Advertisment

பாலியல் புகார்; நிவின் பாலி மீது வழக்குப் பதிவு

hema committee report nivin pauly misbehaviored to women

மலையாளத் திரையுலகில் பாலியல் துன்புறுத்தல் பெண்களுக்கு தொடர்ந்து நடந்து வருவதாக சமீபத்தில் வெளியான ஹேமா கமிட்டி ஆய்வறிக்கை இந்தியத் திரையுலகை உலுக்கியுள்ளது. பிரபல நடிகைக்கு கடந்த 2017ஆம் ஆண்டு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவத்தையடுத்து, படப்பிடிப்பில் நடிகைகள் மற்றும் பணி பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி ஹேமா தலைமையில் விசாரணை குழுவை அமைத்தது கேரள அரசு. இக்குழு கடந்த 2019ஆம் ஆண்டு அம்மாநில முதல்வரிடம் ஆய்வறிக்கையை தாக்கல் செய்தது. ஆனால் அந்த ஆய்வறிக்கை பொதுவெளியில் வெளியிடப்படாமல் இருந்த நிலையில், தகவல் உரிமை ஆணையத்தின் தலையீட்டால் சமீபத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

Advertisment

இதையடுத்து பாலியல் துன்புறுத்தல் குறித்து பல நடிகைகள் புகாரளிக்க, சம்பந்தப்பட்ட நடிகர்கள் மீது வழக்குப்பதிவும் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில், நடிகை ஸ்ரீலேகா மித்ரா இயக்குநர் ரஞ்சித் மீதும் நடிகை ரேவதி சம்பத் நடிகர்கள் சித்திக் மற்றும் ரியாஸ் கான் மீதும் குற்றம் சாட்டினார். நடிகை மினுமுனீர் எம்.எல்.ஏ முகேஷ், ஜெயசூர்யா உள்ளிட்ட 6 பேர் மீது குற்றம் சாட்டினார். குற்றம் சாட்டப்பட்ட ரஞ்சித், சித்திக், ரியாஸ் கான் ஆகியோர் குற்றத்தை மறுத்தனர். இதில் ரஞ்சித், சித்திக் தங்கள் வகிக்கும் திரைத்துறை தொடர்பான பதவிலிருந்தும் விலகியிருந்தனர். மேற்கண்ட நடிகர்கள் மீதும் ஏற்கனவே வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில், எம்.எல்.ஏ முகேஷ் கேரள அரசின் குழுவில் இருந்து நீக்கப்பட்டார்.

Advertisment

இதனிடையே பாலியல் ரீதியான குற்றச்சாட்டுகளில் நடிகர் சங்கத்தினர் சிக்கி வரும் நிலையில், அதற்கு தார்மீக பொறுப்பேற்று நடிகர் சங்கத் தலைவர் மோகன்லால் உட்பட 17 பேர் பதவி விலகியிருந்தனர். பாலியல் ரீதியான குற்றங்கள் தொடர்பாக கேரள அரசு சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரித்து வரும் நிலையில், ராதிகா கேரவனில் ரகசிய கேமரா வைத்ததாக பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார். இது குறித்து ராதிகாவிடம் தொலைப்பேசி வாயிலாக சிறப்பு புலனாய்வு குழு விசாரணை மேற்கொண்டனர். ஹேமா விசாரணை குழு ஆய்வறிக்கையின் முழு வடிவத்தை வழங்க வேண்டும் என தேசிய மகளிர் ஆணையம் சமீபத்தில் ஆணை பிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து நடிகர் பாபுராஜ் மீது துணை நடிகை ஒருவர் பாலியல் புகார் தெரிவித்தார். இது தொடர்பாக இடுக்கி அடிமாலி காவல் நிலையத்தில் அவர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தொடர்ந்து முன்னணி நடிகர்கள் பாலியல் புகாரில் சிக்கியுள்ள நிலையில் தற்போது பிரபல நடிகர் நிவின் பாலியும் சிக்கியுள்ளார். வெளிநாட்டில் பட வாய்ப்பு பெற்று தருவதாகக் கூறி நேரியமங்கலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் புகார் கூறியுள்ளார். இது தொடர்பாக எர்ணாகுளத்தில் உள்ள ஒரு காவல் நிலையத்தில் நிவின் பாலி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து நிவின் பாலி மீதான வழக்கு விசாரணை சிறப்பு புலனாய்வுக் குழுவுக்கு மாற்றப்பட்டுள்ளது.

தமிழில் நேரம் படம் மூலம் அறிமுகமான நிவின் பாலி பின்பு ரிச்சி என்ற படத்தில் நடித்திருந்தார். இதையடுத்து ராம் இயக்கத்தில் ‘ஏழு கடல் ஏழு மலை’ என்ற தலைப்பில் ஒரு படம் நடித்துள்ளார். இப்படம் பல்வேறு சர்வதேச விழாக்களில் திரையிடப்பட்ட நிலையில் இன்னும் திரைக்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

mollywood Kerala
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe