Skip to main content

"பதில் சொல்லாம போற ஆளு நான் இல்லை" - சர்ச்சை சம்பவம் குறித்த கேள்விக்கு ஹிப்ஹாப் ஆதி

Published on 29/05/2023 | Edited on 29/05/2023

 

hiphop aadhi recent press meet

 

ஹிப்ஹாப் ஆதி நடிப்பில் ஏ.ஆர்.கே.சரவன் இயக்கத்தில் சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் 'வீரன்'. கதாநாயகியாக அதிரா ராஜ் நடிக்க வில்லனாக வினய் ராய் நடித்துள்ளார். மேலும் முனீஷ்காந்த், காளி வெங்கட் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இசை பணிகளை ஹிப்ஹாப் ஆதியே கவனித்துள்ளார். இப்படம் வருகிற ஜூன் 2ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதையொட்டி படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. நிகழ்ச்சியில் படக்குழுவினர் பலரும் பேசினர். 

 

பின்பு செய்தியாளர்களைச் சந்தித்த ஹிப்ஹாப் ஆதி செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார். அவர் பேசுகையில், "குழந்தைகளுக்கு பிடித்த படமாக இப்படம் இருக்கும். முகச்சுழிவு காட்சிகள் கிடையாது. அதனால் பெற்றோர் தங்களது குழந்தைகளை படம் பார்க்க அழைத்து வரலாம்" என்றார். 

 

இதனிடையே செய்தியாளர் ஒருவர், "3 வருடம் கழித்து திரைத்துறைக்கு வந்துள்ளீர்கள். சமீபத்தில் டாக்டர் பட்டம் வாங்கினீர்கள். ஆனால் படத்தில் அதை குறிப்பிடவில்லை. உங்களுக்கும் இயக்குநருக்கும் ஏதாவது பிரச்சனையா?" எனக் கேட்டார். அதற்கு பதிலளித்த ஹிப்ஹாப் ஆதி, "இந்த மாதிரி சர்ச்சையான கேள்விகள் தயவு செய்து கேட்காதீர்கள். அப்படி ஒன்றும் இல்லை" என்றார். 

 

பின்பு மல்யுத்த வீராங்கனைகள் போராட்டம் குறித்தான கேள்விக்கு, "இந்நிகழ்ச்சி வீரன் தொடர்பான நிகழ்ச்சி என்பதால் படம் குறித்து மட்டும் பேசுங்கள் என்று இப்படத்தின் தயாரிப்பாளர் என்னை கேட்டுக்கொண்டார். மற்ற விஷயங்களை பிறகு பண்ணுமாறும் சொன்னார். அவருக்கு மரியாதை அளிக்கும் விதமாக படம் தொடர்பான கேள்விகளுக்கு மட்டும் பதிலளிக்கிறேன். இன்னொரு முறை இன்னொரு சந்திப்பில் தொடர்ந்து மற்ற விஷயங்கள் பற்றி பேசலாம். அப்போது என்ன கேள்வி வேண்டுமானாலும் நீங்க கேட்கலாம். இது போன்ற கேள்விகளுக்கு பதில் சொல்லாம போற ஆளு நான் இல்லை" எனப் பதிலளித்தார்.  

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

தமிழில் ஒலித்த குரல் - மகிழ்ச்சியில் ஹிப் ஹாப் ஆதி

Published on 12/10/2023 | Edited on 12/10/2023

 

hiphop adhi about his travelling flight announced information in tamil

 

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமான ஆதி, தொடர்ந்து மீசைய முறுக்கு, நட்பே துணை உள்ளிட்ட படங்களில் கதாநாயகனாக நடித்து பிரபலமானார். கடைசியாக இவர் நடிப்பில் 'வீரன்' படம் வெளியானது. இப்போது ஐசரி கணேஷ் தயாரிப்பில் கார்த்திக் வேணுகோபாலன் இயக்கும் 'பி.டி சார்' படத்தில் நடிக்கிறார். 

 

இந்த நிலையில் தனது சமூக வலைத்தளத்தில் விமானத்தில் பயணம் மேற்கொண்ட போது தமிழில் ஒலித்த குரலை கண்டு மகிழ்ச்சியடைந்ததாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், "சென்னையில் இருந்து திருச்சி செல்லும் விமானத்தில்... என குரல் ஒலிக்க ஆரம்பித்ததும், அட தமிழ்ல அறிவிப்பு பண்றாங்களேப்பா என ஒரு சின்ன சந்தோஷம். 'வலப்புறம் 2000 ஆண்டுகள் பழைய பொறியியல் அதிசயமான சோழன் கட்டிய கல்லணையைக் காணலாம். இடப்புறம் கொள்ளிடத்தைக் காணலாம்...' என ஒவ்வொரு அறிவிப்பிலும் பெருமையோடு தமிழில் அறிவித்த அந்தக் குரலின் சொந்தக்காரனை காணவேண்டும் என ஆசை. 

 

சாந்தமான முகத்தோடு வந்த பைலட் பிரியன் விக்னேஷிடம் 'அருமை நண்பா' என மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டேன். இதில் சிறப்பு என்னவெனில், பிரியன் ஆங்கிலத்தில் அறிவிக்கும்போது அவர் சொல்லச் சொல்ல, இரண்டு வெளிநாட்டு பயணிகள் எட்டி ஆச்சரியத்தோடு கல்லணையை பார்க்க ஜன்னல் அருகே முண்டியடித்தனர்" என குறிப்பிட்டு அது சம்பந்தமான புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். 

 

 


 

Next Story

"கவர்னருக்கு மாற்றில்லை" - டாக்டர் பட்டம் வாங்கிய ஆதி

Published on 24/08/2023 | Edited on 24/08/2023

 

hip hop aadhi about governer rn ravi

 

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானார் ஆதி. தொடர்ந்து மீசைய முறுக்கு, நட்பே துணை உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார். கடைசியாக இவர் நடிப்பில் 'வீரன்' படம் வெளியானது. இப்போது ஐசரி கணேஷ் தயாரிப்பில் கார்த்திக் வேணுகோபாலன் இயக்கும் 'பி.டி சார்' படத்தில் நடித்து வருகிறார். 

 

கடந்த மார்ச் அன்று நடந்த ஒரு நிகழ்ச்சியில் தான் டாக்டர் பட்டம் முடித்துள்ளதாக தெரிவித்திருந்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், "நான் பி.ஹெச்டி முடித்துள்ளேன். ஆனால் படிச்சு வாங்கின டாக்டர் பட்டம். அதனால் டாக்டர் ஹிப் ஹாப் தமிழா என்றே அழைக்கலாம். இசைத் துறையில் (Music Entrepreneurship) முடித்துள்ளேன். எனக்கு தெரிந்து இந்தியாவில் இந்த துறையில் ஆராய்ச்சி செய்து டாக்டர் பட்டம் பெற்றுள்ளது இதுதான் முதல் முறை. இதை முடிக்க கிட்டத்தட்ட 6 ஆண்டுகள் ஆகிவிட்டது" என்றார். 

 

இந்நிலையில் கோவை பாரதியார் அரசுப் பல்கலைக்கழகத்தில் ஆளுநர் ஆர்.என். ரவி கையில் இசைத் துறையில் (Music Entrepreneurship) என்ற பிரிவில் டாக்டர் பட்டம் வாங்கியுள்ளார் ஆதி. பின்பு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "5 வருஷம் ஆராய்ச்சி செய்தேன். கடந்த வருஷம் முடித்தேன். இந்த வருஷம் வாங்கிவிட்டேன். நடித்துக்கொண்டே ஆராய்ச்சி செய்ததால் கொஞ்சம் கடினமாக இருந்தது. முனைவர் பட்டம் கவர்னர் கையில் தான் வாங்க வேண்டும். வேறெதுவும் மாற்றில்லை. சந்திரயான் 3 வெற்றி இந்தியாவுக்கே பெருமை" என்றார்.