Skip to main content

'நெஞ்சம் மறப்பதில்லை' படத்திற்கு மீண்டும் தடை... அதிர்ச்சியில் ரசிகர்கள்! 

Published on 02/03/2021 | Edited on 02/03/2021

 

selvaraghavan

 

இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில், எஸ்.ஜே.சூர்யா, ரெஜினா கெசன்ட்ரா, நந்திதா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'நெஞ்சம் மறப்பதில்லை'. இப்படத்தின் பணிகள் சில ஆண்டுகளுக்கு முன்னரே நிறைவடைந்தும், வேறு சில காரணங்களால் ரிலீஸ் செய்யப்படாமல் இருந்தது.

 

இந்த நிலையில், மார்ச் 5-ஆம் தேதி நெஞ்சம் மறப்பதில்லை படம் வெளியாகுமென கடந்த மாதம் படக்குழு அறிவித்தது. இவ்வறிவிப்பு படத்தை திரையரங்கில் காணும் ஆவலோடு இருந்த செல்வராகவன் ரசிகர்களை உற்சாகமாடையச் செய்தது. மேலும், பட வெளியீட்டிற்கான முன்னோட்டமாகப் படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு காட்சியும் நேற்று வெளியிடப்பட்டது. 

 

ad

 

இந்த நிலையில், திடீர் திருப்பமாக நெஞ்சம் மறப்பதில்லை படத்தின் வெளியீட்டில் புதிய சிக்கல் எழுந்துள்ளது. நெஞ்சம் மறப்பதில்லை படத்தின் தயாரிப்பு நிறுவனமான எஸ்கேப் ஆர்டிஸ்ட்ஸ் நிறுவனம், தங்களிடம் 1.24 கோடி ரூபாய் கடன் வைத்துள்ளதாக ரேடியன்ஸ் வீடியோ நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளது. இது குறித்து ரேடியன்ஸ் வீடியோ நிறுவனம் அளித்த புகார் மனுவில், 'எனை நோக்கிப் பாயும் தோட்டா படத்திற்காக எஸ்கேப் ஆர்டிஸ்ட்ஸ் நிறுவனம், 2.42 கோடி ரூபாய் கடன் கேட்டது. படத்தை வெளியிடுவதற்கு முன்பு 1.75 கோடி ரூபாயைத் திருப்பிச் செலுத்தியது. மீதத் தொகையைத் திருப்பிச் செலுத்தாமல் நெஞ்சம் மறப்பதில்லை படத்தை வெளியிடவுள்ளார்கள். இதனால் படத்தின் வெளியீட்டிற்குத் தடை விதிக்க வேண்டும்' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், நெஞ்சம் மறப்பதில்லை பட வெளியீட்டிற்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால், படத்தை ஆவலுடன் எதிர்பார்த்திருந்த ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“செல்வராகவனை இயக்குவேன் என நினைத்ததில்லை” - தனுஷ்

Published on 22/02/2024 | Edited on 22/02/2024
selvaraghavan look from dhanush 50 raayan movie

கேப்டன் மில்லர் படத்தைத் தொடர்ந்து தற்போது தனது 50 ஆவது படப் பணிகளை கவனித்து வருகிறார் தனுஷ். அவரே இயக்கி நடிக்கும் இப்படத்தின் முழு படப்பிடிப்பும் முடிந்துள்ளது. படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. அதில் தனுஷ், காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷன் உள்ளிட்டோர் இடம்பெற்றிருந்தனர். ராயன் எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். இந்தாண்டிற்குள் இப்படம் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக இப்படத்தில் துஷாரா விஜயன், எஸ்.ஜே. சூர்யா, அபர்ணா பாலமுரளி, செல்வராகவன், வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்ட பலர் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியானது. மேலும் வட சென்னையை மையமாக வைத்து ஒரு கேங்ஸ்டர் ஜானரில் இப்படம் உருவாகி வருவதாகக் கூறப்பட்டது. இதையடுத்து சில தினங்களுக்கு முன்பு செல்வராகவன் இப்படத்தில் நடித்திருப்பதை எக்ஸ் தளம் வாயிலாக அவர் உறுதிப்படுத்தியிருந்தார். மேலும் இப்படம் தனுஷின் கனவு படம் என குறிப்பிட்டிருந்தார்.

இதையடுத்து எஸ்.ஜே. சூர்யா நடித்துள்ளதைப் படக்குழு அவரது கதாபாத்திர லுக் போஸ்டரை வெளியிட்டு உறுதி செய்தது. இந்த நிலையில் தற்போது செல்வராகவன் கதாபாத்திர போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. புது லுக்கில் செல்வராகவன் இடம்பெற்றிருக்கிறார். இதுவரையில் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் பல படங்கள் நடித்த நிலையில் இப்படத்தில் செல்வராகவனை தனுஷ் இயக்கியுள்ளார். செல்வராகவனை இயக்குவது குறித்து தனுஷ் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “உங்களை ஒரு நாள் இயக்குவேன் என்று நினைத்ததில்லை சார்” என குறிப்பிட்டுள்ளார்.  

Next Story

ராயன் - விளக்கம் கொடுத்து சஸ்பென்ஸ் உடைத்த செல்வராகவன்

Published on 21/02/2024 | Edited on 21/02/2024
dhanush raayan update by selvaraghavan

கேப்டன் மில்லர் படத்தைத் தொடர்ந்து தற்போது தனது 50 ஆவது படப் பணிகளை கவனித்து வருகிறார் தனுஷ். அவரே இயக்கி நடிக்கும் இப்படத்தின் முழு படப்பிடிப்பும் முடிந்துள்ளது. படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. அதில் தனுஷ், காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷன் உள்ளிட்டோர் இடம்பெற்றிருந்தனர். ராயன் என தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இந்தாண்டிற்குள் இப்படம் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சமூக வலைத்தளங்களில் கடந்த சில தினங்களாக, அஜித்தை வைத்து செல்வராகவன் இயக்கவிருந்த காசிமேடு பட கதையைத் தான் தனுஷ், தற்போது ராயன் என்ற தலைப்பில் சிறு மாற்றங்கள் செய்து இயக்கி வருவதாக செய்தி உலா வந்து கொண்டிருக்கிறது. இந்த செய்திக்கு விளக்கம் அளிக்கும் வகையில் செல்வராகவன் அவரது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், “நண்பர்களே, ராயன் படத்திற்கு நான் ஸ்கிரிப்ட் எழுதியதாக செய்திகள் வந்துள்ளன. ராயன் பட ஸ்கிரிப்ட் அல்லது ஸ்கிரிப்ட் பணிகளிலும் எனக்கு எந்த தொடர்பும் இல்லை என்பதை தெளிவுபடுத்துகிறேன். ராயன் படம் தனுஷின் கனவு ஸ்கிரிப்ட், அதனால் அவரது படமாக எடுத்துள்ளார். இந்த படத்தில் நான் நடிகனாக மட்டுமே இருந்துள்ளேன்” என்றார். 

முன்னதாக இப்படத்தில் துஷாரா விஜயன், எஸ்.ஜே. சூர்யா, அபர்ணா பாலமுரளி, செல்வராகவன், வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்ட பலர் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியானது. இந்த சூழலில் செல்வராகவன் இப்படத்தில் நடிப்பதை சொல்லி உறுதிப்படுத்தியுள்ளார்.