்டிங்கிறாங்கள்” என்றார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திரையரங்கில் அடிதடி - தொண்டர்களால் பரபரப்பு

Published on 08/02/2024 | Edited on 08/02/2024
yatra 2 fans fight between jegam mogan reddy pawan kalyan

தெலுங்கில் ஆந்திர மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகியுள்ளது. இதனை இயக்குநர் மஹி வி ராகவ் இயக்கியுள்ளார். இவர் இதற்கு முன்னதாக ஜெகன் மோகன் ரெட்டியின் அப்பாவான மறைந்த ஆந்திர முதலமைச்சர் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டியின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுத்தவர். 'யாத்ரா' என்ற தலைப்பில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான இப்படத்தில் ராஜசேகர ரெட்டி கதாபாத்திரத்தில் மம்மூட்டி நடித்திருந்தார். இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. 

இதனைத் தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகமாக ஜெகன் மோகன் ரெட்டியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து 'யாத்ரா 2' என எடுக்கப்பட்டுள்ளது.  ஜெகன் மோகன் கதாபாத்திரத்தில் ஜீவா நடித்துள்ள இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துளளார். இப்படம் இன்று வெளியான நிலையில், ஜெகன் மோகன் ரெட்டி தொண்டர்கள் திரையரங்கிற்கு வந்து மேள தாளத்துடன், வெடி வெடித்துக் கொண்டாடினர்.  

இந்த நிலையில் ஹைதராபாத்தில் உள்ள ஒரு திரையரங்கில், படம் ஓடிக்கொண்டிருக்கும் பொழுது ஜெகன் மோகன் ரெட்டி தொண்டர்களுக்கும் பவன் கல்யாண் ரசிகர்களுக்கும் கைகலப்பு ஆகியுள்ளதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. பவன் கல்யாணின் ‘கேமராமேன் கங்காதோ ராம்பாபு’ படம் கடந்த 7 ஆம் தேதி ரீ ரிலீஸாகியுள்ளது. இந்த சூழலில் இந்த தொண்டர்களின் அடிதடி சம்பவம் நடந்துள்ளதாகத் தெரிகிறது. இந்த சம்வவம் அப்பகுதியில் சற்று பரபரப்பு நிலவியது.

Next Story

முதலமைச்சராக கவனம் ஈர்த்த ஜீவா

Published on 05/01/2024 | Edited on 06/01/2024
jiiva as cm jegan mogan reddy in yatra 2

தெலுங்கில் ஆந்திர மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகிறது. இதனை இயக்குநர் மஹி வி ராகவ் இயக்கவுள்ளார். இவர் இதற்கு முன்னதாக ஜெகன் மோகன் ரெட்டியின் அப்பாவான மறைந்த ஆந்திர முதலமைச்சர் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டியின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுத்தவர். 'யாத்ரா' என்ற தலைப்பில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான இப்படத்தில் ராஜசேகர ரெட்டி கதாபாத்திரத்தில் மம்மூட்டி நடித்திருந்தார். இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. 

இதனைத் தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகமாக ஜெகன் மோகன் ரெட்டியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்படும் நிலையில், ஜெகன் மோகன் கதாபாத்திரத்தில் ஜீவா நடித்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இப்படம் அடுத்த மாதம் பிப்ரவரி 8 ஆம் தேதி வெளியாகவுள்ளது. கடந்த அக்டோபர் மாதம் ஃபர்ஸ்ட் லூக் போஸ்டர் வெளியானது.  

இந்த நிலையில் இப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. ஆரம்பத்தில் ஒரு கண் தெரியாத நபர், ஜெகன் மோகன் ரெட்டி படம் பொருந்திய பதாகை வைத்துக் கொண்டு இரவு நேரத்தில் உட்காந்திருக்கிறார். அவரிடம் ஜெகன் மோகன் கதாபாத்திரத்தில் நடிக்கும் ஜீவா பேசும் காட்சி வருகிறது. பின்பு அவருக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இருந்த முரண்பாடுகள் குறித்த காட்சிகள் இடம்பெறுகிறது. தொடர்ந்து அவர் நடத்திய யாத்ரா, சட்டமன்றத்தில் நடக்கும் விஷயங்கள் என நீள்கிறது. இந்த டீசர் தற்போது ரசிகர்களின் கவனத்தைப் பெற்று வருகிறது.