Skip to main content

“அஜித்குமாருடன் ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும்”- பிரபல இந்தி நடிகை விருப்பம்

Published on 27/04/2019 | Edited on 27/04/2019

‘நேர்கொண்ட பார்வை’ படத்தை அடுத்து மீண்டும் எச்.வினோத் இயக்கத்தில்தான் அஜித் நடிக்க இருக்கிறார் என்று சொல்லப்படுகிறது. நேர்கொண்ட பார்வை படத்தை தயாரிக்கும் போனி கபூர்தான் அஜித்தின் அடுத்த படத்தை தயாரிக்கிறார் என்று முன்னரே அதிகாரப்பூர்வ தகவல் வெளியானது.
  

neetu chandra

 

 

நேர்கொண்ட பார்வை இந்தி படமான பிங்க் படத்தின் ரீமேக். அது வருகிற ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாகிறது. தற்போது, அடுத்த படத்துக்காக அஜித்திடம் ஆக்‌ஷன் த்ரில்லர் கதை ஒன்றை சொல்லியிருக்கிறார் எச்.வினோத் என்றும், அந்தப் படத்தை 2020-ம் ஆண்டு ஜனவரி மாதம் வெளியிட தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டு வருகிறது என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

 
முன்னதாக இப்படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் கடந்த ஏப்ரல் 10ஆம் தேதி ட்விட்டரில், “நேர்கொண்ட பார்வை படத்தைப் பார்த்தேன். நடிப்பில் அஜித் மிரட்டியிருக்கிறார். விரைவில் இந்திப் படங்களில் நடிப்பார் என்று எதிர்பார்க்கிறேன். அவருக்காக 3 ஆக்‌ஷன் கதைகள் தயாராக இருக்கின்றன. அதில் ஒன்றையாவது தேர்ந்தெடுப்பார் என்று நம்புகிறேன்” என்று பதிவிட்டிருந்தார்.
 

இந்த பதிவுக்கு பதில அளித்த நடிகை நீத்து சந்திரா, ‘சூப்பர் ஸ்டார் அஜித்குமாருடன் ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும். எனக்கு மிகவும் பிடித்த நடிகர் அஜித். அவரை பாலிவுட்டில் நடிக்க சம்மதிக்க வையுங்கள். அது இந்தி சினிமாவுக்கே பெருமை.  உங்களுக்கு வாழ்த்துகள்’ என்று பதிவிட்டுள்ளார். தமிழில் மாதவனுடைய யாவரும் நலம், விஷாலின் தீராத விளையாட்டுப் பிள்ளை ஆகிய படங்களில் நடித்தவர் நீத்து சந்திரா. தமிழ் மட்டுமல்லாது, இந்தி, தெலுங்கிலும் பல படங்களில் நடித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'திரியும் நெருப்பும் காதல் கொண்டால்...' - மீண்டும் கமலுடன் இணையும் ஹாரிஸ் ஜெயராஜ்

Published on 06/10/2023 | Edited on 06/10/2023

 

Harris Jayaraj in kamal vinoth movie

 

கமல்ஹாசன் தற்போது 'இந்தியன் 2' படத்தில் நடித்து வருகிறார். ஷங்கர் இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இதில் காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி ஷங்கர், சித்தார்த் என ஏகப்பட்ட பிரபலங்கள் நடிக்கின்றனர். 

 

இதனை முடித்துவிட்டு தனது 233வது படத்திற்காக அ. வினோத்துடன் கைகோர்த்துள்ளார். இப்படத்தை கமலின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்திற்காகத் துப்பாக்கி பயிற்சி மேற்கொள்ளும் கமலின் வீடியோ சமீபத்தில் வெளியானது. இப்படம் அரசியல் கதைக் களத்தை மையமாகக் கொண்டு உருவாவதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து தனது 234வது படத்திற்காக மணிரத்னத்துடன் கைகோர்த்துள்ளார். இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். இப்படத்தையும் மணிரத்னம் தயாரிப்பு நிறுவனத்தோடு கமலின் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. 

 

இந்த நிலையில், கமலின் 233வது படத்தின் இசையமைப்பாளர் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன்னதாக கமலுடன் வேட்டையாடு விளையாடு படத்தில் பணியாற்றியிருந்தார். அதில் அனைத்துப் பாடல்களும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதைத் தொடர்ந்து இரண்டாவது முறையாக மீண்டும் கமலுடன் இணையவுள்ளதாகத் தெரிகிறது. 

 

 

Next Story

கமல்ஹாசன் - ஹெச்.வினோத் கூட்டணியின் புது அப்டேட்!

Published on 07/09/2023 | Edited on 07/09/2023

 

KamalHaasan233 update

 

சதுரங்க வேட்டை திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் இயக்குநர் ஹெச். வினோத். படம் மாபெரும் வெற்றி பெற்றதை அடுத்து தொடர்ச்சியாக நடிகர் அஜித்தை வைத்து நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு ஆகிய மூன்று படங்களை இயக்கினார். மூன்று படங்களுமே வசூல் ரீதியாக மாபெரும் வெற்றியைப் பெற்ற படங்களாகும். அதற்கு பிறகு முன்னணி நடிகர்கள் பலர் இயக்குநர் ஹெச். வினோத்தை அணுகி தனக்கு ஒரு கதை பண்ணுமாறு அணுகி வந்தனர். 

 

நடிகர் கமல்ஹாசனும் புதிய தலைமுறை இயக்குநர்களுடன் இணைந்து பணியாற்ற ஆர்வம் கொண்டிருக்கிறார். சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது இயக்குநர் ஹெச். வினோத் - நடிகர் கமல்ஹாசன் கூட்டணியில் புதிய படம் உருவாகி வருகிறது. இந்நிலையில்  இப்படத்திற்காக துப்பாக்கி சுடும் பயிற்சியில் கமல்ஹாசன் ஈடுபடும் வீடியோ ஒன்றை ராஜ்கமல் தயாரிப்பு நிறுவனம் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இதில் பலவகையான துப்பாக்கிகளை கமல்ஹாசன் சுட்டு பயிற்சியில் ஈடுபடுகிறார். இது கேங்ஸ்டர் கதையா? அல்லது காவல்துறை சம்பந்தமான கதையா என்பது குறித்த அப்டேட் விரைவில் வரும் என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள்.