ராஜமௌலி எடுத்துகொண்டிருக்கும் படத்தை பற்றியான அதிகாரப்பூர்வ தகவல்கள் நேற்று வெளியாகின. பாகுபலி-2 க்கு பின்னர் ராஜமௌலி எடுக்கும் மிகப்பெரிய மல்டி ஸ்டாரர் படம் இது என்பதால் மேலும் படத்தின் எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது.

ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர் மட்டுமல்லாமல் அலியா பட், அஜய் தேவ்கன், சமுத்திரக்கனி ஆகியோரும் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். படத்தின் கதை 1920 ஆண்டு கால கட்டத்தில் நடக்கும் இரண்டு விடுதலை வீரர்கள் பற்றியான கதை இது என்றும் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே பாகுபலி படத்தை 250 கோடி பொருட்செலவில் எடுத்தவர் இந்த படத்தை 350 முதல் 400 கோடி செலவில் எடுக்க இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. ஹாலிவுட் சினிமாக்களில் செலவிடப்படும் அளவில் தற்போது இந்திய சினிமாக்களிலும் செலவு செய்யப்பட்டு படங்கள் உருவாகுகின்றன. இந்தியாவின் மிகப்பெரிய பட்ஜெட் படங்களாக தற்போது இருப்பவை என்ன என்ன படங்கள் என பார்ப்போம்...
2.0 (543 கோடி)
ஆர் ஆர் ஆர் (350-400 கோடி)
தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான் (310 கோடி)
சாஹோ (300 கோடி)
பாகுபலி-2 (250 கோடி)
பத்மாவத் (215 கோடி)
டைகர் ஜிந்தா ஹய் (210 கோடி)
சைரா நரஷிம்ம ரெட்டி (200 கோடி)
ஜீரோ (200 கோடி)
ரேஸ் 3 (185 கோடி)
பாகுபலி/ பிரேம் ரதன் தன் பாயோ (180 கோடி)