Skip to main content

'ஹிப் ஹாப் தமிழா' என்பது நான் மட்டுமல்ல...' - 'ஹிப் ஹாப் தமிழா’ ஆதி

Published on 19/02/2020 | Edited on 19/02/2020

அவ்னி மூவிஸ் சார்பில் இயக்குநர் சுந்தர்.சி தயாரிப்பில் கடந்த வெள்ளியன்று ‘நான் சிரித்தால்’ படம் வெளியானது. இப்படத்தில் ‘ஹிப் ஹாப் தமிழா’ ஆதி நாயகனாகவும், ஐஸ்வர்யா மேனன் நாயகியாகவும் நடித்திருந்தார்கள். இது திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் இப்படத்தின் வெற்றி விழா நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட படத்தின் நாயகன் 'ஹிப் ஹாப் தமிழா’ ஆதி பேசும்போது...

zc

 

''நான் சிரித்தால்' படத்தின் வெற்றி அன்பால் மட்டுமே கிடைத்திருக்கிறது. ஒவ்வொரு முறையும் எனக்கு எது சரி, எது தவறு என்று சுட்டிக் காட்டி ஊக்குவிக்கும் பத்திரிகையாளர்களுக்கு நன்றி. இயக்குநர் சுந்தர்.சியுடனான உறவு எப்படி வளர்ந்தது என்று தெரியவில்லை. அவர் என்மீது வைத்த நம்பிக்கையை நான் காப்பாற்றியிருக்கிறேன் என்பதில் மகிழ்ச்சி. நான் பள்ளியில் படிக்கும்போது 'ராப்' பாடல் தான் இளைஞர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றிருந்தது. ஆனால், இப்போது எனது ‘ஹிப் ஹாப்’ பாடலையும் ரசிக்கிறார்கள். என்னைப் போலவே சுதந்திரமான கலைஞர்களை ஊக்குவிக்கும் பொருட்டு அவர்களை எங்களது ஒவ்வொரு படங்களிலும் அறிமுகப்படுத்தி வாய்ப்பு வழங்கி வருகிறோம். அப்படிதான் யூடியூப்-ல் ராணாவைப் பார்த்து அழைத்து வந்தோம். அவர் மட்டுமல்லாமல் அவருடைய நண்பர்களையும் அழைத்து வந்தோம். அவர்கள் ஒவ்வொருவருக்கும் இயக்குநராகும் திறமையுள்ளது. அதேபோல் ‘எரும சாணி’ விஜய்யையும் சென்னையில் வாய்ப்பு நிறைய இருக்கிறது வா என்று அழைத்தேன். இன்று ஒரு படத்தில் இயக்குநராக ஒப்பந்தமாகியிருக்கிறார். இது எதிர்காலத்திலும் தொடரும்.

 

 

கே.எஸ்.ரவிக்குமார் திட்டுவதாக இருந்தாலும், பாராட்டுவதாக இருந்தாலும் மனதில் இருப்பதைக் நேராக கூறிவிடுவார். இப்படத்தில் அவர் தூணாக இருந்தார். படத்தில் இரண்டாவது பாதியை வெற்றிபெற செய்தது கே.எஸ்.ரவிக்குமார், ரவிமரியா, ராணா ஆகியோர் தான். நாயகன், நாயகி போல எனக்கும், என் அப்பாவாக நடித்த ‘படவா’ கோபிக்கு கெமிஸ்ரி பேசும்படியாக வந்திருக்கிறது. ராஜ்மோகனின் தமிழ் எனக்கு மிகவும் பிடிக்கும். அருமையாக தொகுத்து வழங்கியிருக்கிறார். கதிர் கடின உழைப்பாளி. அவருடைய திறமைக்கு விரைவிலேயே மிகப்பெரிய உயரத்திற்கு செல்வார். மேலும், இப்படத்திற்காக பணியாற்றிய ஒவ்வொரு கலைஞர்களுக்கும் நன்றி. ‘ஹிப் ஹாப் தமிழா’ என்பது நான் மட்டுமல்ல. நானும் எனது நண்பன் ஜீவா இருவரும். ஆனால், அவரைப் பற்றி பேசுவதை அவர் விரும்பமாட்டார். ‘ஹிப் ஹாப் தமிழா’வின் வெற்றிக்கு ஜீவா தான் முதுகெலும்பு. ஐஸ்வர்யா மேனன் ‘பிரேக் அப்’ பாடலில் காலணி கூட இல்லாமல் சிறப்பாக நடனமாடினார். அதேபோல், நேரம் தவறாமைக்கு ஐஸ்வர்யா மேனன் சிறந்த உதாரணம். எனக்கு பல கனவுகள் இருக்கிறது. அதை ஒவ்வொன்றாக நனவாக்கி வருகிறேன். என்னுடன் பணியாற்றும் அனைவரின் கனவும் நனவானதில் மகிழ்ச்சி'' என்றார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

'நீண்ட நாட்களுக்குப் பிறகு திரையரங்கில் பூ வாசனை வருகிறது' - குஷ்பு 

Published on 19/02/2020 | Edited on 19/02/2020

அவ்னி மூவிஸ் சார்பில் இயக்குநர் சுந்தர்.சி தயாரிப்பில் கடந்த வெள்ளியன்று ‘நான் சிரித்தால்’ படம் வெளியானது. இப்படத்தில் ‘ஹிப் ஹாப் தமிழா’ ஆதி நாயகனாகவும், ஐஸ்வர்யா மேனன் நாயகியாகவும் நடித்திருந்தார்கள். இது திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் இப்படத்தின் வெற்றி விழா நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட படத்தின் தயாரிப்பாளர் நடிகை குஷ்பூ பேசும்போது...

 

ff

 

''இது போன்ற சினிமா மேடையில் பேசி பல வருடங்கள் ஆகிறது. ‘அவ்னி மூவிஸ்’ என்பது எனக்கும் சுந்தர்.சிக்கும் கனவு. ஏனென்றால், எங்கள் இருவருக்கும் தெரிந்தது சினிமா மட்டும்தான். அவ்னி மூவிஸின் வெற்றிக்கு முழுக்க முழுக்க காரணம் எனது கணவர் சுந்தர்.சி மட்டும்தான். நாங்கள் இருவரும் சினிமாவை நேசிக்கிறோம். எங்கள் படங்கள் மட்டுமல்லாமல் அனைவரின் படங்களும் வெற்றிபெற வேண்டும் என்று நினைப்போம். ஆதி எங்கள் குடும்பத்திற்குள் வந்தது எனது சிறிய மகளால் தான். அவள் தான் ‘ஹிப் ஹாப் தமிழா’ ஆதியை அறிமுகப்படுத்தினாள். எனக்கு சக்களத்தி ஆதி தான். எனது கணவரும், ஆதியும் பேச ஆரம்பித்தால் நேரம் காலம் பார்க்காமல், இரவு 2 மணி ஆனாலும் பேசிக் கொண்டேயிருப்பார்கள்.

 

 

கே.எஸ்.ரவிக்குமாருடன் நீண்ட நாள் நட்பு இருக்கிறது. இப்படத்தின் வெற்றி ஒவ்வொருவரும் அடுத்தவர் மேல் வைத்திருக்கும் நம்பிக்கை. அந்த நம்பிக்கை வீண் போகாமல் அனைவரும் காப்பாற்றுகிறார்கள். இன்றைய காலத்தில் நகைச்சுவையில் பரபரப்பாக நடித்துக் கொண்டிருப்பவர் யோகிபாபு. ஆனால், நாங்கள் அழைத்ததும் உடனே ஒப்புக் கொண்டார். எங்களுக்கு கருத்து, கஷ்டங்கள் ஆகியவற்றை சொல்லும் படம் எடுப்பதைவிட அனைவரையும் மகிழ்விக்கும் படமாக எடுக்க வேண்டும் என்ற உறுதியோடு இருக்கிறோம். அதன்பலனாக, விநியோகஸ்தர்கள் நீண்ட நாட்களுக்குப் பிறகு திரையரங்கில் பூ வாசனை வருகிறது என்று கூறுகிறார்கள். குடும்பத்துடன் திரையரங்கிற்கு வருவது அதிகரித்திருப்பதில் மகிழ்ச்சி. என்னுடைய வெற்றிக்கு எனது பின்னால் பக்கபலமாக இருக்கும் எனது கணவர் சுந்தர்.சி. தான் காரணம்'' என்றார்.

Next Story

ஷூட்டில் ட்ரைலரை பார்த்து பாராட்டிய  விஜய்!

Published on 08/01/2020 | Edited on 08/01/2020

ஆம்பள படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகி, பின்னர் மீசையை முறுக்கு என்னும் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் ஹிப்ஹாப் ஆதி. இந்த படம் கொடுத்த வெற்றியால் மீசை முறுக்கு படத்தை தயாரித்த சுந்தர்.சி தயாரிப்பில் மீண்டும் இரண்டாவதாக நட்பே துணை என்னும் படத்தில் ஹீரோவாக நடித்தார். 
 

thalapathy 64

 

 

இப்படமும் வெற்றி அடைய மூன்றாவது முறையாக சுந்தர்.சி தயாரிப்பில் ஹிப்ஹாப் ஆதி நடிக்கும் படம்தான் ‘நான் சிரித்தால்’. இந்த படத்தை இராணா இயக்குகிறார். இதில் ஆதிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா மேனன் நடிக்கின்றார். சமீபத்தில் இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த படம் கெக்கப் பெக்க என்னும் குறும்படத்தை தழுவி எடுக்கப்பட இருப்பதாக சொல்லப்படுகிறது. இதையும் இராணாதான் இயக்கியிருந்தார். 

எட்டு தொட்டாக்கள், ரங்கூன், சர்கார், நான் சிரித்தால் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் லல்லு. இவர் தற்போது விஜய்யுடன் மாஸ்டர் படத்திலும் நடித்து வருகிறார். இவர் ஹிப்ஹாப் ஆதியுடன் நடித்துள்ள நான் சிரித்தால் படத்தின் ட்ரைலரை விஜய்க்கு மாஸ்டர் ஷூட்டிங்கில் காண்பித்துள்ளார். 

அப்போது அதை பார்த்த நடிகர் விஜய், “நான் சமீபத்தில் ரொம்ப என்ஜாய் பண்ணி பார்த்த ட்ரெய்லர் 'நான் சிரித்தால்'. ரொம்பப் பிடிச்சது. என்னோட வாழ்த்தை படக்குழுவிடனரிடம் சொல்லுங்க” என்று லல்லுவிடம் கூறியுள்ளார். 

மேலும் இந்த படத்தில் மெர்சல் படத்தில் விஜய் அழுகும் காட்சியை பார்த்து ஹிப்ஹாப் ஆதி சிரிப்பதுபோல ஒரு காட்சி இடம்பெறும். ஆதிக்கு இதில் நெர்வஸ் லாஃபர் என்னும் நோயால் பாதிக்கப்பட்டிருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.