சீனாவின் வுஹான் மாகாணத்தில் பிறந்து உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் தொற்றால் உலகமே அரண்டுபோயுள்ள நிலையில் கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க மத்திய அரசு 21 நாட்கள் ஊரடங்கை அறிவித்து உள்ளது.

Advertisment

gdg

இதனால் நடிகர்கள் பலரும் பொதுமக்களை வீடுகளில் இருக்கும்படி விழிப்புணர்வு வீடியோக்கள் வெளியிட்டு வருகிறார்கள்.இந்நிலையில் நடிகர் ஹிருத்திக் ரோஷன் 21 நாட்கள் ஊரடங்கு குறித்து சமூகவலைத்தளத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.அதில்...''ஊரடங்கு முடிந்த 22வது நாள் மகிழ்ச்சியான கொண்டாட்டமாக இருக்கும் என்று கற்பனை செய்ய வேண்டாம்.ஊரடங்கின் முடிவை வெற்றியாக அர்த்தம் கொள்ளக்கூடாது.கொரோனாவை முற்றிலுமாக ஒழிக்கும்வரை நாம் சமூக விலகலை தொடர வேண்டும்.இதற்கு பல மாதங்கள் வரை ஆகலாம்.தயவு செய்து இதனை அனைவரும் புரிந்து கொள்ளுங்கள்'' என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.