Skip to main content

"தன்னைப் பற்றிய கிசுகிசுக்களை இப்படித்தான் படிப்பேன்"- பிரியா பவாணி சங்கர்!

Published on 18/05/2020 | Edited on 18/05/2020

 

priya bavani shankar


செய்தி வாசிப்பாளராகத் தொடங்கி பின்னர் சின்னத்திரையில் ஹீரோயினாக அறிமுகமாகி தனக்கென ரசிகர்களைச் சம்பாதித்து அதனைத் தொடர்ந்து வெள்ளித்திரையில் முன்னணி ஹீரோயினாக வலம் வருபவர் பிரியா பவாணி சங்கர்.
 


'மான்ஸ்டர்' வெற்றியைத் தொடர்ந்து பிரியா பவாணி சங்கரும் எஸ்.ஜே. சூர்யாவும் மீண்டும் இணைந்து நடிக்கும் படம் 'பொம்மை'. மேலும் ஐந்து படங்களில் நடித்து வரும் பிரியா பவாணி சங்கர் குறித்து அடிக்கடி கிசுகிசுக்கள் வெளியாகி வருகின்றன.

சமீபத்தில்கூட, பிரியாவும் அவரது காதலரும் பிரிந்துவிட்டதாகச் செய்திகள் பரவின. இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராமில் பிரியா பவாணி சங்கர் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். செல்ஃபோனை பார்த்து, சிரித்தபடி அவர் வெளியிட்டிருக்கும் போட்டோவுடன், ''என்னைப் பற்றிய கிசுகிசுக்களைப் படிக்கும் போது இப்படிதான் இருக்கும்'' எனப் பதிவிட்டுள்ளார். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரம்மாண்ட செட்டில் பிரியா பவானி சங்கருடன் நடனமாடிய ராகவா லாரன்ஸ்!

Published on 19/10/2021 | Edited on 19/10/2021

 

bfhdfhfd

 

‘பொல்லாதவன்’, ‘ஆடுகளம்’, ‘ஜிகர்தண்டா’ போன்ற வெற்றி படங்களைத் தயாரித்த 5 ஸ்டார் கிரியேஷன்ஸ் எஸ். கதிரேசன், தற்போது ராகவா லாரன்ஸ் - பிரியா பவானி சங்கர் நடிப்பில் உருவாகும் ‘ருத்ரன்’ படத்தைப் பிரம்மாண்டமாக தயாரித்து இயக்குகிறார். கே.பி. திருமாறன் கதை, திரைக்கதையில் உருவாகும் ‘ருத்ரன்’ படத்திற்குப் பிரபல இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். பிரபல ஒளிப்பதிவாளர் ஆர்.டி. ராஜசேகர் ஒளிப்பதிவைக் கவனிக்கிறார். நாசர், பூர்ணிமா பாக்யராஜ் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கும் 'ருத்ரன்’ படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜனவரி மாதம் பூஜையுடன் துவங்கியது. 

 

விறுவிறுப்பாக நடைபெற்றுவந்த இந்தப் படப்பிடிப்பு, கரோனா இரண்டாம் அலை காரணமாக ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பிறகு மீண்டும் 'ருத்ரன்' படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு துவங்கி நடைபெற்றுவருகிறது. இதில் 'வீரத்திருமகன்' படத்தில் இடம்பெற்ற பிரபல பாடலான ‘பாடாத பாட்டெல்லாம்...’ பாடலை ரீமிக்ஸ் செய்துள்ளனர். ஒரு கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட பிரம்மாண்ட செட்டில் இப்பாடலின் படப்பிடிப்பு எடுக்கப்பட்டுள்ளது. இப்பாடலுக்கு நடன இயக்குநராக ஶ்ரீதர் பணியாற்றியுள்ளார். ‘ருத்ரன்’ படத்தின் படப்பிடிப்பு தற்போது மும்முரமாக நடைபெற்றுவருகிறது.

 

 

Next Story

பிரியா பவானி சங்கருடன் ஜோடி சேரும் அசோக் செல்வன்....

Published on 14/12/2020 | Edited on 14/12/2020

 

ashok selvan

 


‘ஓ மை கடவுளே’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அசோக் செல்வன் நடிக்க இருக்கும் அடுத்த படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

 

பிரபலத் தயாரிப்பாளரும் விநியோகஸ்தருமான ஆர்.ரவீந்திரனின் 'ட்ரைடண்ட் ஆர்ட்ஸ்' இப்படத்தை தயாரிக்கிறது. 

 

இந்தப் படத்தில் அசோக் செல்வனுக்கு ஜோடியாக, பிரியா பவானி சங்கர் நடிக்கிறார்.

 

'Production No.8' எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை, சுமந்த் ராதாகிருஷ்ணன் இயக்குகிறார். நாசர், முனிஸ்காந்த், ரவி மரியா, கே.பி.ஒய்.யோகி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

 

‘அடி கபயாரே கூட்டமணி’ என்னும் மலையாளப் படத்தின் ரீமேக், இப்படம் என்று தகவல் வெளியாகியுள்ளது.