Skip to main content

"நான் பேசும்போது சாதி வெறியனா தெரிவேன்..." - பா.ரஞ்சித்  

Published on 09/09/2018 | Edited on 10/09/2018

இயக்குனர் பா.ரஞ்சித்தின் நீலம் ப்ரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் இயக்குனர் ராமின் உதவி இயக்குனராக பணியாற்றியவரும் எழுத்தாளருமான மாரி செல்வராஜின் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'பரியேறும் பெருமாள்'. கதிர், ஆனந்தி ஆகியோர் நடித்திருக்கும் படத்திற்கு இசையமைத்திருப்பவர் சந்தோஷ் நாராயணன். இந்தப் படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் பேசிய இயக்குனர் பா.ரஞ்சித்,

 

pa.ranjith

 

 

 



"எனக்கு முன்னோடி புரட்சியாளர் அம்பேத்கர் மட்டும்தான். அது ரொம்ப வலி மிகுந்தது. அவரது கனவு மனித மாண்பை மீட்டெடுப்பது மட்டும்தான். எல்லோரும் இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைக்கும்னு நினைச்சப்போ, 'இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைக்கும், ஆனா காலனி ஆதிக்கமெல்லாம் நடக்கும் முன்பே அடிமைப்பட்ட இந்த மக்கள் சுதந்திரம் பெற வேண்டும்'னு அவர் நினைச்சார். அவர் ஒரு முறை வலியோடு பேசியிருக்கிறார், 'நான் யாருக்காகப் போராடினேனோ அவர்களே என்னை கைவிட்டுவிட்டார்கள். நான் ரொம்ப கஷ்டப்பட்டு இந்தத் தேரை இழுத்துவந்துருக்கேன். எனக்குப் பின்னாடி வருபவர்கள் இதை முன்னே இழுக்காவிட்டாலும் பரவாயில்ல, திரும்ப பின்னாடி இழுத்துவிட்டுராதீங்க' என்று. அந்தத் தேரை என்னால் முடிந்த வரை முன்னிழுப்பேன். என்னால் எந்த வழியில் பேசமுடியுமா அப்படி பேசுவேன், திரைப்படமாக, கலையாக, நாடகமாக இப்படி.
 

pariyerum perumal



என் மேல் நிறைய விமர்சனங்கள் இருக்கு. என்னைப் பற்றி நிறைய பேர் பேசுறாங்க. அம்பேத்கர் ஒரு வார்த்தையை சொல்லிகிட்டே இருப்பார். அது, 'இக்னோர்' (ignore). அந்த விதியை நான் இங்க பயன்படுத்துவேன். அவதூறுகளை நான் இக்னோர் பண்ணுவேன். நல்ல விமர்சனங்களுக்கு பதிலை நான் யோசிச்சுகிட்டே இருப்பேன். என் படங்களில் நான் வேலை செய்த விதம் வேறயா இருந்தாலும், படம் என்ன பேசவேண்டும் என்பதில் தெளிவாக இருந்தேன். நான் பேசும்போது சாதி வெறியனா தெரியுறேன். ஒரு சாதியை எதிர்க்குறவனை சாதி வெறியனா பாக்குறதை எதிர்க்கிறதுக்கும் ஒரு மனநிலை வேணும், சப்போர்ட் வேணும். அப்படி ஒரு சப்போர்ட்டா இந்தப் படத்தை தயாரிக்கிறேன். தொடர்ந்து இதுபோலவே தயாரிப்பேன்" என்றார்.  

 

   

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பா.ரஞ்சித்தை கைது செய்வதற்கான தடையை நீட்டிக்க நீதிமன்றம் மறுப்பு!!

Published on 21/06/2019 | Edited on 21/06/2019

இயக்குனர் பா.ரஞ்சித்தை கைது செய்வதற்கான தடையை நீட்டிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை மறுப்பு தெரிவித்துள்ளது.

தஞ்சையில் நடந்த விழா ஒன்றில் பேசிய திரைப்பட இயக்குனர் பா.ரஞ்சித் ராஜராஜ சோழன் பற்றி அவதூறாக பேசியது தொடர்பாக திருப்பனந்தாள் காவல்நிலையத்தில்  வழக்குப்பதிவு செய்யப்பட்டதை அடுத்து தன்னை கைது செய்ய தடைக்கோரி இயக்குனர் ரஞ்சித் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் முன்ஜாமீன் தாக்கல் செய்திருந்தார். 

ranjith


கடந்த 19 ஆம் தேதி நடந்த விசாரணைக்கு பிறகு பா.ரஞ்சித்தின் முன்ஜாமீன் விசாரணையை ஜூன் 21 ஆம் தேதி ஒத்திவைத்திருந்தது உயர்நீதிமன்ற கிளை, மேலும் ஜூன் 21 ஆம் தேதி வரை கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளக்கூடாது என போலீசாருக்கு உத்தரவு பிறக்கப்பட்டிருந்தது. 

இந்த வழக்கில் தங்களையும் எதிர்மனுதாரராக சேர்க்கக் கோரி முத்துக்குமார் என்பவர் மனுதாக்கல் செய்திருந்தார். மனுவில் சில திருத்தங்கள் இருப்பதால் அதனை சரிசெய்ய அவகாசம் வழங்கியும் வழக்கை 21 ஆம் தேதி (இன்று) ஒத்திவைத்திருந்தது நீதிமன்றம். 

இந்நிலையில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த இந்த வழக்கில், பா.ரஞ்சித்துக்கு ஆதரவாக தன்னையும் சேர்க்கக்கோரி வழக்கறிஞர் ரஜினி என்பவர்  மனுதாக்கல் செய்திருந்தார். சட்ட ரீதியாக சேர்க்க வாய்ப்பில்லை என நீதிபதிகள் தெரிவித்தனர். இது தொடர்பாக நீதிமன்ற உத்தரவுகளை தாக்கல் செய்ய பா.ரஞ்சித் தரப்பும், வழக்கறிஞர் ரஜினி தரப்பும் கால அவகாசம் கேட்ட நிலையில் அதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி வரும் திங்கள் கிழமை வழக்கை ஒத்திவைத்தார்.

வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் அதுவரை பா.ரஞ்சித்தை கைது செய்யக்கூடாது என கோரப்பட்டது. ஆனால் அதனை  ஏற்க மறுத்த நீதிபதி வழக்கை திங்கள் கிழமைக்கு ஒத்திவைத்தார்.

 

 

 

 

Next Story

கலைஞர் பார்த்திருந்தால் பரியேறும் பெருமாள் படத்தை கொண்டாடியிருப்பார் – ஸ்டாலின் நெகிழ்ச்சி!

Published on 06/10/2018 | Edited on 06/10/2018

 

 

stalin

 

பரியேறும் பெருமாள் திரைப்படத்தை கலைஞர் பார்த்திருந்தால் பரியனை கொண்டாடியிருப்பார் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சியுடன் கூறினார்.

 

இயக்குனர் பா.ரஞ்சித் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கி வெளியாகி அனைத்து தரப்பினரின் பாராட்டுக்களை பெற்றிருக்கும் படம் பரியேறும் பெருமாள். உலக சினிமா தரத்தில் எடுக்கப்பட்டிருப்பதாக கூறப்படும் இந்தப் படம் சமீபத்தில் எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு சிறப்புக்காட்சியாக திரையிடப்பட்டு அனைவரும் பாராட்டியிருந்தனர். இந்நிலையில், திமுக தலைவர் ஸ்டாலினுக்காக பா.ரஞ்சித் சிறப்புக் காட்சியை நேற்று ஏற்பாடு செய்தார்.  

 

படத்தை திமுக தலைவர் ஸ்டாலின் தனது மனைவி துர்கா, மகன்

உதயநிதி ஸ்டாலின், மருமகள் கிருத்திகா உதயநிதி, முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா ஆகியோருடன் பார்த்து ரசித்தார். பின்னர்  தயாரிப்பாளர் பா.இரஞ்சித்தையும், இயக்குனர் மாரிசெல்வராஜையும் பாராட்டினார்.

 

அப்போது அவர்களிடம் "தலைவர் கலைஞர் இந்தப் படத்தை பார்த்திருந்தால் பரியனை வெகுவாக பாராட்டியிருப்பார். பல ஆண்டுகளுக்குப் பிறகு நான் பார்த்த சிறந்தபடம் இது. திரைப்படக் குழுவினருக்கு என் வாழ்த்துகள்" என்று கூறினார்.