நடிகர் கமல்ஹாசனுக்கு கடந்த சில நாட்களாக இருமல், சளி இருந்ததால் போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு கரோனாபரிசோதனை செய்யப்பட்டது. அதில் நடிகர் கமலுக்கு கரோனாதொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து, மருத்துவமனையில் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டதாகநடிகர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து, நடிகர் ரஜினிகாந்த் கமல்ஹாசனைதொலைபேசியில் தொடர்புகொண்டு நலம் விசாரித்தார்.
இந்நிலையில், நடிகர்கமல்ஹாசனுக்கு கரோனாசிகிச்சை நடைபெற்றுவருவதாகவும், அவரது உடல்நிலைசீராக இருப்பதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தற்போது அறிக்கைவெளியிட்டுள்ளது.